என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry Flush"

    • இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்களிடம் 8 பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம்  காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

    அரசகுளத்தைச் சேர்ந்த மீனாட்சி (வயது 55) என்பவர் கூட்ட நெரிசலில் நின்று கொண்டு கும்பாபி ஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். 

    இதேபோல் அரசகுளத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரிடமும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். 

    2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
    ×