search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய கும்பாபிஷேக விழா
    X

    யாக சாலையை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் பார்வையிட்டார்.

    முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய கும்பாபிஷேக விழா

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய கும்பாபிஷேக விழா யாக சாலையை பிச்சை குருக்கள் பார்வையிட்டார்,
    • 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன் கும்பாபி ஷேகமும் நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ந் தேதி ஆன்மீக விழாவும், 29-ந் தேதி அரசியல் விழாவும், 30-ந் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன.

    வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் மற்றும் குழுவினர் பசும்பொன் வந்து யாகசாலை பூஜை பணிகளை பார்வையிட்டு சிவாச்சாரியார்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை விக்னேசுவரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும் 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணி அளவில் அன்னதானம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, தங்கவேல், சத்தியமூர்த்தி உள்பட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×