என் மலர்
கிரிக்கெட் (Cricket)

4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா? முகமது சிராஜ் கொடுத்த தகவல்
- 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
- இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி எதிர்வரும் ஜூலை 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து சக வீரர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனக்குத் தெரிந்தவரை பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். ஆகாஷ் தீப் தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு பந்துவீசி வருகிறார். இருப்பினும் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகின்றனர். அதனால் எங்களுடைய திட்டத்தை எளிதாக வைத்துள்ளோம். என்று கூறினார்.
Next Story






