search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening of water to"

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும்

    தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று அணைக்கு வினாடிக்கு 1, 247 கன அடி நீர் வந்தது. ஆனால் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.07 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 182 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வரை காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும்,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 758 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு முதலில் 500 கன அடி, பின்னர் ஆயிரம் கன அடி, அதன் பின்னர் 1500 கனஅடி, பின்னர் 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் நேற்று முதல் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 3,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    ×