search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KT Rajendrabalaji"

    • அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கே.டி.ராேஜந்திரபாலாஜி கூறினார்.
    • கட்சியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்படவேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென் காசி ரோட்டில் உள்ள ஓட்ட லில் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்க ளான பூத் கமிட்டி நிர்வா கிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

    பூத் கமிட்டி பொறுப்பா ளரும், சிறுபான்மை நலப் பிரிவு பொருளாள ருமான மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெயல லிதா பேரவை செயலாளர் என்.எம்.கிருஷ்ணராஜ் வர வேற்றார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்வரும் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர் தல்களில் நமக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த நேரத்தில் நாம் கிளைக் கழகங்களில் கட்சியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்படவேண் டும்.

    பூத் கமிட்டி நிர்வாகிகள் அர்ப்பணிப்போடு செயல் பட்டால் நாம் வெற்றிக்க னியை எளிதாக பறித்து நமது பொதுச் செயலாளர் எடப்பாடியாரை முதல மைச்சராக்கி தமிழகத்தை மீண்டும் வளம்பெற செய்ய முடியும். அ.தி.மு.க. கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்க ளுக்கு செயல்பாட்டுக்கு ஏற்ப தக்க மதிப்பு அளிக்கப் படும். இன்றே களத்தில் இறங்கி வேலைபாருங்கள் என்றார்.

    கூட்டத்தில் நகர செய லாளர்கள் வக்கீல் துரை முருகேசன் பரமசிவம், ஓன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.குருசாமி, நவரத்தி னம், பேரூர் செயலாளர்கள், மகளிரணி நகர செயலாளர் ராணி, மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தார் ஒன்றிய செயலாளர் மயில் சாமி, மாவட்ட அரசு போக் குவரத்து சங்க கவுரவ தலை வர் குருசாமி,

    மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், செட்டியார்பட்டி அங்குதுரை பாண்டியன் மகளிரணி ராணி கவிதா, விமலா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரி யான், மாவட்ட பேரவை துணை தலைவர் திருப்பதி, துணை செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சோலைமலை, யோகசேக ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள் ளையின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவ காசியில் திருத்தங்கல் வ.உ.சி. சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைப்பு செயலா ளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர் மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபு ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வேண் டுராயபுரம் சுப்பிர மணியன், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டி யன், ஷாம் என்ற ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ்.

    கருப்பசாமி, லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரி முத்து, கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மாநகர கவுன்சிலர் கரை முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் பாண்டிய ராஜன், தலைவர் செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜெயந்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திபாலாஜி கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி.

    சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்.

    ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், விருதுநகர் நகர செயலாளர் முகமது நெய்னார், விருதுநகர் கிழக்கு ஒன்றியசெயலாளர் தர்மலி ங்கம், விருதுநகர்மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன்.

    அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாள கருபப்சாமிபாண்டியன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×