search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maxwell"

    • என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 30 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஐதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளனர்.

    இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பெங்களூரு அணி வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி தான் மோதிய 7 ஆட்டத்தில் 6 தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினாமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

    • இந்த தொடரில் ஆறு இன்னிங்சில் 3 முறை டக்அவுட்.
    • ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பார்ம் இன்றி தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இன்று நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். அதில் மூன்று முறை டக்அவுட்டாகியுள்ளார்.

    சிஎஸ்கே-வுக்கு எதிரான முதல் போட்டியிலும், எல்எஸ்ஜி-க்கு எதிரான 4-வது போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். மொத்தம் ஆறு இன்னிங்சில் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 5.4 ஆகும். கேகேஆர் அணிக்கெதிராக மட்டுமே 28 ரன்கள் அடித்துள்ளார்.

    மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஒட்டுமொத்தமாக 17-வது டக்அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட்டாகிய பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • மயங்க் அகர்வால் பந்தில் மேக்ஸ்வெல் டக்அவுட் ஆனார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன பேட்ஸ்மேன் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. ஆனால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அபாரமாக பந்து வீச ஆர்.சி.பி. அணி முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீனை வீழ்த்தி அசத்தினார். அந்த அணியால் 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் ஆர்.சி.பி. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் தனது சொந்த மைதானத்தில் அந்த அணியின் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

    அந்த அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மேக்ஸ்வெல் 16 முறை டக்அவுட் ஆகியுள்ளார். மேலும் அதிக முறை டக்அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

    முன்னதாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 17 முறை டக்அவுட் ஆகி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக்அவுட் ஆனவர்கள் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளனர். மந்தீப் சிங், பியூஸ் சாவ்லா மற்றம் சுனில் நரைன் ஆகியோர் 15 முறை டக்அவுட்டாகி மூணாவது இடத்தில் உள்ளனர்.

    • சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
    • இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் நாளைமறுநாள் தொடங்க உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணிகள் வீரர்களும் சென்னையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்த 6 ஆர்சிபி வீரர்கள் இடம் பெற்றனர். அதில் டுபிளிசிஸ், விராட், மேக்ஸ்வெல், சிராஜ், பட்டித்தார், மணிபால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    அப்போது முன்பக்க ஜெர்சியை புகைப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல பின்பக்க ஜெர்சியை படம் எடுக்க திரும்புமாறு செய்தியாளர்கள் தெரிவித்தனர். திரும்பிய வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டும் இடுப்பை ஆட்டி நடனம் ஆடினார். இதனை பார்த்த டுபிளிசிஸ், விராட், சிராஜ் ஆகியோர் சிரித்தனர்.

    இது மட்டுமல்லாம் ஸ்பான்சர் (KEI) நிறுவனத்தின் பெயரை கேப்டன் டுபிளிசிஸ் திறந்து வைத்தார். அப்போது வெடி சத்தத்துடன் வண்ண காகிதங்கள் பூக்களை போன்று சிதறியது. இதை எதிர்பாராத டுபிளிசிஸ் காதை மூடிக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த விராட் மற்றும் மேக்ஸ்வேல் வாய்விட்டு சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    • டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.
    • டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - இங்கிலீஸ் களமிறங்கினர். இங்கிலீஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 22 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டோய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

    • மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.
    • நான்கு வீரர்கள் அணியுடன் இணைய உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது.

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள்.

    ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட்டு விட்டனர்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே டி20 அணியில் நீடிக்கிறார்.

    பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

    • இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும்.
    • இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் அருவருக்கத்தக்க மெசெஜ்களை அனுப்புவதாக வினி ராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    இந்தியராக நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், உங்கள் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டியது முக்கியம். இந்த மாதிரி பேசுவதை விட்டு, உங்களது கோபத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினை மீது திருப்புங்கள்.

    என்று வினி ராமன் கூறினார்.

    மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனை.
    • பலமுறை தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை.

    உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார்.

    விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு (cramps) ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

    இந்த நிலையில், நாளைய அரையிறுதி போட்டி குறித்து கம்மின்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "மேக்ஸ்வெல் விளையாட தயாராக உள்ளார். நேற்று அவருக்கு சற்று வலி இருந்தது. அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என தெரிந்து கொள்ள பலமுறை ஸ்கேன் எடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக அமைந்துள்ளது. நாளை டாஸ் சுண்டும்போது ஆடும் லெவன் அறிவிக்கப்படும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ராகிம் சதம் ஆப்கானிஸ்தானை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றது.
    • 70 ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தான் சிறந்த ஆட்டத்தை விளையாடியது.

    ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் இப்ராகிம் சட்ரன் ஆட்டமிழக்காமல் 143 பந்தில் 129 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவித்தது.

    பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் (128 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 201*) ருத்ரதாண்டவம் ஆட ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்த போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இப்ராகிம் சட்ரனின் அற்புதமான சதம், ஆப்கானிஸ்தானை சிறந்த நிலையில் வைத்திருந்தது. அவர்கள் 2-வது பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை தொடங்கி, 70-வது ஓவர் வரை சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். ஆனால், கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம், அவர்களின் அதிர்ஷ்டம் மாறுவதற்கு போதுமானதாக இருந்தது.

    மேக்ஸ் நெருக்கடியில் இருந்து மேக்ஸ் அதிரடி! எனது வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் ஆட்டம் (மேக்ஸ்வெல் இரட்டை சதம்).

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • உலகக் கோப்பையில் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
    • இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார். அதோடு இக்கட்டான நிலையில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்த போட்டியின் சாதனைத் துளிகள் விவரம்...

    1. இந்த போட்டியில் மேக்ஸ்வெல் 10 சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மோர்கன் (17), கெய்ல் (16), மார்ட்டின் கப்தில் (11), பஹர் ஜமான் (11) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

    2. ஒருநாள் போட்டியில் 2-வது அதிவேக இரட்டை சதம் இதுவாகும். இஷான் கிஷன் 126 பந்தில் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் நேற்று 128 பந்தில் இரட்டை சதம் அடித்தார். கெய்ல் 138 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

    3. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்காத ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் சார்லஸ் காவென்ட்ரி 194 (நாட்அவுட்), விவ் ரிச்சர்ட்ஸ் (189 நாட்அவுட்), டு பிளிஸ்சிஸ் (185) சாதனை படைத்திருந்தனர்.

    4. 7-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி 202 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பட்லர்- ரஷித் ஜோடி 177 ரன்களும், ஆபிஃப் ஹொசைன்- மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி 174 (நாட்அவுட்) ரன்களும் குவித்திருந்தனர்.

    5. உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் (237 நாட்அவுட்), கெய்ல் (215) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    6. சேஸிங்கில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்துள்ளார்.

    7. உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கெய்ல் (49), ரோகித் சர்மா (45) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

    8. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வாட்சன் 185 (நாட்அவுட்), ஹெய்டன் (181 நாட்அவுட்), டேவிட் வார்னர் 179 மற்றும் 178) ரன்கள் அடித்துள்ளனர்.

    9. உலகக் கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    10. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சட்ரன் சதம் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர என்ற பெருமையை பெற்றார்.

    • ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது.
    • ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.

    இதில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. பின்னர் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 4-ம் தேதி இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

    குஜராத்தில் கோல்ப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். மேக்ஸ்வெல் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    ×