search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town bus"

    • சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    • அரசு நிலத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடவசதி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து நகர அளவிலான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். திருப்–பூர் பழைய பஸ் நிலையம் முன் தினசரி மார்க்கெட்டில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நேரில் ஆய்வு செய்யப்படும் என்று சுப்பராயன் எம்.பி. கூறினார்.

    கலெக்டர் வினீத் பேசும்போது, கோடைகாலத்தில் குடிநீர் வினியோக தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது என்றார்.மேயர் தினேஷ்குமார் பேசும்போது, 4-வது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது மின்மோட்டார்களை இயக்குவதில் மின்சார கட்டண செலவு அதிகாரிக்கும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தார்.

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் இருந்து தென்மாவட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களுக்கு இடையே டவுன் பஸ்களை தொடர்ச்சியாக இயக்க வேண்டும். கோவில்வழி பஸ் நிலைய பணிகள் தொடங்கும்போது அருகில் உள்ள அரசு நிலத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடவசதி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.
    • கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 85 பஸ்கள் செல்கின்றது. இங்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 55 பஸ்கள், டவுண் பஸ் 30 இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கிருந்து அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ ர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அந்த டவுண் பஸ்சில் காலை 9 மணிக்கு பள்ளி பஸ் நிறுத்தம் வந்தடைவது வழக்கம்.

    மேலும் மாலை 6 மணிக்கு பள்ளி முடிந்து அந்தியூர் பிரிவில் இருந்து மெசக்கவுண்டனூர் வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் சென்று கொண்டிரு க்கின்றனர். இந்நிலையில் அவர்கள் பஸ்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி இந்த பஸ் நிறுத்துவதால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் நிலை தவிக்கும் நிலையில் உள்ளது.

    இதனை அரசு கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் காலை நேரத்தில் வரக்கூடிய பஸ் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ இல்லை டிரைவர், கண்டக்டர் வரவில்லை என்றாலோ மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வாடிப்பட்டி பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை யிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி, பேரூராட்சிஅலுவலர்கள், வனத்துறை, மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு த்துறை உள்ளிட்ட அரசு துறையைச் சே ர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சோழவந்தான் வடகரை கம்மாய்பகுதியில்உள்ள சீமை கருவேலங்காட்டுக்குள் காட்டு பன்றிகள் அதிகம் இருப்பதால் விவசாய விளைப்பொருட்களை சேதப்படுத்துகிறது என்றும், அவற்றை முறையாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், மதுரையில் இருந்து வாடிப்பட்டிக்கு மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    மேலும் கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வாடிப்பட்டி பேரூராட்சியில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் விதமாக சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்றும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும்,

    வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாடிப்பட்டி பகுதியில்முன்பு இருந்தது போல் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும்விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் தென்னை விவசாயசங்கத் தலைவர் சீதாராமன் நன்றி கூறினார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் எம்.எல்.ஏ. சின்னதம்பி பயணம் செய்தார். இதனால் மாணவ, மாணவிகள் கைகளை தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். #ChinnathambiMLA
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லாநத்தம் செட்டில்மண்ட் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னதம்பி புதிய பஸ்சை இயக்க நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் பஸ் இயக்கத்தை சின்னதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் பயணம் செய்தார்.

    அவருடன் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கே.பி.பெரியசாமி, ஊராட்சி முன்னாள் துணை தலைவர் மருதமுத்து, கல்லாநத்தம் சங்கர், அரசு வக்கீல் மூவேந்தன் ஆகியோர் சென்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பஸ்சில் எம்.எல்.ஏ. பயணம் செய்தார். இதனால் மாணவ, மாணவிகள் கைகளை தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். #ChinnathambiMLA
    ×