search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode New"

    • சித்தோடு அடுத்த கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

    அப்போது சித்தோடு அடுத்த கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்ட–த்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:

    நாங்கள் மேலே குறிப்பிட ப்பட்டுள்ள முகவரியில் 5 வருடங்களுக்கு மேலாக ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமான காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எங்கள் மனு மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஒரே இடத்திற்கு 3 நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளார். சொந்த வீடு வைத்திருப்ப வர்களுக்கே பட்டா வழங்கியுள்ளார். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் தனி தாசில்தார் பயனாளிகள் தேர்வு செய்வதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக தனி தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் வந்து எங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 5,549 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் மொடக்குறிச்சி, எழுமாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,826 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 31 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 65 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,549 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாவனிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடி எட்டியதால் அணை யில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டது. இதையடுத்து மழை குறைந்த தால் அணைக்கு வரும் நீர் குறைந்தது.

    இந்த நிலையில் கேரளாவில் மழை பெய்து வருவ தால் பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விட ப்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இது படிப்படியாக உயர்ந்து இன்று 9500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

    மேலும் அணையில் இருந்து 9500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப் பரித்து செல்கிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து காளிங்க ராயன் வாய்க்காலுக்கு 300 கனஅடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க் காலுக்கு 1750 கனஅடியும், ஆற்றில் 7450 கனஅடி தண்ணீர் என மொத்தம் 9500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    தண்ணீர் அதிகம் திறப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அணையில் இருந்து அதி களவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி செல்கிறது.

    இதையொட்டி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்திலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் தணணீர் அதிகளவில் கொட்டுவதால் இன்று 25-வது நாளாக பொதுமக்கள் அணையில் குளிப்பதற்கும், சுற்றி பார்ப்பதற்கும் தொடர்ந்து தடை விதிப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மது பாட்டில்கள் விற்பனை செய்த பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது செல்லியாண்டி அம்மன் பூக்கடை அருகில்‌ 12 மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
    • கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதில் சம்பவத்தன்று மதியம் 2 மணி அளவில் சந்தனநகர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சண்முகம் (45). பெயிண்டர். அவரது நண்பர் பிலியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (27) ரிக் வண்டி தொழிலாளி. இருவரும் மது குடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு பிரபுகுமார் பணத்தை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்கிறாயா என தகாத வார்த்தையில் பேசி யுள்ளார்.

    100 ரூபாய் கூட கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சண்முகம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் பிரபுகுமாருக்கு வாயின் கீழ் உதடு, வலது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடை ந்த சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

    • மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதனைத்தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்து விஜயமங்கலம் பகுதியில் 17 வயது மாணவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவி ல்லை.

    இதனால் மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரைத் தேடிப்பார்த்தனர் .

    அவர்களால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தொடர்ந்து பெருந்துறை போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள உதயத்துறையை சேர்ந்த ரங்கநாதன் (வயது 26) என்றும், பெயிண்டரான இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த மாணவியிடம் பழகியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர் அந்த மாணவிக்கு காதல் வலை வீசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி பெருந்துறை பகுதிக்கு வந்த அந்த மாணவியை கடத்திச் சென்று கெங்க வல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    மேலும் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மருத்துவ பரிசோத னைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ரங்கநாதன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு தவறி கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.
    • இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.

    இந்நிலையில் இன்று காலை அந்த வடிகாலில் அருகே எருமை மாடு, நிறைமாதம் கர்ப்பம் தரித்த கன்றும் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எருமை மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.

    இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி எருமை மாட்டை உயிருடன் மீட்டனர். இதனால் அந்தியூர்-பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. 10-ந் தேதி மகா கணபதி ஓமம் நடைபெற்றது. பின்னர் கூடுதுறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவில் வந்து அடைந்தனர்.

    தொடர்ந்து முதல் கால யாக பூஜை மற்றும் நான்கு கால யாக பூஜை வேள்வி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பவானி, ஊராட்சிகோட்டை, குருப்ப நாயக்கன் பாளையம், தொட்டி பாளையம், சேர்வராயன் பாளையம், காடையம்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய க்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • திருப்பூர் வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு மின்சார த்துறை மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும், மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடுமின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மின்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய க்கோரி மனு அளிக்கப்ப ட்டது.

    தமிழ்நாடு மின்சா ரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலமாக சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து க்கேட்புக் கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று விசைத்தறி க்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத் தொடர்ந்து திருப்பூர் வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.47 உயர்த்த ப்பட்டுள்ள து.

    இதன் காரணமாக தற்போது 31 சதவீதம் கட்டண உயர்வு ஏற்பட்டு ள்ளது. இதனால், விசை த்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு, மேலும் இதனை சார்ந்த ஜவுளித் தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்படலாம். ஏற்கனவே நூல் விலை ஏற்றம் காரணமாக ஜவுளி மற்றும் அதைச் சார்ந்து உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த மின்கட்டண உயர்வு என்பது விசைத்தறித் தொழிலை முற்றிலும் அழிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

    எனவே முதல்-அமை ச்சரை நேரில் சந்தித்து விசைத்தறி மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்பு களை எடுத்துக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ப டவுள்ளது.

    இவ்வாறு அந்த செய்தி குறி ப்பில் கூறப்பட்டு ள்ளது. 

    • சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (30). இவரது மனைவி வித்யா. பிரதாப் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்திருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவின ர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரதாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.
    • கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 85 பஸ்கள் செல்கின்றது. இங்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 55 பஸ்கள், டவுண் பஸ் 30 இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கிருந்து அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ ர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அந்த டவுண் பஸ்சில் காலை 9 மணிக்கு பள்ளி பஸ் நிறுத்தம் வந்தடைவது வழக்கம்.

    மேலும் மாலை 6 மணிக்கு பள்ளி முடிந்து அந்தியூர் பிரிவில் இருந்து மெசக்கவுண்டனூர் வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் சென்று கொண்டிரு க்கின்றனர். இந்நிலையில் அவர்கள் பஸ்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி இந்த பஸ் நிறுத்துவதால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் நிலை தவிக்கும் நிலையில் உள்ளது.

    இதனை அரசு கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் காலை நேரத்தில் வரக்கூடிய பஸ் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ இல்லை டிரைவர், கண்டக்டர் வரவில்லை என்றாலோ மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×