search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    கடிநெல்வயலில் உப்பு உற்பத்தி நடைபெறுவதை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஆய்வு.
    • ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும், ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 255.21 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னடார் ஊராட்சியில் மேலக்காடு சாலை ரூ. 49.80 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புஷ்பவனம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது மான்ய நிதியின் கீழ் ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, பாஸ்கர் குஜாரத் கெமிக்கல் லிமிடெட் மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

    Next Story
    ×