search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students suffer due to"

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது.
    • வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    குனியமுத்தூர்,

    தமிழகத்தில் கடந்த சித்திரை மாத இறுதியில் இருந்து தற்போது வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமா கவே காணப்ப டுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே கிடையாது.

    அத்தியாவசிய தேவை யாக இருந்தாலும், வெயிலின் உஷ்ணம் குறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். அந்தளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

    வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    மேலும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதநீர், மோர், பழவகைகள் போன்ற குளிர்ச்சியான ஆகாரங்க ளை உணவாக எடுத்து கொண்டு வருகி ன்றனர்.

    இதுகுறித்து கோவையை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

    வருடா வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது வெயில் தாக்கம் அதிகமாகி வருவது இயற்கை. ஆனால் இந்த வருடம் மிகவும் அதிகமாக உள்ளது.

    வீட்டில் மின்விசிறி இல்லாமல் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினால் கூட வெப்ப காற்று தான் வருகிறது.

    இதனை தவிர்த்து மொட்டை மாடியில் படுத்தால் கூட வெப்ப காற்று தான் வீசுகிறது. அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.

    ஆனாலும் அது ஒரு சில நாட்கள் தான். மீதி அனைத்து நாட்களிலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்ப ட்டு வருகிறோம்.

    கடும் வெயில் காரணமாக குழந்தைகளுக்கு வியர்வை வேர்த்து ஊற்றுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. கடும் வெயில் காரணமாக தினமும் 2 நேரம் குளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் அதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற சூழ்நிலை உள்ளது. மிகவும் இக்க ட்டான சூழலில் உள்ளோம். ஆகவே விரைவில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து வழக்க மான சூழ்நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லதாக சூழ்நிலை அமையும் என்று கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.
    • கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 85 பஸ்கள் செல்கின்றது. இங்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 55 பஸ்கள், டவுண் பஸ் 30 இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கிருந்து அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ ர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அந்த டவுண் பஸ்சில் காலை 9 மணிக்கு பள்ளி பஸ் நிறுத்தம் வந்தடைவது வழக்கம்.

    மேலும் மாலை 6 மணிக்கு பள்ளி முடிந்து அந்தியூர் பிரிவில் இருந்து மெசக்கவுண்டனூர் வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் சென்று கொண்டிரு க்கின்றனர். இந்நிலையில் அவர்கள் பஸ்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி இந்த பஸ் நிறுத்துவதால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் நிலை தவிக்கும் நிலையில் உள்ளது.

    இதனை அரசு கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் காலை நேரத்தில் வரக்கூடிய பஸ் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ இல்லை டிரைவர், கண்டக்டர் வரவில்லை என்றாலோ மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×