என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகர்கர்"

    • வேலைப்பளு காரணமாக பும்ரா தொடர்ந்து விளையாடுவது கடினம்.
    • இங்கிலாந்து தொடரில் கூட 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால்தான் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

    பும்ராவின் வேலைப்பளு (WorkLoad) பெரிய அச்சத்தை ஏற்படுத்தியதால் ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றில்தான் விளையாட முடியும்.

    இதனால் பும்ராவை ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார்-யார்? இடம் பெறுவார்கள்? என்று முன்னாள் வீரர்கள் நாள் தோறும் கணித்து வருகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு குறித்து அணி தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின.

    இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா-தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியானது.

    அதன்படி ரோகித் சர்மாவும் ரோகித் சர்மாவும் அகர்கரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதிப்புக்கு பிறகு வீரர்களின் தேர்வு இறுதி செய்யப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வீராட் கோலி இடம் பெறுவார். அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வீரராக ஆடுவாரா? என தெரியவில்லை.

    சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள். ரிங்குசிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகி ஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவை உள்ளன. அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும் 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    ×