search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector speech"

    • படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    அம்மாபேட்டை:

    பவானி வட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், பட்டா மாறுதல்,புதிய குடும்ப மின்னணு அட்டை வழங்குதல், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட கவுன்சிலர்கள் மோகனசு ந்தரம், சதாசிவம், படவல் கால்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆராயி,பூனாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பேசுகையில்,

    முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.

    மேலும் இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படு கிறது.

    இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரி களும் வந்து தங்களது துறை சார்ந்த குறைகளை பொது மக்கள் நிவர்த்தி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தனர். இதனை பொதுமக்கள் அந்தந்த காலகட்டத்தில் செய்து கொள்ள வேண்டும் உதார ணமாக ஒரு சாதி சான்று குழந்தைகளுக்கு எடுப்பதாக இருந்தால் கடைசி நேரத்தில்தான் நாம் அதிகாரிகளை அணுகு கிறோம்.

    அதனைத் தவிர்த்து பட்டா மாறுதலாக இருந்தா லும் சரி, வாரிசு சான்றிதழாக இருந்தாலும் சரி அந்தந்த கால தேவைகளை அப்போதே அதிகாரிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    அரசு வழங்கும் நல திட்டங்களை பொது மக்கள் அந்தந்த கால கட்டத்தில் விழிப்பு ணர்வுடன் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான சில உதார ணங்களை நகைச்சுவை உணர்வுடன் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார். முன்னதாக காட்டூரில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி புத்தகங்களை வழங்கினார். பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் வரவேற்று பேசினார். முடிவில் பவானி தாசில்தார் தியாகராஜன் நன்றி கூறினார். 

    • மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாணவர்கள் யாரேனும் இடையில் நின்று விடுகிறார்களா? என கண்காணிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரே னும் தொடர்ந்து வருகை தராமல் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த மாண வரின் படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும். இடைநிற்றலை தவிர்க்க தேவையான இடங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

    அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கத்தில் வருகை தந்த மாணவ -மாணவிகள் முழு ஆண்டு தேர்வு முடியும் வரை வருகை தருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதே போல பள்ளிக்குத் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும்.

    குடிநீர் வசதி, கழிப்பறை கட்டிடங்கள் போதிய அளவு அமைத்திட வேண்டும். மேலும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கி மாண வர்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், பிரின்ஸ், முருகவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் பாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
    • மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது,

    மாணவ, மாணவிகள் படிக்கும்போது பாடங்களை நன்கு புரிந்து படிக்க வேண்டும். அதேபோல் படிக்கின்ற காலத்திலேயே உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து அதற்கேற்ப பாடங்களை படிக்க வேண்டும். படித்தோம், பட்டம் வாங்கினோம், வேலை கிடைத்தது என்றாலும் படிக்கும்போது நன்றாக படித்தால்தான் பணியில் திறமைகளை வெளிக்காட்டி ஒளிர முடியும்.

    மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதில் 'நான் முதல்வன்' திட்டத்தில் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. அதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இது போட்டியான உலகம். அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். படிக்கும் பாடங்களை நன்று உணர்ந்து படிக்க வேண்டும். பல லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்களே என்ற கவலை அடைய கூடாது. அதில் முழுமையாக போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தி படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். அவர்களில் 500 அல்லது ஆயிரம் நபர்களுக்குள் வந்தால் போதும் அரசு பணி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

    அரசு தொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி, ரூ.10 லட்சம் வரை பிணையில்லாத கடனுதவி உள்ளிட்ட நீட்ஸ் திட்டம், தாட்கோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கடனுதவிகளை வழங்கி வருகிறது. தொழில் தொடங்குவதன் மூலம் நீங்கள் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் ஆட்டோக்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கிய காட்சி. அருகில் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் பலர் உள்ளனர்.
    • தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுகுட்பட்ட 23 ஊராட்சி மன்றங்களுக்கும் ரூ.49.50 லட்சம் செலவில் சோலாரால் இயங்கக்கூடிய 23 ஆட்டோக்கள் குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்டன.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுகுட்பட்ட 23 ஊராட்சி மன்றங்களுக்கும் ரூ.49.50 லட்சம் செலவில் சோலாரால் இயங்கக்கூடிய 23 ஆட்டோக்கள் குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்டன.

    கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் வரவேற்றார்.திட்ட இயக்குனர் சுரேஷ், கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆட்டோ வழங்குவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு ரூ.16.50 லட்சம் வழங்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு பேசுகையில் நமக்கு நாமே திட்டம் நல்ல திட்டம். இதில் அரசு 2 மடங்கும்,சோகோ சார்பில் ஒரு மடங்கு மதிப்பும் அடங்கப்பட்டுள்ளது.

    அனைத்து கிராமங்களிலும் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது நகரத்தை தேடி செல்லும் மக்கள் கிராமத்தை தேடி வருவார்கள். கிராமத்தில் தூய்மை தான் முக்கியம். தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் முன்மாதிரியான தூய்மையான மாவட்டமாக இருக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கூறியதாவது:-

    நகரங்களில் குப்பை மேடுகள் உருவாவதை போல் கிராமங்களிலும் தற்போது ஆங்காங்கே குப்பைகள் உருவாகி வருவதை தடுப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். கடையம் யூனியன் கோவிந்தபேரி ஊராட்சி மன்றம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து முன் மாதிரியாக சிறப்பாக செயல்படுவது போல மற்ற 22 ஊராட்சி மன்றங்களும் குப்பைகளை பிரித்து பிளாஸ்டிக் இல்லாத யூனியனாக முழுமையான சுகாதாரமான ஊராட்சி யாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தூய்மையாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன்,தெற்கு மடத்தூர் பிரேம ராதா ஜெயம், ரவணசமுத்திரம் முகமது உசேன் ,தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, வெங்கடாம் பட்டி சாருகலா ரவி, ஏ.பி.நாடானூர் அழகுதுரை, துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித்,முதலியார்பட்டி முகைதீன் பீவிஅசன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் நன்றி கூறினார்.

    • தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் வாரவிழாவையொட்டி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • குழந்தைகளை சிறந்த திறமையானவர்களாக உருவாக்க வேண்டும்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து விரிவாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    உலக தாய்ப்பால் வார விழா 2022 ஆகஸ்ட் 1 முதல் 7 வரை சிறப்பாக நடத்தி வளரிளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடையே தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்க ப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு "தாய்ப்பால் அளிப்பதை உயர்த்துவோம் கற்பிப்போம் ஆதரிப்போம்" என்ற கரு ப்பொருளை கொண்டுள்ளது.

    ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை அடையவும், ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதையும், சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்கள் குறித்தும், சிறந்த ஆரோக்கிய மானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவாக்கிடும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும்.

    எனவே, கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட்டு, கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு, சத்துணவு பெட்டகம் வழங்குதல், அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பதாகைகள் அமைத்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து கருவுற்ற தாய்மார்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மகளிர் சுய உதவிக்கு ழுவினரை கொண்டு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கின்ற கருவுற்ற மற்றம் பாலூட்டும் தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தாய்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்ப ட்டு வருவதை மேலும் துரிதப்படுத்தி, துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணி யாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    ×