search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduced to 8 tonnes"

    • மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
    • சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீன்கள் வரத்து சற்று அதிகரித்து வந்தது.

    கடந்த வாரம் 20 டன்கள் மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. மீன் வரத்து குறைவு எதிரொலியாக சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    குறிப்பாக வஞ்சரம் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் வெள்ளை வாவல் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.900-க்கு விருப்பப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.1,300 ஆக அதிகரித்து விற்கப்படுகிறது.

    அதே சமயம் இறால், சீலா, மயில் மீன், பொட்டு நண்டு ஆகிய மீன்கள் கடந்த வாரத்தை விட இன்று விலை குறைந்துள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 8 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது .

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-250, வஞ்சரம்-1000, விளா மீன்- 350, தேங்காய் பாறை-500, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-750, இறால்-600, சீலா-450, வெள்ளை வாவல்-1300, கருப்பு வாவல்-850, பாறை-500, மயில் மீன்-700, பொட்டு நண்டு-400, கிளி மீன்-600, மஞ்சள் கிளி-600, கடல் விலாங்கு-350, திருக்கை-400, பெரிய திருக்கை-500, நகர மீன்-450.

    ×