என் மலர்

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துறையூர் பெருமாள் மலை கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும்
    • 17 ஆண்டுகள் கடந்தும் நடைபெறாமல் இருந்த துறையூர் பெருமாள் மலை கோவில் கும்பாபிஷேகம்
    • கோவில் செயல் அலுவலர் தகவல்

    திருச்சிக்கு அருகில் உள் ளது துறையூர். துறையூரில் இருந்து பெரம்பலூர் செல் லும் வழியில், 3 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது பெரு மாள் மலை. இங்கு அடிவா ரத்தில் இருந்து மலைக்கோ யிலுக்கு செல்ல, சுமார் 1564 படிகள் உள்ளன.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு வாகன த்திலும் செல்லலாம். அதற் காக 5 கி.மீ. தொலைவுக்கு தார்ச்சாலையும் உள்ளது.

    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பிரசன்ன வேங்க டாசலபதி திருக்காட்சி தருகிறார்.

    11-ம் நூற்றாண்டு கோவில் ஆகும். கரிகாற் சோழனின் பேரனின் ஆட்சிக் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக விவரிக்கிறது ஸ்தல வரலாறு.

    இங்கே உள்ள ஏழு கருங் கல் தூண்கள் விசேஷமா னவை. ஏழு தூண்களில் இரு ந்தும் ஏழு ஸ்வரங்களும் வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பதினாறு திரு க்கரங்களுடன் இரணி யனை மடியில் கிடத்தியபடி வடக்கு முகம் கொண்டு ஸ்ரீநரசிம்மர் உக்கிரத்துடன் சேவை சாதி க்கும் சிற்பமும் கொள்ளை அழகு.

    புரட்டாசி மாதத்தில், பெருமாள் மலை பிரசன்ன வேங்கடாசலபதியை தரிசி த்தால், மகா புண்ணியம் என்றும் இந்த மாதத்தில் என்றேனும் ஒருநாளில், பெருமாளை கண் குளிர தரிசித்து மனதார வேண்டி க்கொண்டால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். வைஷ்ணவக் கோயில்களில் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு.

    அழகும் கருணையும் ததும்ப அற்புதக் கோலத்தில் காட்சி தரும் இந்த பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை கும்பாபிஷேகம் நடை பெற வில்லை. இது பக்தர்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தது.

    இது குறித்து பக்தர் ஒரு வர் கூறும் போது,

    வழக்கமாக கோவில்க ளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், இக்கோவிலில் 17 ஆண்டுக ளுக்கு மேலாகியும் கும்பாபி ஷேகம் நடத்தப்பட வில்லை. திருப்பணிகள் நடைபெறா ததால் கோவில் வெளிப்பி ரகார தெற்கு பகுதி சுற்றுச் சுவரில் செடிகள் முளைத்து வெடிப்புகள் ஏற்பட்டு ள்ளது. பக்தர்களின் கோரி க்கைகளை நிறைவேற்றி தரும் இந்த ேகாவிலின் கும்பா பிஷேகத்தை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் வேணு கோபாலிடம் கேட்ட போது, தற்போது கோவிலில் புரட்டாசி விழா நடைபெற்று வருகிறது. விழா முடிவ டைந்த உடன் கும்பாபி ஷேகத்திற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி விடும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
    • சொர்ண பைரவருக்கும், பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் பனையடிகுத்தகை பகுதியில் உள்ள மகா காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு மருளாளிகள், தேய்பிறை அஷ்டமி உபயதாரா்கள், மார்கழி மாத உபயதாரா்கள் மற்றும் கிராமமக்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாககடந்த 20-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது.

    பின்னா், 3-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு மகா தீபாராதனை, மருந்து சாத்துதல், சொர்ண பந்தனம் நடைபெற்றது.

    பின்னர், காலை பரிவார தெய்வங்களுக்கு பூஜையும், புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமானம், ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து, மாலை சொர்ண பைரவருக்கும், பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் கடந்த 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சாமி திருக்கோயில் கடந்த 3ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    வதான்யேஸ்வரர் கோயில், மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் நேற்று இரண்டு கோயில்களிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ருமாந்துறை ஈஸ்வரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரி நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை, அஷ்டபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் ஆடுதுறை, திருமாந்துறை நோவா நகர்மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலீசார் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.

    மயிலம், செப்.17-

    மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றஸ்சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலையில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 6 மாத காலமாக கோவிலை புரைமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டி கோவில் புதுப்பிக்கப்ட்டு கோவில் அருகில் யாக சாலை அமைத்து கடந்த 15-ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் பால சித்தர் வள்ளி தேவசேனா உடனுற சுப்பிரமணியர் வழிபாடு கணபதியாகம் நடைபெற்றது.மாலை 3 மணி அளவில் பூமித்தாய் புதல்வன் வழிபாடு புனித மண் சேகரித்தல் முளைப்பாரி எடுதல் காப்பு கட்டுதல் இறைவனை கலசங்களில் எழுந்தருள செய்தல் முதற்கால வேள்வி நெய் முதலான 108 புனித பொருட்களால் முதற்கால யாகம் நடந்தது. 16-ந் தேதி காலை 8.30 மணி அளவில் புனித ஆ வழிபாடு, 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.

