என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா"
- உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது.
- சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் ரத்தானது. சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது.
உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வலுவாக விளங்குகிறது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (20 ஓவர்) தோல்வியையே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.
இந்திய அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி நல்ல நிலையில் உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் முதலாவது ஆட்டத்தில் ஹேசில்வுட், எலிஸ் பந்து வீச்சில் இமாலய சிக்சர் விரட்டி அசத்தினார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை கட்டமைக்க முடிவு செய்துள்ள இந்தியா அதிரடி அணுகுமுறையை கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகமாக மட்டையை சுழற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காணும் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூர் சூழல் சாதகமான அம்சமாகும். அத்துடன் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட இருப்பது நிச்சயம் பரவசமூட்டும்.
அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோனிஸ் என அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சேவியர் பார்லெட் கைகொடுக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசமமான பலம் கொண்ட அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டியில் ஆடி இருக்கும் இந்திய அணி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
கடந்த ஆட்டத்தை போல் மெல்போர்னிலும் மழை புகுந்து விளையாட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேத்யூ குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த டாஸ் தோல்வியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது.
- இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
பலமுறை மழை குறுக்கிட்டதால் பெர்த் ஒரு நாள் போட்டி 26 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா 136 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த இலக்கை ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது அரைசதத்தால் 264 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை ஆஸ்திரேலியா 46.2 ஓவர்களில் போராடி அடைந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூ ஷார்ட்டுக்கு (74 ரன்) இந்திய பீல்டர்கள் இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.
- ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேட்பன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ள 6 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இந்த போட்டியை வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
- தர்மசாலா ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி இன்னும் தயாராக இல்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற இருந்த 3-வது டெஸ்ட் போட்டி மாற்றப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி இன்னும் தயாராக இல்லை. மேலும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் தர்மசாலாவில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி மாற்றம் செய்யப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஆடுகள பராமரிப்பாளர் தபோஸ் சட்டர்ஜி ஆடுகளம் குறித்த அறிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது.
- 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
- 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட 1 ரன் குறைவாகும். அக்ஷர் படேல் 74 ரன்னும், வீராட் கோலி 44 ரன்னும் எடுத்தனர்.
நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் சாய்த்தார். மர்பி , மேத்யூ குனேமேன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து இருந்தது.
உஸ்மான் கவாஜா 6 ரன்னில் ஜடேஜா பந்தில் பெவிலியன் திரும்பினார். டிரெவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுஷேன் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.
சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.
டிரெவிஸ் ஹெட் 43 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டீவ் சுமித் 9 ரன்னிலும், அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தனர். லபுஷேன் 35 ரன்னில் ஜடேஜா பந்தில் பெவிலியன் திரும்பினார்.
இருவரும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். ரென்ஷா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். ஹேண்ட்ஸ்ஹோம் (0), கேப்டன் கம்மின்ஸ் (0) ஆகியோரை ஜடேஜா அவுட் செய்தார்.
அதைத்தொடர்ந்து அலெக்ஸ் கேரி (7 ரன்), லயன் (8), மேத்யூ குனேமேன் (0) ஆகியோர் ஜடேஜாவின் அபார பந்து வீச்சுக்கு வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணி 31.1 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 115 ரன் இலக்காக இருந்தது.
ஜடேஜா 42 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் அவர் 3 விக்கெட் எடுத்து இருந்தார். அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
115 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது.
இந்திய அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக இருந்தது. லோகேஷ் ராகுல் 1 ரன்னில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 115 ரன் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்குகிறது.
- ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
- 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது.
இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார். சற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்சார் பட்டேல் 29 ரன்களையும் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் சுருண்டது இந்தியா.
அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
- ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
- 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அக்சார் பட்டேல் 29 ரன்களையும் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களில் சுருண்டது இந்தியா.
அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. 117 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது.
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிட்சல் மார்ஷ் 62 ரன்களையும், ட்ராவிஸ் ஹெட் 46 ரன்களையும் எடுத்தனர்.
- சென்னையில் நடைபெறும் ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
- இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிற்பகலில் தொடங்குகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்டை போலவே ஒரு நாள் தொடரையும் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர் நோக்கி இருந்தனர். இதனால் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பார்க்கும் ஆவலில் காலையில் இருந்தே ரசிகர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டனர்.
