என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eye sight"

    • ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
    • நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும்.

    கண்களிண்களின் மதிப்பு, பார்வைத் திறன் குறையும்போதும், பாதிக்கும்போதும்தான் நமக்குத் தெரியும். ஆனால், எப்போதுமே சில விஷயங்களில் கவனமாக இருந்தால், கண் பார்வையை காத்துக்கொள்ளலாம். தவிர்க்க வேண்டிய அந்த விஷயங்கள் குறித்து பார்ப்போம்...

    நீண்ட நேர செல்பேசி, கணினி பயன்பாடு:

    தற்போது செல்பேசி, கணினி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நீண்டநேரம் இவற்றை பார்த்தால் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவை, தலை வலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன், மின்னணுத் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைப் பாதிக்கும். எனவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க 20-20-20 என்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.

    'சன் கிளாஸ்' அணியாமல் வெளியே செல்வது:

    சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்முடைய சருமத்தை மட்டுமின்றி கண்களையும் மோசமாக பாதிக்கும். இது கண் புரை, கண் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கக்கூடும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அதிலும் வெயிலில் செல்லும்போது 'சன் கிளாஸ்' அணிவது நல்லது.

    கண்களைத் தேய்ப்பது :

    நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும். இதனால் நம்மை அறியாமலேயே நாம் கண்களை அடிக்கடி தேய்க்க நேரும். இப்படிச் செய்வது கண்களை மேலும் பாதிக்கும். கண்களை அதிகமாக தேய்க்கும்போது, ரத்த நாளங்கள் சேதமடையும்.

    இதனால் கருவளையங்கள் போன்றவை ஏற்படும். இவை தவிர, கண்களைத் தேய்க்கும் போது, கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் தொற்றுகள் கண்களைப் பாதிக்கும்.

    தூக்கமின்மை:

    சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மையானது, மங்கிய பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்து நீடித்தால், தீவிர கண் நோய்க்கும் வழிவகுக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

    கண் பரிசோதனையைத் தவிர்ப்பது:

    பெரும்பாலானோர், வழக்கமான கண் பரிசோதனை செய்வதை தவிர்த்துவிடுகின்றனர். பார்வை பாதிக்கப்பட்ட பிறகுதான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால், கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால், கண் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியலாம். உடனே உரிய சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளலாம்.

    • பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
    • எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    கண் பார்வை சிறிது சரியாக இல்லை என்றால் கூட பயம் வந்துவிடும் என்பது உண்மைதான். பார்வை பிரச்சனை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது நம்பிக்கை இழந்து நடக்கவே பயப்படுவதுண்டு. 50 வயதைத்தாண்டிய பலபேருக்கு இந்தப்பிரச்சனை இருக்கிறது. 40 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வரும் வெள்ளெழுத்து பிரச்சனை என்பது சரிசெய்யக்கூடியது. 50 வயதுக்கு மேல் வரும் பார்வைக் குறைபாடு பெரும்பாலும் கண்புரை நோய் (கேட்டராக்ட்) பிரச்சனையாக இருக்கக்கூடும்.

    இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் அன்றாடக் காரியங்களில் கூட தடுமாற்றம் காணப்படும். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயமும், வேறு ஏதாவது பொருட்கள் மீது மோதி விடுவோமோ என்ற பயமும் வந்துவிடும்.

    இதனால் உங்கள் அன்றாட செயல்கள் குறைந்துவிடும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயக்கம் ஏற்படும். பயத்தினால் சரிவர நடக்காததினால் தினமும் நடக்க வேண்டிய நடை குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். பெண்களைப் பொறுத்தவரை அன்றாட வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் தடைபடும். இதனால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்ற அச்சமும் மற்றவர்களை நம்பித்தான் வாழவேண்டுமோ என்ற கவலையும் அதிகமாக வந்துவிடும்.