    108 நெய் முதலான புனித பொருட்களால் 3-ம்கால யாக கேள்விகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு யாக வேள்வி தத்துவங்கள் பூ சித்து இறை மூர்த்தத்தில் சேர்த்தல் நெய் மற்றும்108 புனித பொருட்களால் 4-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலை அளவில் புனித கலசங்கள் புறப்பாடு 6.45 மணி அளவில் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் விமான கலசம் மீது மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சுவாமிகள் கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றியும் மூலவர் சுந்தர விநாயகருக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மை புற ஆதீனம் 20 பட்டம் சிவஞானபாளைய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யாக பூஜையை திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் இரா.ரவி தொடங்கி வைத்தார்.
    • கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், காக்களூர் பைபாஸ் சாலையில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் 9 யாக குண்டங்களுடன் கடந்த 14-ந் தேதி முதல் 5 கால விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    இந்த யாக பூஜையை திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் குருக்கள் இரா.ரவி தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து கஜ பூஜை, அஸ்வ பூஜை உடன் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையுடன் நடைபெற்றது.

    இன்று காலை 9 மணி முதல் மங்கள இசையுடன் திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. காலை 10.30 மணியளவில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தின் விமான கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர்.

    அப்போது கோவிலை சுற்றி கூடி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவிலில் தொடர்ந்து 48 நாட்களுக்கு மூலமந்திர ஹோமங்களுடன் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வியாபாரிகள் நல சங்கம் ஒருங்கிணைப்பாளர் ஆர்யா சீனிவாசன், தலைவர் பி.சுரேஷ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அருள், தர்மலிங்கம், ரகுபதி, பக்தவச்சலம், பாலசுப்பிரமணியம், புஜ்ஜி பாபு, தசரத நாயுடு, ஜெகதீசன், பழனிபாபு, ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார்.
    • சிவ பெருமானின் ருத்ர ரூபமாக அறியப்படுபவர்.

    சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவர் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.

    பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்ர ரூபமாக அறியப்படுபவர். சிவன் கோவிலின் வட கிழக்குப்பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாக காட்சி தருபவர்.

    கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்றும் அறியப்படுகிறார்.

    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களை பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். இதையடுத்து தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். அப்போது எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

    பைரவ மூர்த்தியை பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், ேஷத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள். தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இலங்கையில் ராமர், ராவணனை வதம் செய்தார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக ராமேசுவரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக காசி சென்று சிவலிங்கம் எடுத்து வர வேண்டும் என ஆஞ்சநேயருக்கு உத்தரவிட்டார். ராம பிரானின் உத்தரவுப்படி காசிக்கு புறப்பட்டார் ஆஞ்சநேயர்.

    காசிக்கு சென்று அங்கிருந்து சிவலிங்கத்தை ஆஞ்சநேயர் எடுத்து வரும்போது அவருடன் பைரவரும் வந்து விட்டார். சிவலிங்கத்துடன் ஆஞ்சநேயர் ராமேசுவரம் செல்லும் வழியில் நாகை அருகே உள்ள தகட்டூர் என்ற தலத்துக்கு வந்தபோது பைரவருக்கு தகட்டூரில் தங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதன்படி ஆஞ்சநேயரை அசதியில் ஆழ்த்தி விட்டு இங்கேயே உறங்க செய்தார் பைரவர்.

    இந்த நிலையில் உறக்கத்தில் இருந்து எழுந்த ஆஞ்சநேயர் பைரவரையும், காசி லிங்கத்தையும் தகட்டூரிலேயே விட்டு சென்று விட்டதாக தல புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் வடபாகத்தில் காசி லிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில்களில் தகட்டூர் பைரவர் கோவிலும் ஒன்றாகும். வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்சம் நாவல் மரம். தீர்த்தம் காசி தீர்த்தம் ஆகும்.

    மேலும் இக்கோவில் மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஞான பீடத்தில் சிவபஞ்சாட்சர எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் இருந்து அருள்வாக்கு வழங்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து செய்யும் பரிகாரங்களால் குணம் அடையும் அதிசயத்தை கண் கூடாக பார்க்க முடிகிறது.

    கைகளில் சூலம், மண்டை ஓடு, கயிறு, உடுக்கை மற்றும் பாம்புகளால் அலங்கரிக்கப்பட்ட மேனியுடன் நிர்வாணமாகவும், நாய் வாகனத்துடனும் பிரதான மூர்த்தியாக பைரவர் தகட்டூரில் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் விசுவநாதர் விசாலாட்சி சன்னதி அமைந்துள்ளது.

    பிரகாரத்தில் கணபதி, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவபெருமான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்கு எதிரே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

    தீர்த்த குளத்திற்கு எதிரே காவல் தெய்வமான ராவுத்தர் சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் பக்தர்கள் வேண்டுதலுக்காக ஆடு, கோழி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியில் உற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. தகட்டூர் பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு யாகம் நடக்கிறது. அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வேண்டி கொள்வார்கள்.

    பிரசித்திப்ெபற்ற தகட்டூர் பைரவர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    "வடமொழியில் 'யந்திரபுரி' என்றும் தமிழில் 'தகட்டூர்' என்றும் இந்த தலம் அழைக்கப்படுகிறது"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர்.
    • வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர்.

    காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது.

    குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆணவத்தை அழிக்க சிவபெருமான், கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் 8 வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
    • பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.

    வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.

    சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.

    சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.

    ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.

    சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.

    பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.

    கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.

    பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.
    • யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்தில் சந்தவழியான் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இதையொட்டி நேற்று மாலை மங்கல இசை, எஜமான் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இன்று (சனிக்கிழமை) மங்கல இசை, சூரிய பூஜை, இரண்டாவது யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மங்கல இசை கோமாதா பூஜை, நாடிசந்தானம், பரிஷாகுதி, உயிர் ஓட்டம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.

    சந்தவழியான் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களான முனியப்ப சாமி, விநாயகர், பாதாள காளியம்மன், கருப்பணசாமி ஒச்சமை, நாச்சம்மை, நாகக்கன்னி, சோனை கருப்பர் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. மேலும் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை சந்தவழியான் சுவாமி கோயில் குடிமக்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print