search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private financial institution"

    • இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
    • மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    களக்காடு:

    கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின் கிளை நெல்லை மாவட்டம் களக்காடு அண்ணா சாலையில் உள்ளது. இங்கு மேலாளர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    சமீபத்தில் இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், களக்காடு கிளையில் கணக்கு விபரங்கள் மற்றும் நகை இருப்பு குறித்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து அதே போல் போலியாக நகைகளை தயாரித்து உள்ளே வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகைகளை நிதிநிறுவன ஊழியர்கள் எடுத்து கொண்டதும், அதனை வேறு ஒரு அடகு கடை நடத்திவரும் நபரின் மூலமாக விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வாறாக சுமார் ரூ.7 1/4 கோடி வரையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை அலுவலக அதிகாரிகள், நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தனுசியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் தொடர்புடைய 5 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரையிலும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் முக்கிய நபர் ஒருவரை போலீசார் பிடித்து வந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அந்த நபர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (30). இவரது மனைவி வித்யா. பிரதாப் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்திருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவின ர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரதாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்து தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை சரவணம் பட்டியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்திற்கு பூ மார்க்கெட், துடியலூர் உள்ளிட்ட மாநகரில் 5 கிளைகளும், அன்னூர் உள்பட புறநகரில் பல கிளைகளும் உள்ளன.

    இந்த நிறுவனத்தினர் மாதத் தவணையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணம் கட்டினார்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலில் பணம் கட்டியவர்களுக்கு அதனை வட்டியுடன் திரும்பி கொடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் கேட்ட போது, சில மாதங்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி உள்ளார்.

    கடந்த மே மாதம் முதல் சரவணம்பட்டி தலைமை அலுவலகம் மற்றும் கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள நிதி நிறுவனத்தில் அனைத்து கிளைகளும் திடீரென மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்தவர்களும் வேலைக்கு வரவில்லை.

    இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்டது போது சுவிட்ஆப் என வந்தது. நிதி நிறுவன உரிமையாளர் ரூ. 1½ கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கோவை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ், பூமார்க்கெட் ராஜேஷ், சரவணம் பட்டி விநாயகபுரம் சேதுராமன், விஜயகுமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 20 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் நிதி நிறுவன உரிமையாளரிடம் இருந்து பணத்தை தங்களுக்கு பெற்று தர வேண்டும் என கூறி உள்ளனர். மனு கொடுக்க வந்தவர்களில் ஒண்டிப்புதூரை சேர்ந்த சதிஷ் ரூ.4½ லட்சம் ஏமாந்ததாக கூறினார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, நாங்கள் குடும்ப செலவு மற்றும் கல்வி, தொழில் உள்ளிட்டவைகளுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டி இருந்தோம்.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 1½ கோடி வரை நிதி நிறுவன உரிமையாளர் ஏமாற்றி தலைமறைவாகி விட்டார். எங்கள் பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.
    திண்டுக்கல் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி பெற்றுத் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
    திண்டுக்கல்:

    சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு திண்டுக்கல் - நத்தம் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனாக கருணாகரன் உள்ளார். திண்டுக்கல் குள்ளனம்பட்டி மற்றும் பொன்னகரம் பகுதியில் இயங்கி வந்த நிதி நிறுவனங்களுக்கு லோனா பிரிஜித் என்பவர் மேலாளராக உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தில் பணிபுரிய 35 பேர்களை தேர்வு செய்தனர். திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்கு சேர்ந்த இவர்களிடம் தலா ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் டெபாசிட்டாக வாங்கப்பட்டது. முதல் 3 மாத பயிற்சி காலத்தில் ரூ.5500 சம்பளம் என்றும் அதன் பிறகு ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    6 மாதங்கள் கழித்து அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை மீண்டும் தந்து விடுவதாகவும் நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    3 மாத பயிற்சிக்கு பிறகு அவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தங்கள் நிதி நிறுவனம் மூலம் கடன் உதவி வழங்குவதாக உறுப்பினர்களை சேர்த்தனர். அவர்களிடம் இருந்து தலா ரூ.300 முதல் ரூ.1500 வரை பணம் வசூலிக்கப்பட்டு 600 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் பலருக்கு கடன் உதவி வழங்கப்படவில்லை. கடந்த 4 மாதங்களாக நிறுவனம் பூட்டியே கிடக்கிறது. சேர்மன் மற்றும் கிளை மேலாளரை தொடர்பு கொண்டாலும் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், பல்வேறு கிராமங்களில் இருந்து 35 பேர் இங்கு டெபாசிட் தொகை செலுத்தி வேலையில் சேர்ந்தோம். அவர்கள் கூறியபடி சம்பளம் வழங்கவில்லை. ரூ.2 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். எங்களது டெபாசிட் தொகையை மனதில் வைத்து நாங்கள் தொடர்ந்து வேலை பார்த்து வந்தோம். நாங்கள் உறுப்பினர்களாக சேர்த்து விட்ட நபர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளோம். தற்போது அவர்கள் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

    இந்நிறுவனம் எங்கள் டெபாசிட் தொகையையும் சேர்த்து ரூ.80 லட்சம் வரை மோசடி செய்துள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். எஸ்.பி. உத்தரவின் பேரில் நகர் வடக்கு போலீசார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கருணாகரன், திண்டுக்கல் காவேரிநகரைச் சேர்ந்த உறவினர் புவனேஸ்வரி, மேலாளர் லோனா பிரிஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்கள் தங்கள் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை ஆணை பெற்றுள்ளனர். எங்களிடம் பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்ந்து மிரட்டி வருவதால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நகர் வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews
    ×