search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம்
    X

    திருமங்கலத்தில் நடந்த வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். 

    அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம்

    • அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    மதுரை

    திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப் பட்டது. தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடை பெற்று, டெண்டர் கோரப் பட்டது. தற்போது பழைய நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கூட, மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது. அதில் கப்பலூர் டோல்கேட்டையும் அகற்ற தமிழக அரசு வலியு றுத்த வேண்டும்.

    திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பாராமுகம் தான் காட்டப் பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும், நிதியும் வரவில்லை.

    திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் பணி, புதிய பஸ்நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதியை பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×