search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும்

    தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று அணைக்கு வினாடிக்கு 1, 247 கன அடி நீர் வந்தது. ஆனால் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வரை காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    • 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 944 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டத்தில் 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறிது சிறிதாக கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது.
    • இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரில் உப்பு தன்மை அதிகரித்துள்ளதால் விவசா யிகள் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

    சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக் கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளி யேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்க ளாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.

    ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவு கள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ஆனால், கடந்த டிசம்பர் மாதங்களில் மழை வெள்ள நீர் அதிகமாக வந்ததால் சாயக்கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 330 டி.டி.எஸ் என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால், அவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்க வில்லை நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 1860 டி.டி.எஸ்., சாக உயர்ந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரை யோர விவசாயிகள் கூறுகையில்:

    நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் கடந்த மாதம் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்தோம். ஆனால், திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை களால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

    உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம் என்றனர்.

    • விவசாயிகள் 4500 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர்.
    • கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர் புறம் அமைந்துள்ளது.

    இங்கு விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.

    அந்த வகையில் அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம்,

    பச்சம் பாளை யம், கள்ளிமடை குட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தி களை அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து பருத்திகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண் காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் புளி யம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவினாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்திகளை ஏலம் எடுக்கிகிறார்கள். இதை தொடர்ந்து விளை ச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    கடந்த வாரம் விவசாயிகள் 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். ஆனால் இந்த வாரம்அதிக அளவில் 4 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் வந்திருந்தனர்.

    இதனால் கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் 500 மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 758 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு முதலில் 500 கன அடி, பின்னர் ஆயிரம் கன அடி, அதன் பின்னர் 1500 கனஅடி, பின்னர் 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் நேற்று முதல் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 3,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
    • இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஒன்றிய அரசின் நிதி உதவியில் 2005-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கான இச்சிறப்பு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு 10-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்கல்வி பயில்வதை இத்திட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

    தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவற்றில் உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக நடப்பாண்டில் உயர்த்தி மாநில அரசின் தொழிலாளர் மற்றும் திறன்வளர்ப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்கல்வி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    தற்போது பயிலும் கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கிக்கணக்குப்புத்தக நகல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திட்ட இயக்குநர், குழந்தைத் தொழிலாளர் திட்டம் , 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,792 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.83 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

    • ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்வார்கள். தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்ப னைக்கு வந்தன. இங்கு நாளொன்றுக்கு 8 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் இன்று ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை சற்று உயர்ந்திருந்தன.

    சிறிய மீன்கள் கிலோ ரூ. 25 வரையும், பெரிய மீன்கள் கிலோ ரூ.50 வரையும் உயர்ந்திருந்தன.

    இன்று மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-750, சீலா பெரியமீன்-600, சிறிய மீன்-300, சங்கரா-350, அயிலை-200, மத்தி-170, முரல்-300, திருக்கை-400, சின்னராட்டு-300, பெரியராட்டு-500, மெல்ல வவ்வால்-700, இறால்-650, சின்ன இறால் - 500, சுறா-600, நண்டு-600.

    இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது . இதனால் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாவனிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடி எட்டியதால் அணை யில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டது. இதையடுத்து மழை குறைந்த தால் அணைக்கு வரும் நீர் குறைந்தது.

    இந்த நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவ தால் பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விட ப்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இது படிப்படியாக உயர்ந்து இன்று 9500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

    மேலும் அணையில் இருந்து 9500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப் பரித்து செல்கிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து காளிங்க ராயன் வாய்க்காலுக்கு 300 கனஅடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க் காலுக்கு 1750 கனஅடியும், ஆற்றில் 7450 கனஅடி தண்ணீர் என மொத்தம் 9500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    தண்ணீர் அதிகம் திறப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அணையில் இருந்து அதி களவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது.

    இதையொட்டி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்திலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பி டிப்பு பகுதியில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    ×