search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "done"

    • வாடிப்பட்டி பகுதிக்கு கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை யிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி, பேரூராட்சிஅலுவலர்கள், வனத்துறை, மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு த்துறை உள்ளிட்ட அரசு துறையைச் சே ர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சோழவந்தான் வடகரை கம்மாய்பகுதியில்உள்ள சீமை கருவேலங்காட்டுக்குள் காட்டு பன்றிகள் அதிகம் இருப்பதால் விவசாய விளைப்பொருட்களை சேதப்படுத்துகிறது என்றும், அவற்றை முறையாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், மதுரையில் இருந்து வாடிப்பட்டிக்கு மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    மேலும் கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வாடிப்பட்டி பேரூராட்சியில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் விதமாக சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்றும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும்,

    வாடிப்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாடிப்பட்டி பகுதியில்முன்பு இருந்தது போல் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும்விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் தென்னை விவசாயசங்கத் தலைவர் சீதாராமன் நன்றி கூறினார்.

    பள்ளி திறக்கும் முன்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அனைத்து அரசு, நகராட்சி, நிதியுதவி, சுயநிதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது-

    2018-2019-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலக வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வசதி, விளையாட்டு மைதானம், கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதைத் தெரிவித்தும், தங்களது பள்ளி அமைந்துள்ள கிராமம், அருகில் உள்ள கிராமங்களில் விளம்பரம் செய்தும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி செயல்படுவது, புதிய பாடப்பிரிவு தொடக்கம் ஆகியவை குறித்து பெற்றோருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

    ஒரு பள்ளியின் முழு நிர்வாகமும் தலைமை ஆசிரியரிடம் இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி இலக்கைக் குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு மாணவ- மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, மாணவர்களின் சேர்க்கை, வருகை, உள்கட்டமைப்பு, தேர்ச்சி ஆகியவற்றை குறிக்கோளாக வைத்து பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    வரும் கல்வியாண்டில் இயற்கையுடன் இணைந்த வாழ்வு, பாரம்பரிய, சத்தான உணவை உண்ணும் பழக்கம், உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளிகள் திறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை ஆசிரியர்கள் முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். கரும்பலகைகள் வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். கழிவறைகள் போதுமான எண்ணிக்கையில் தூய்மையாக தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தினுள் முட்புதர்கள் நீக்கப்பட வேண்டும். மின் இணைப்புகள் பழுதில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சேதமடைந்த கட்டிடங்கள், இடியும் நிலையில் உள்ள அபாயகரமான சுவர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடப்புத்தகம், நோட்டு, சீருடைகள் முதலியவை குறித்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    ×