நேரம் செல்ல செல்ல அதிக அளவிலான ரசிகர்கள் சேப்பாக்கம் பகுதியில் குவிந்தனர். 11 மணி அளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதாவது போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.
சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் உள்ள வாலாஜா ரோடு, பெல்ஸ் சாலை, விக்டோரியா சாலை பகுதிகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் ரசிகர்கள் நின்று ஸ்டேடியத்திற்குள் நுழைந்தனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்களும், போலீசாரும் இணைந்து ரசிகர்களுக்கு எந்த நுழைவு வாயில் வழியாக ஸ்டேடியத்திற்குள் செல்ல வேண்டும் என்று டிக்கெட்டுகளை பார்த்து அனுப்பி வைத்தனர். டிக்கெட் இல்லாத ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தில் ஸ்டேடியத்தை சுற்றி வலம் வந்தனர்.

கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டேடியத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். வீரர்கள் தங்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஸ்டேடியத்துக்குள் சோதனை நடத்தப்பட்டது.
அண்ணாசாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். போட்டியையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.
கிரிக்கெட் போட்டியையொட்டி ரசிகர்களுக்காக இலவச மினி பஸ் வசதிக்கும் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும். இந்த சேவை இன்று மட்டும் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள்.
- உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி தோல்வியை மறந்துவிடக்கூடாது.
ஆஸ்திரேலியாவிடம் தோற்று சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது தொடர்பாக முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியா பீல்டிங்கில் கடும் நெருக்கடி கொடுத்தது. கோலி-ராகுல், ரோகித் சர்மா-சுப்மன்கில் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பை தவிர இந்தியாவால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. இதுதான் தோல்விக்கு காரணமாகும்.
270 முதல் 300 ரன் இலக்கு இருக்கும் போது 90 அல்லது 100 ரன் பார்ட்னர்ஷிப் அவசியமானது.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மிகவும் நன்றாக இருந்தது. இதுதான் இரு அணிகளுக்கான வித்தியாசமாகும்.
ஐ.பி.எல். போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் பிரிந்து விடுவார்கள். இதனால் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது.
ஆஸ்திரேலியாவை உலக கோப்பையில் மீண்டும் சந்திக்க நேரிடும். அப்போது இதுபோன்று மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதால் கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று இருக்க வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும்.
- ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 269 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இந்தியாவுக்கு 270 ரன் இலக்காக இருந்தது.
மிச்சேல் மார்ஷ் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), டிரெவிஸ் ஹெட் 33 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய இந்திய அணியால் 270 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. 49.1 ஓவரில் 248 ரன்னில் 'ஆல்அவுட்' ஆகி இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
விராட் கோலி 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), சுப்மன் கில் 37 ரன்னும் (4பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், ஆஸ்டன் அகர் 2 விக்கெட்டும், ஸ்டோனிஸ், அபோட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த தோல்வியால் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தனர்.
4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இந்த தோல்வியால் பேட்ஸ்மேன்களை கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
269 ரன் என்பது அதிகமான ஸ்கோர் இல்லை. 2-வது பாதியில் ஆடுகளம் கொஞ்சம் சவாலாகவே இருந்தது. ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற பார்ட்னர்ஷிப் முக்கியமானது. அதை செய்ய நாங்கள் தவறிவிட்டோம்.
இதுபோன்ற ஆடுகளத்தில் தான் நீங்கள் (பேட்ஸ்மேன்கள்) பிறந்து வளர்ந்து இருப்பீர்கள். இந்த பிட்சில் பொறுமையாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இந்த போட்டியில் தொடக்கம் நன்றாக இருந்தது. ஏதாவது ஒரு வீரர் நிலைத்து நின்று இருக்க வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
இது ஒட்டுமொத்த அணியின் தோல்வியாகும். இந்த தொடரில் இருந்து பல விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் 30 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறும்போது, "இந்த சுற்றுப் பயணம் மகிழ்ச்சியானது. டெல்லி டெஸ்ட் தோல்விக்கு பிறகு நாங்கள் போராடிய விதம் நன்றாக இருந்தது. இந்த ஆட்டத்தில் விக்கெட் சரிந்ததால் 220 ரன்களை எடுக்க மாட்டோம் என்று நினைத்தோம். எங்களது பின் கள வீரர்கள் நன்றாக ஆடி 269 ரன்னுக்கு கொண்டு வந்தனர் என்றார்.






