search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை
    X

    தேவர் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி செலுத்தினார். அருகில் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.

    தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை

    • தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர் சாமிநாதன் வருகை தந்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிரூபர்க ளிடம் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். நினைவிடம் முன்பாக பொதுப்பணித்துறை மூலம் தற்காலிக கொட்டகை அமைத்து பயன்ப டுத்தப்பட்டு வந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் முத்துராம லிங்கம், முருகேசன் ஆகியோர் வேண்டு கோளுக்கிணங்க பொது மக்கள் பயன்பாட்டிற்காக நினைவிடம் முன்பு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிரந்தரமாக மேற்கூரை அமைக்கவும், மேலும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதியோடு பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குநர் (செய்தி), இணை இயக்குனர் (நினைவகங்கள்) தமிழ் செல்வராஜன், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர்பாட்சா முத்து ராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், திவாகரன், வட்டாட்சியர் சேதுராமன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ரா தேவிஅய்யனார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கர பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், பழனி, குமார், தங்கவேல் உட்பட பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    Next Story
    ×