என் மலர்
நீங்கள் தேடியது "Eyes"
- உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
- சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.
இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.
காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.
உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்
தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
- வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
- சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் குணமாகும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
செவ்வாழையில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.
பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.
- நெற்குப்பையில் பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
- தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியது.
இந்த கண்மாயில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியவுடன் பாரம்பரிய முறைப்படி நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கிராமத்தினர் ஒன்றுகூடி சிறிய மண் பானையில் கருப்பு-வெள்ளை பொட்டு வைத்து, பொட்டுகலயத்தை கீழத்தெருவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பெரியகண்மாய் மடைபகுதி கரையில் பாரம்பரிய முறைப்படி ஊர்முக்கியஸ்தர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆழமான இடத்தில் குச்சியின் நுனிப்பகுதியில் வைக்கோல் வைத்து கட்டப்பட்டு அதன்மேல் பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியதற்கு அடையாளமாக பெண்கள் குலவையிட, வாண வேடிக்கையுடன் பொட்டுகலையம் வைக்கப்பட்டது.
பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டி யவுடன் பாரம்ப ரிய முறைப்படி பொட்டுக்கலை யம் வைத்து வழிபாடு செய்வது இந்த ஆண்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்களின் ஐதீகமாகும்.
பெரிய கண்மாய் முழுகொள்ளவை எட்டும்போதல்லாம் திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த், உதவியாளர் முரளி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
- கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை.
கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மூளை போன்று கண்ணுக்கும் அதிகப்படியான வேலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய தலைமுறைகள். இதனால் உடல்ரீதியிலான குறைபாடுகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.
ஆரோக்கியத்தோடு அதிகம் சந்திக்கும் பிரச்சினைகள் என்றால் அது அழகு சார்ந்த பிரச்சினை தான். குறிப்பாக கண்கள் பொலிவிழந்து காணப்படும். முகத்தில் அழகாய் இருக்க கூடியவை கண்கள். ஆனால் கண்களுக்கு கீழ் கருவளையங்கள், கருமை நிறம், கண் இரைப்பைக்கு கீழ் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வரகூடும்.
ஒருவகையில் இது ஆரோக்கியம் குறைபாடு என்பதையும் குறிப்பிட வேண்டும். உடலில் வைட்டமின் சத்துகள் குறையும் போதும், நச்சுகள் வெளியேறாத போதும் இந்த பிரச்சனைகள் வந்தாலும் கூட மறுபுறம் சருமத்தை கண்களை உரிய பாதுகாப்பில்லாமல் வைக்கும் போதும் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துவிடும்
சுட்டெரிக்கும் வெயில் வாட்டவும் தொடங்கியுள்ளது. வெப்பம் மிகுந்த நமது நாட்டில் இயல்பாகவே உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது இயல்பாக உண்டாகும் ஆரோக்கிய குறைபாட்டில் அழகு சார்ந்த பிரச்சினையும் உண்டாகக் கூடும். அதில் முக்கியமானது கண்கள்.
கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை. ஓய்வும் தேவை. ஆனால் இரண்டும் கொடுக்காமல் அதிக வேலை கொடுக்கும் இந்த வெயில் காலத்தில் உரிய முறையில் கண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் கண் பார்வை பிரச்சனை, கருவளையம் பிரச்சனை போன்றவற்றை தவிர்க்கலாம் என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்கள்.
இந்த கண்களை எப்போதும் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது பாதாம். ஆரோக்கியமான உணவின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பது போலவே இது அழகு சார்ந்த குறிப்பிலும் சருமத்துக்கு சத்து கொடுக்கும் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பாதாம் பருப்பை முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் கண்கள் சத்துக்களையும் பொலிவையும் இழக்காமல் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம்
பாதமை பொடித்து வைத்துகொள்ளுங்கள். வாரம் ஒரு முறை 30 எண்ணிக்கை பாதாமை மிக்சியில் பொடித்து வைத்துகொள்ளுங்கள். தினமும் தூங்குவதற்கு முன்பு அரை டீஸ்பூன் பாதாம் பருப்புடன் மூன்று டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். பிறகு கண்களின் கீழ் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மீதி இருப்பதை முகத்திலும் தடவிக் கொள்ளுங்கள். சற்று காய்ந்ததும் முகத்தை கழுவாமல் அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதுமானது.
