search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton bales"

    • விவசாயிகள் 4500 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர்.
    • கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர் புறம் அமைந்துள்ளது.

    இங்கு விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.

    அந்த வகையில் அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம்,

    பச்சம் பாளை யம், கள்ளிமடை குட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தி களை அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து பருத்திகளை வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண் காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் புளி யம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவினாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்திகளை ஏலம் எடுக்கிகிறார்கள். இதை தொடர்ந்து விளை ச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    கடந்த வாரம் விவசாயிகள் 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். ஆனால் இந்த வாரம்அதிக அளவில் 4 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் வந்திருந்தனர்.

    இதனால் கடந்த வாரம்த்தைவிட இந்த வாரம் 500 மூட்டைகள் அதிக அளவில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரை மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    அந்த வகையில் தற்போது பருத்தி வரத்து அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை, குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்கி சென்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரை மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இந்த வாரம் 5 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×