search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erode market"

    • மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
    • சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீன்கள் வரத்து சற்று அதிகரித்து வந்தது.

    கடந்த வாரம் 20 டன்கள் மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. மீன் வரத்து குறைவு எதிரொலியாக சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    குறிப்பாக வஞ்சரம் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் வெள்ளை வாவல் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.900-க்கு விருப்பப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.1,300 ஆக அதிகரித்து விற்கப்படுகிறது.

    அதே சமயம் இறால், சீலா, மயில் மீன், பொட்டு நண்டு ஆகிய மீன்கள் கடந்த வாரத்தை விட இன்று விலை குறைந்துள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 8 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது .

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-250, வஞ்சரம்-1000, விளா மீன்- 350, தேங்காய் பாறை-500, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-750, இறால்-600, சீலா-450, வெள்ளை வாவல்-1300, கருப்பு வாவல்-850, பாறை-500, மயில் மீன்-700, பொட்டு நண்டு-400, கிளி மீன்-600, மஞ்சள் கிளி-600, கடல் விலாங்கு-350, திருக்கை-400, பெரிய திருக்கை-500, நகர மீன்-450.

    • 12 டன் மீன்கள் வரத்தாகி உள்ளது.
    • மீன்வரத்து எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதமாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் மீன்கள் வரத்தாகி வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு வந்தது. வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 12 டன் மீன்கள் வரத்தாகி உள்ளது. மீன்வரத்து எதிரொலியாக விலையும் சரிந்துள்ளது.

    இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-250, மத்தி-250, வஞ்சரம்-1000, விளாமீன்-350, தேங்காய் பாறை-450, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-700, இறால்-700, சீலா-450, வெள்ளை வாவல்-900, கருப்பு வாவல்-750, பாறை-500, மயில்மீன்-800, பொட்டு நண்டு-450, கிளிமீன்-600, மதனமீன்-500, மஞ்சள்கிளி-300, கடல் விலாங்கு-300, திருக்கை-400.

    இதேபோல் ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இன்று மார்க்கெட்டிற்கு கேரளா, ஆந்திராவில் இருந்து வெறும் 2 ஆயிரம் பெட்டி தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ தக்காளி விலை கிடுகிடுவன உயர்ந்து ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இந்த மாத தொடக்கத்தில் தக்காளி ரூ.20 முதல் 30-க்கு விற்பனையானது. அதன் பின்னர் ரூ.45 முதல் 50 ரூபாய் உயர்ந்து விற்கப்பட்டது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 70 ஆக உயர்ந்தது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    • மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு வெறும் 5 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2 மாதமாக இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மீன்களின் வரத்து குறைந்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் மீன்கள் வரத்தாகி வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வந்தது. வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தடைக்காலத்தையொட்டி மீன்கள் வரத்து 5 டன்னாக குறைந்தது. இதனால் ஒரு சில மீன்கள் விலையும் உயர்ந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இன்று ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு வெறும் 5 டன்கள் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    இன்று சந்தையில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-200, வஞ்சரம்-1200, விளமீன்-500, தேங்காய் பாறை-500, முரல்-450, நண்டு-400, இறால்-550-600, சீலா-450, கவுரி-600, வெள்ளை வாவல்-1000,

    கருப்பு வாவல்-800, பாறை-500, மயில் மீன்-600, பொட்டு நண்டு-450, கிளி மீன்-600, மதன மீன்-500, மஞ்சள் கிளி-300, கடல் விலாங்கு-300.

    • ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன.
    • கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது .

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    கடல் மீன்கள் அதிக அளவில் விற்கப்படுவதால் மக்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்கி செல்வார்கள். தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் விற்ப னைக்கு வந்தன. இங்கு நாளொன்றுக்கு 8 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்தன.

    இந்நிலையில் இன்று ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் தூத்துக்குடி, காரைக்கால் ,கேரளா நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து 12 டன்கள் மீன்கள் வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை சற்று உயர்ந்திருந்தன.

    சிறிய மீன்கள் கிலோ ரூ. 25 வரையும், பெரிய மீன்கள் கிலோ ரூ.50 வரையும் உயர்ந்திருந்தன.

    இன்று மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    வஞ்சரம்-750, சீலா பெரியமீன்-600, சிறிய மீன்-300, சங்கரா-350, அயிலை-200, மத்தி-170, முரல்-300, திருக்கை-400, சின்னராட்டு-300, பெரியராட்டு-500, மெல்ல வவ்வால்-700, இறால்-650, சின்ன இறால் - 500, சுறா-600, நண்டு-600.

    இதேபோல் கருங்கல்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது . இதனால் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன.
    • இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன் சத்திரம், பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தக்காளி வரத்தும் சரிய தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

    இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வந்தது. இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    ஈரோடு, ஜூன். 9-

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

    இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

    • வரத்து அதிகரித்ததால் ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது.
    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்தது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 7 டன் வரை தக்காளி லோடு வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியது.

    இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு 3 ஆயிரம் டன் வரை மட்டுமே தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தக்காளி விளைச்சல் ஓரளவு அதிகரித்து வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

    இதனால் கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்துள்ளது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 40-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் வ.உ.சி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் தக்காளி விலை சரிவின் காரணமாக 3 கிலோ, 5 கிலோ என அள்ளி சென்றனர்.

    இதனால் இன்று தக்காளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதில் ஈரோடு மார்க்கெட்டிற்கு கடந்த ஒரு மாதமாக போதிய தக்காளி வரத்து இல்லாததால் அதன் விலை உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை ஈரோடு மார்க்கெட்டிற்கு வரத்தான தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் 14 கிலோ கொண்டபெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டன.

    இதன் காரணமாக சில்லரை விலையில் கடந்த சிலநாட்களாக கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் தரமான தக்காளிகள் தற்போது கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்களும், ஓட்டல் கடைக்காரர்களும் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்யும் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “ஈரோடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில்இருந்து வரத்தாகும். ஆனால் தற்போது தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் மட்டுமே குறைந்தளவில் வரத்தாவதால் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரையும்,சில்லரை விலையில் கிலோ ரூ. 45 முதல் ரூ. 50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜூன் மாதம் இறுதியில் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×