search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pataneer"

    • கள் விற்ற தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் கள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அன்னையர் தோப்பு பண்ணை அருகே 2 பேர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அந்த பாட்டில்க ளை சோதனை செய்த போது அது கள் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள்

    மீனாட்சி தோட்ட தெருவை சேர்ந்த அர்ஜு னன் (வயது 56) மற்றும் அவரது மகன் செல்வகுமார் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப் பட்டிருந்த 80½ லிட்டர் கள்ளை அழித்த போலீசார் தந்தை, மகனை கைது செய்தனர்.

    • உடன்குடி சுற்றுப்புற பகுதிகிராமங்களில் பனைமரத்தில் பதநீர் எடுக்கும் பணி தொடங்கியது.
    • ஒரு லிட்டர் பதநீர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடிசுற்றுப்புற பகுதிகிராமங்களில் பனைமரத்தில் பதநீர் எடுக்கும் பணி தொடங்கியது. கருப்பட்டி உற்பத்தி விரைவில் தொடங்கும் என தெரிவித்தனர். உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உருவாகும் கருப்பட்டி உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு ஊர் ஊராக சென்று விற்பனை ஆகும்.

    ஒவ்ேவாறு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என 5 மாதங்கள் நடைபெறும். இந்த ஆண்டு இப்பகுதியில் மழைமிக மிக குறைவாக பெய்ததால் பனைமரத்தில் ஏறி இறங்கி, பதநீர் எடுக்கும் பணி முன்னதாக தொடங்கி, தற்போது பதநீர் வந்துவிட்டது. குறைவான பதநீர் இருப்பதால் இதைகாய்ச்ச முடியாது என்பதற்காக பதநீராகவே விற்பனை செய்கின்றனர்,

    ஒரு லிட்டர் பதநீர் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உடன்குடி பகுதியில் பல இடங்களில் பதனீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. இது பற்றிபதநீர் விற்பனை செய்த ஒரு பெண் கூறியதாவது:-

    தற்போது குறைவாகவே பதநீர் கிடைப்பதால் அதை விற்பனை செய்கிறோம், கூடுதலாக பதநீர் வரும்போது கருப்பட்டி தயார் செய்து விற்பனை செய்வோம். எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் கருப்பட்டியை விரைவில் உற்பத்தி செய்வோம் என்று கூறினார்.

    ×