தினமும் இரவில் இதை பயன்படுத்தி வரும் போது கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அவை படிப்படியாக குணமடையக்கூடும். கண்களில் கருவளையத்தால் உண்டான கருமையும் சிறிது சிறிதாக மறைய கூடும். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம், கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்தில் படிந்திருக்கும் கரு மையான நிறம் அனைத்துமே நீங்கும். குறிப்பாக கண்கள் புத்துணர்ச்சியோடு இருக்கும். இதனால் கண்கள் மேக்- அப் போடாமலேயே அழகாக இருக்கும். லேசான ஒப்பனையிலும் கண்கள் பளிச்சென்று இருக்கும். சோர்வு இல்லாத கண்களை எப்போதும் பெறுவீர்கள்.
முக பராமரிப்பு என்னும் போது கண்களுக்கு பராமரிப்பு கொடுப்பதும் முக்கியம். பாதாம் அதிக விலை என்பவர்கள் முகத்துக்கு இல்லையென்றாலும் கண்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக பாதாமை பயன்படுத்தலாம். பாதாம் பருப்பை பொடித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். நிச்சயம் கண் ஆரோக்கிய மாகவே அழகு கூடும்.
பராமரிப்பு கடந்து அன்றாட வாழ்க்கையிலும் சில மாற்றங்களை கடைபிடியுங்கள். கோடைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடலுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்வது அவசியம். பழச்சாறுகள், கீரைகள், காய்கறிகள் இவை எல்லாவற்றையும் தாண்டி தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன்புவரை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
கம்ப்யூட்டர், டீவி முன்பு அதிக நேரம் செலவழிக்ககூடாது. செல்போன் அதிக நேரம் பார்க்க கூடாது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதற்கேற்ப சிறுநீரையும் வெளியேற்ற வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் கண்ணை கண் போல் ஆயுள் வரையும் பாதுகாக்கலாம். கண்கள் காந்த கண்களாக எப்போதும் அழகாய் மிளிர தேவதையாய் வலம் வரவும் செய்யலாம்.
- காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது.
- சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களை பாதுகாக்கிறது.
நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இயங்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன், ரத்தத்தின் மூலமே கடத்தப்படுகிறது. ஆனால் கண்ணில் உள்ள கருவிழிகளுக்கு மட்டும் ரத்தம் பாய்வதில்லை. பின்பு எப்படி தேவையான ஊட்டச்சத்து கண்களுக்கு கிடைக்கிறது என்று தெரியுமா?
கண்ணீர் மூலமே ஊட்டச்சத்துகளையும், காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது. அதனால், கண்ணீர் நமது கண்ணுக்கு அவசியமானது. லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி, கண்ணின் பக்கவாட்டு முனைக்கு மேல் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. இது தோராயமாக 2 செ.மீ. நீளம் கொண்டது.
லாக்ரிமல் சுரப்பியில் அதிகப்படியான திரவம் சுரக்குமானால், அவை கண் குழாய்கள் வழியாக மூக்கின் நாசி குழிக்குள் சென்று விடுகிறது. கண்ணில் தூசி விழுந்தால், கண்ணில் உள்ள விழி, லென்ஸ் போன்ற பகுதிகளில் கீறல் உண்டாகி, பார்வைத்திறனில் பாதிப்பு ஏற்படுத்தும். சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களில் விழும் தூசியை சுத்தம் செய்து கண்களைப் பாதுகாக்கிறது.
பாக்டீரியாவை எதிர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் கண்களை பராமரிப்பதில் கண்ணீருக்கு அளவில்லாத பங்கு உண்டு. லாக்ரிமல் சுரப்பிகள் குறைவான கண்ணீர் திரவத்தை உற்பத்தி செய்தால் வறட்சி, அரிப்பு மற்றும் கண்களில் எரிதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.
- வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.
- நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம்.
அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் செல்போன் பார்ப்பது, கணினி, அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் வறண்டு விடுகிறது.
மனித உடலில் முக்கியமான பாகங்களில் ஒன்று தான் கண்.. கண்கள் இல்லையென்றால் நமக்கான வேலையைக்கூட நம்மால் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்தை நாம் சந்திக்க நேரிடும். இதனால் தான் கண்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்..
மற்ற நாடுகளை விட இந்தியர்களுக்குத் தான் தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இதை நாம் அலட்சியமாக விட்டுவிடும் போது தான், நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்நேரத்தில் தடுக்கக்கூடிய சில பொதுவான தொற்று அல்லாத கண் நோய்கள் என்னென்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.

நம்முடைய கண்களை எப்போதும் ஈரமாகவும், ஆரோக்கியமாகவும், நோய்த்தொற்று இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் கண்களில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கண்கள் வறட்சியமாக உலர் கண்கள் பிரச்சனையை நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.
அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் கணினி அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் ட்ரை ஆகிறது. எனவே தான் நீங்கள் வெளியில் செல்லும் போது எப்போதும் சன்கிளாஸ் அணிய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு கண்கள் ட்ரை ஆவதைத்தடுப்பதற்கு வேலையின் இடையில் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
கிளௌகோமா என்பது பார்வை நரம்புக்குத் தீங்கு விளைவிக்கும் கண் பாதிப்பாகும். நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம். இது நீரழிவு, கண் அதிர்ச்சி மற்றும் செயலற்ற தன்மை போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு முற்றும் போது உங்களுக்கு பார்வை இழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, கிளௌகோமாவைத் தடுப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று வழக்கமான கண் பரிசோதனைகள் தான். மேலும் வழக்கமான உடற்பயிற்சி கண் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதோடு கண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுகளை விளையாடும் போது கண்ணாடி அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் என்பது கண்களின் ஒரு பொதுவான கோளாறு ஆகும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது கண்ணின் பின்பகுதியை பாதிக்கிறது. இதனால் உங்கள் எதிரில் உள்ள பொருட்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். இதோடு கண்களில் ஏற்படும் வயது தொடர்பான மாற்றங்கள் தான் கோளாறுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் இதை முறையாக சிகிச்சை மேற்கொண்டு கண்டறியவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பல்வேறு வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, வயது தொடர்பான மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பிரச்சனையை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், புகைப்பிடிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதோடு வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை உங்களது வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இப்பிரச்சனை ஏற்படாமல் நீங்கள் தடுக்க முடியும்.

தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனைகளில் ஒன்று தான் கிட்டப்பார்வை. மரபுரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொலைவில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியும். அதே சமயம் தூரத்தில் உள்ள பொருள்கள் மங்கலாகத் தெரியும். இதோடு இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும்.
கிட்டப்பார்வைக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், கிட்டப்பார்வையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக திரை இடைவெளிகளை எடுத்தல், டிஜிட்டல் சாதனங்களில் உங்களின் நேரத்தைக் கட்டுப்படுத்துதல், மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்யவோ படிக்கவோ வேண்டாம், வெளியில் நேரத்தை செலவிடுங்கள், வெளியில் செல்லும்போது சன்கிளாஸ் அணிதல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல், வழக்கமான கண் பரிசோதனை போன்றவற்றை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
- பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கண்கள். கண்கள் இல்லையெனில் நம்மால் எந்த ஒரு வேலையையும் இயல்பாக செய்து முடிக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூட கண் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
* கண்களை பாதுகாக்க கீரை உணவுகளை வாரம் இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
* கண்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். பயணத்தின்போது படிப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல வெளிச்சத்தில் படிக்க வேண்டும்.
