என் மலர்
நீங்கள் தேடியது "Weakness"
- நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது.
- அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனக் கூறுவார்கள். காரணம் உப்பு இல்லையேல் எந்தப் பொருளையும் சாப்பிட முடியாது. அறுசுவை உணவாக இருந்தாலும் அந்த சுவையை உணர வைப்பதே உப்புதான். ஆனால் அதுவே அதிகமானால்...? நாம் சந்திக்கக்கூடிய விளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
உயர் ரத்த அழுத்தம்
அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. உப்பு ரத்த ஓட்டத்தில் தண்ணீரைத் தக்கவைத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
திசுக்களில் நீர் தேக்கம்
உப்பு அதிகமாக சாப்பிடுவதால் திசுக்களில் நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதிக சோடியம் உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கச் செய்கிறது. இதனால் கணுக்கால், பாதங்கள் அல்லது கைகளில் வீக்கம் ஏற்படலாம். இது நீரிழப்பு, வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
சிறுநீரக பிரச்சனைகள்
அதிகமாக உப்பு உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை கடினமாக்குகிறது. உடலில் உப்பு அதிகமாகும்போது சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்ட வேண்டியிருக்கும். காலப்போக்கில், இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் உப்பு அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு, சிறுநீர் கருமையாகி, அடர்த்தியாக வெளியேறி, கடுமையான துர்நாற்றம் வீசும்.

ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் உப்பு போதுமானது
தாகம்
உப்பு உணவை எடுத்துக்கொண்ட பிறகு வாய் வறண்டுப்போனது போல தோன்றும். ஏனெனில், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க நீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்க உடனே தாகம் எடுக்கிறது.
தூக்கக் கலக்கம்
அதிக உப்பு பயன்பாடு தூங்குவதில் சிரமம், நள்ளிரவில் விழித்தெழுதல், சோர்வாக உணர்தல், எழுந்திருக்கும்போது தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
செரிமான கோளாறுகள்
அதிக உப்பு உட்கொள்ளல் காரணமாக வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வுகள் கூட அதிகரிக்கக்கூடும்.
அடிக்கடி தலைவலி
அதிக உப்பை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.
இதயநோய்
நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 மில்லிகிராம் உப்பு எடுத்துக்கொண்டாலே போதும். அதிகப்படியான உப்பு பக்கவாதம் , இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
- நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது.
- ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது.
நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சினைகள் அவர்களை தாக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த நோயை கண்டுபிடிக்கிறார்கள்.

நீரிழிவு நோயினால் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, அதிலும் குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய் கொண்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது "டயாபடிக் நெப்ரோபதி". இந்த நிலையைத் தடுக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4-6 மாதங்களுக்கு ஒரு முறை `மைக்ரோ அல்புமின்யூரியா' என்ற எளிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது `டயாபடிக் நியூரோபதி'.

இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவ்ஜிவ் என்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும் கேங்ரீன் போன்ற நோய்த்தொற்றையோ, ஊனத்தையோ ஏற்படுத்தக்கூடும்.

நீரிழிவு நோய் ரத்த தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதய பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்த சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்த பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள் ஆகும்.






