search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devar Memorial"

    • தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிரூபர்க ளிடம் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். நினைவிடம் முன்பாக பொதுப்பணித்துறை மூலம் தற்காலிக கொட்டகை அமைத்து பயன்ப டுத்தப்பட்டு வந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் முத்துராம லிங்கம், முருகேசன் ஆகியோர் வேண்டு கோளுக்கிணங்க பொது மக்கள் பயன்பாட்டிற்காக நினைவிடம் முன்பு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைக்கவும், மேலும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதியோடு பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குநர் (செய்தி), இணை இயக்குனர் (நினைவகங்கள்) தமிழ் செல்வராஜன், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், திவாகரன், வட்டாட்சியர் சேதுராமன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ரா தேவிஅய்யனார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, குமார், தங்கவேல் உட்பட பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதுரை ஆதீனம் தரிசனம் செய்தார்.
    • இங்கு வந்தால் மனம் அமைதியாக உள்ளது. தியானம் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மதுரை ஆதீன மடத் தின் 293-வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம் பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

    பிறகு தேவரின் இல்லம், பழமையான பாராட்டு பட்டயங்கள், புகைப்பட கண்காட்சி, தேவர் பூஜை அறை ஆகியவற்றை பார் வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஒவ் வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும் பொன் வருவது வழக்கம். கே.வேப்பங்குளம் கிரா மத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தேன். அதோடு பசும்பொன் தேவர் வாழ்ந்த வீடு, அனைத்தையும் பார்க்க வேண்டும் என நினைத்து வந்துள்ளேன்.

    இங்கு வந்தால் மனம் அமைதியாக உள்ளது. தியானம் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது. பசும் பொன் தேவருக்கும், மதுரை ஆதீ னத்துக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. தேவர் ஒரு தெய்வப்பிறவி. சித்தராக வாழ்ந்தவர். உலகில் இன்று நடக்கும் பல்வேறு நிகழ்வு களை அவர் வாழ்ந்த காலத் திலே நடந்துள்ளது.

    அப்படிப்பட்ட மாபெரும் மகான் அவதரித்த இந்த புண்ணிய பூமி பசும்பொன் கிராமத்திற்கு நாம் அனைவ ரும் வரவேண்டும், வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய இளைஞர்கள் தேவருடைய கொள்கையையும், அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை யும், அரசியலையும் அனை வரும் பின்பற்ற வேண்டும். இந்த வருடமும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரு வேன் என்றார்.

    அவருடன் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் கழகத்தின் தலைவர் பெருமாள்சாமி, பசும்பொன் ரத்ததான அறக்கட்டளை சமூக சேவகர் கண்ணன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-ந் தேதி நடந்தது.

    இதையடுத்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. 48 -வது மண்டல பூஜை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநா யகர் சிலைகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

    அக்டோபர் மாதம் நடந்த தேவர்குருபூஜையின் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய வெள்ளி கவசத்தை அவரது மகன் ஜெயபிரதீப், அ.தி.மு.க. எம்.பி. ஆர்.தர்மர் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவித்தார். அப்போது அவருக்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வினோதினி சீனிவாசகம் சார்பில் 2 அடி வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்க ப்பட்ட தேவரின் வெள்ளி கவசத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜெயந்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திபாலாஜி கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி.

    சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்.

    ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், விருதுநகர் நகர செயலாளர் முகமது நெய்னார், விருதுநகர் கிழக்கு ஒன்றியசெயலாளர் தர்மலி ங்கம், விருதுநகர்மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன்.

    அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாள கருபப்சாமிபாண்டியன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன.
    • இதில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    பசும்பொன்னில் குருபூஜை விழாவின் 2-வது நாளான இன்று பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நேற்று (28-ந் தேதி) தொடங்கி நாளை (30-ந் தேதி) வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாகவும், நாளை குரு பூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது.

     முதல் நாளான நேற்று தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டி ருந்தது.

    தேவர் நினைவிடத்தில் உள்ள விநாயகர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ. க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து தேவர் நினைவிட நிர்வாக பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, சத்தியமூர்த்தி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் அன்ன தானம் நடந்தது.

    இரவு 8 மணி அள வில் முத்துராமலிங்க தேவரின் ஐம்பொன் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வல மாக வந்தனர்.

    2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை தேவர் நினைவி டத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (30-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம். பி., எம். எல் .ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியா தை செலுத்த உள்ள னர்.

    அவர்கள் எந்தெந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என போலீசார் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு அஞ்சலி செலுத்த அனு மதிக்கப்படும் என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

    குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய கும்பாபிஷேக விழா யாக சாலையை பிச்சை குருக்கள் பார்வையிட்டார்,
    • 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன் கும்பாபி ஷேகமும் நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ந் தேதி ஆன்மீக விழாவும், 29-ந் தேதி அரசியல் விழாவும், 30-ந் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன.

    வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் மற்றும் குழுவினர் பசும்பொன் வந்து யாகசாலை பூஜை பணிகளை பார்வையிட்டு சிவாச்சாரியார்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை விக்னேசுவரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும் 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணி அளவில் அன்னதானம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல், சத்தியமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேக விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள்‌, திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர் கோவில் கட்டி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவர் நினைவாலயத்தில்2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 22 ஆண்டு களுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷே கமும் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந்தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந்தேதி ஆன்மீக விழாவும், 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர், சுப்ரமணியர் கோவில், முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடை பெறும். இதையொட்டி 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு தீபாரனையும் நடைபெற உள்ளன.

    இதுகுறித்து தேவர் நினைவாலைய பொறுப்பா ளர் காந்திமீனாள் நடராஜன் கூறுகையில், தேவர் நினைவிடத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவின ரால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட உள்ளது என்றார்.

    ×