* கண்களின் பாதுகாப்புக்கு தினந்தோறும் கண்களை மூடி, மெதுவாக விரல் நுனிகளால் கண் இமைகளை அழுத்தி விட வேண்டும். இப்படி தினமும் 10 முறை செய்ய வேண்டும். இது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளை தூண்டி, கண்ணீர் சுரப்பதை அதிகரிக்கும்.
* ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை, 20 விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். இது கண்களின் தசைகளை தளர்த்தி, கண் அழுத்தத்தை குறைக்கும்.
* வெளியில் செல்லும்போது, சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிய வேண்டும். காற்று அதிகமாக வீசும்போது, கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிய வேண்டும். கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, கண் ரத்த அழுத்தத்தை குறைத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது கண்களுக்கு ஓய்வு அளித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது, கண் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும்.
- கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று உலக கண்ணொ தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இளங்கலை மாணவர்க ளால் உருவா க்கப்பட்ட கண்ணொளி பற்றிய கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருது துரை, நிலைய மருத்துவ அலுவலர் உஷா தேவி மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கண்ணொளி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசும்போது, தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாதாந்திர கண்புரை அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கண் தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துறை பேராசிரியரும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளருமான ஞான செல்வன் தலைமையில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இணை பேராசிரியர் அன்புசெல்வி நன்றி கூறினார்.
முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்த ஒரு மாத அளவில் கண் புரை அறுவை சிகிச்சையில் டாக்டர்களின் பங்களிப்பில் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கண் தானம் செய்வதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்வது மிகவும் எளிது. உடல் தானம் செய்பவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்க 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.
2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
3. சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
4. 4 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம் பெரும்.
5. பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும்.
இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.
ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.
காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
காஜல் கண்களுக்கு உட்பகுதில போடுவது ஒரு வகை, கண்களின் கீழ்ப் பகுதியில் போடுவது மற்றொரு வகை. கண்கள் பெரிதாக, அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கண்களின் உட்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காஜல் அப்ளைப் பண்ணும்போது ரொம்ப அட்ராக்டிவான அழகைக் கொடுக்கும். கண்கள் சிறியதாக இருப்பவர்கள், குட்டி லைன் மாதிரி காஜல் போடலாம். திக்கா போட்டால் கண்கள் இன்னும் ரொம்பச் சிறியதாகத் தெரியும்.
* கண்ணில் இரைப்பையின் முடிகாலில் வரும் கட்டி மிகவும் வலி கொடுக்கும். சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை கூட இருக்கக்கூடும். பொதுவில் உடனடி மருத்துவ உதவி பெறுவதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவது, நீண்ட கால தொந்தரவு இவைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.
* புருவ முடி சிலருக்கு சீக்கிரமாகவே மெலிந்து வரும். வயது, சக்தியின்மை, ஸ்ட்ரெஸ் இவையெல்லாம் ஒரு காரணம் என்றாலும் தலையில் வழுக்கை ஏற்படுவது போல புருவ முடியிலும் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு காரணமாக இருக்கலாம். உரிய கவனம் கொள்ளுங்கள்.
இன்றைய கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து காலை முதல் இரவு வரை வேலை செய்வதே வழக்கமாகி விட்டது. கம்ப்யூட்டர் முன்னேற்றம் உலகையே உங்களிடம் அழைத்து வந்துவிடும் என்றாலும் கண்களுக்கு ஏற்படும் அதிக உழைப்பு பற்றி கண்டிப்பாக கண் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
* கண்கள் சற்று வெளிவந்தது போல் இருந்தாலும் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.
* கண் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் அனைவரும் அறிந்ததே. மஞ்சள்காமாலைக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* சர்க்கரை நோய் பலவித கண் பிரச்சினைகளை கொடுக்கலாம். வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* திடீரென கண் பார்வை மங்குதல், சரியான பார்வை இன்மை போன்றவை உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.
மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.
சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……
* தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும். அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.
* காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
* வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.