    இதற்கு தீர்வு: எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் சொல்லும் பரிசோதனைகளை உடனே செய்ய வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்ளச் சொன்னால் உடனே செய்ய வேண்டும். கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கும் உடனடியாக தயாராக வேண்டும்.

    கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை உடனடியாக செய்தால் தான் மறுபடியும் பார்வை பழைய நிலைக்கு வரும். அப்பொழுதுதான் எந்த வேலையையும் மிகச் சாதாரணமாக செய்து முடிக்கலாம் என்ற துணிவு வரும். பார்வை குறைபாடு தானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்.

    • வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.
    • நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம்.

    அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் செல்போன் பார்ப்பது, கணினி, அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் வறண்டு விடுகிறது.

    மனித உடலில் முக்கியமான பாகங்களில் ஒன்று தான் கண்.. கண்கள் இல்லையென்றால் நமக்கான வேலையைக்கூட நம்மால் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்தை நாம் சந்திக்க நேரிடும். இதனால் தான் கண்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்..

    மற்ற நாடுகளை விட இந்தியர்களுக்குத் தான் தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இதை நாம் அலட்சியமாக விட்டுவிடும் போது தான், நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்நேரத்தில் தடுக்கக்கூடிய சில பொதுவான தொற்று அல்லாத கண் நோய்கள் என்னென்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.


    நம்முடைய கண்களை எப்போதும் ஈரமாகவும், ஆரோக்கியமாகவும், நோய்த்தொற்று இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் கண்களில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கண்கள் வறட்சியமாக உலர் கண்கள் பிரச்சனையை நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.

    அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் கணினி அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் ட்ரை ஆகிறது. எனவே தான் நீங்கள் வெளியில் செல்லும் போது எப்போதும் சன்கிளாஸ் அணிய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு கண்கள் ட்ரை ஆவதைத்தடுப்பதற்கு வேலையின் இடையில் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கிளௌகோமா என்பது பார்வை நரம்புக்குத் தீங்கு விளைவிக்கும் கண் பாதிப்பாகும். நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம். இது நீரழிவு, கண் அதிர்ச்சி மற்றும் செயலற்ற தன்மை போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு முற்றும் போது உங்களுக்கு பார்வை இழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

    மருத்துவர்களின் கூற்றுப்படி, கிளௌகோமாவைத் தடுப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று வழக்கமான கண் பரிசோதனைகள் தான். மேலும் வழக்கமான உடற்பயிற்சி கண் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதோடு கண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுகளை விளையாடும் போது கண்ணாடி அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


    வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் என்பது கண்களின் ஒரு பொதுவான கோளாறு ஆகும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது கண்ணின் பின்பகுதியை பாதிக்கிறது. இதனால் உங்கள் எதிரில் உள்ள பொருட்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். இதோடு கண்களில் ஏற்படும் வயது தொடர்பான மாற்றங்கள் தான் கோளாறுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் இதை முறையாக சிகிச்சை மேற்கொண்டு கண்டறியவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பல்வேறு வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, வயது தொடர்பான மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பிரச்சனையை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், புகைப்பிடிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதோடு வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை உங்களது வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இப்பிரச்சனை ஏற்படாமல் நீங்கள் தடுக்க முடியும்.


    தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனைகளில் ஒன்று தான் கிட்டப்பார்வை. மரபுரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொலைவில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியும். அதே சமயம் தூரத்தில் உள்ள பொருள்கள் மங்கலாகத் தெரியும். இதோடு இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும்.

    கிட்டப்பார்வைக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், கிட்டப்பார்வையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக திரை இடைவெளிகளை எடுத்தல், டிஜிட்டல் சாதனங்களில் உங்களின் நேரத்தைக் கட்டுப்படுத்துதல், மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்யவோ படிக்கவோ வேண்டாம், வெளியில் நேரத்தை செலவிடுங்கள், வெளியில் செல்லும்போது சன்கிளாஸ் அணிதல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல், வழக்கமான கண் பரிசோதனை போன்றவற்றை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    ×