என் மலர்
நீங்கள் தேடியது "உப்பு தன்மை"
- நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது.
- அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனக் கூறுவார்கள். காரணம் உப்பு இல்லையேல் எந்தப் பொருளையும் சாப்பிட முடியாது. அறுசுவை உணவாக இருந்தாலும் அந்த சுவையை உணர வைப்பதே உப்புதான். ஆனால் அதுவே அதிகமானால்...? நாம் சந்திக்கக்கூடிய விளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
உயர் ரத்த அழுத்தம்
அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. உப்பு ரத்த ஓட்டத்தில் தண்ணீரைத் தக்கவைத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
திசுக்களில் நீர் தேக்கம்
உப்பு அதிகமாக சாப்பிடுவதால் திசுக்களில் நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதிக சோடியம் உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கச் செய்கிறது. இதனால் கணுக்கால், பாதங்கள் அல்லது கைகளில் வீக்கம் ஏற்படலாம். இது நீரிழப்பு, வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
சிறுநீரக பிரச்சனைகள்
அதிகமாக உப்பு உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை கடினமாக்குகிறது. உடலில் உப்பு அதிகமாகும்போது சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்ட வேண்டியிருக்கும். காலப்போக்கில், இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் உப்பு அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு, சிறுநீர் கருமையாகி, அடர்த்தியாக வெளியேறி, கடுமையான துர்நாற்றம் வீசும்.

ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் உப்பு போதுமானது
தாகம்
உப்பு உணவை எடுத்துக்கொண்ட பிறகு வாய் வறண்டுப்போனது போல தோன்றும். ஏனெனில், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க நீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்க உடனே தாகம் எடுக்கிறது.
தூக்கக் கலக்கம்
அதிக உப்பு பயன்பாடு தூங்குவதில் சிரமம், நள்ளிரவில் விழித்தெழுதல், சோர்வாக உணர்தல், எழுந்திருக்கும்போது தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
செரிமான கோளாறுகள்
அதிக உப்பு உட்கொள்ளல் காரணமாக வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வுகள் கூட அதிகரிக்கக்கூடும்.
அடிக்கடி தலைவலி
அதிக உப்பை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.
இதயநோய்
நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 மில்லிகிராம் உப்பு எடுத்துக்கொண்டாலே போதும். அதிகப்படியான உப்பு பக்கவாதம் , இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
- நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது.
- இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரில் உப்பு தன்மை அதிகரித்துள்ளதால் விவசா யிகள் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக் கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளி யேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி பல வருடங்க ளாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப் பட்டு வருகிறது.
ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவு கள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஆனால், கடந்த டிசம்பர் மாதங்களில் மழை வெள்ள நீர் அதிகமாக வந்ததால் சாயக்கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 330 டி.டி.எஸ் என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்க வில்லை நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 1860 டி.டி.எஸ்., சாக உயர்ந்துள்ளது.
தற்போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் கலந்து நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆற்றங்கரை யோர விவசாயிகள் கூறுகையில்:
நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் கடந்த மாதம் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்தோம். ஆனால், திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை களால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.
உப்பு தன்மையும் அதிகரித்து விட்டது இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம் என்றனர்.
- வல்லுனர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு
- 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.
இந்தசிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடை பெற்றுவருகிறது. இந்த பணி கடந்த ஜூன் மாதம்
6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மைஅகற்றப்பட்டு கடுக்காய் சுண்ணாம்பு பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது. தற்போது திருவள்ளுவர் சிலையில் படிந்துஉள்ள உப்புதன்மையை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்ட காகித கூழ் பூசும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக சிலையில் மீண்டும் நல்ல தண்ணீர் பாய்ச்சி கழுவி சுத்தம் செய்த பிறகு ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி, மத்திய மின் வேதியியல் ஆய்வு நிலைய தலைமை விஞ்ஞானிகள் டாக்டர் சரஸ்வதி, டாக்டர் முரளிதரன், டாக்டர் அருண் சந்திரன், தொல்லியல் துறை உதவி கண்காணிப்புவேதியலாளர்பிரஷோபராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் உள்படதொல்லியல் துறை வல்லுனர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த கெமிக்கல் நிறுவன வல்லுநர்கள் கன்னி யாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தனர்.
பின்னர் இந்த குழுவினர் இதுகுறித்து கன்னியாகுமரி வந்த தமிழக சுற்றுலாத்துறை ஆணையரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருமான சந்திப் நந்தூரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.






