என் மலர்
நீங்கள் தேடியது "கண் பார்வை"
- ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
- நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும்.
கண்களிண்களின் மதிப்பு, பார்வைத் திறன் குறையும்போதும், பாதிக்கும்போதும்தான் நமக்குத் தெரியும். ஆனால், எப்போதுமே சில விஷயங்களில் கவனமாக இருந்தால், கண் பார்வையை காத்துக்கொள்ளலாம். தவிர்க்க வேண்டிய அந்த விஷயங்கள் குறித்து பார்ப்போம்...
நீண்ட நேர செல்பேசி, கணினி பயன்பாடு:
தற்போது செல்பேசி, கணினி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நீண்டநேரம் இவற்றை பார்த்தால் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவை, தலை வலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன், மின்னணுத் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைப் பாதிக்கும். எனவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க 20-20-20 என்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
'சன் கிளாஸ்' அணியாமல் வெளியே செல்வது:
சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்முடைய சருமத்தை மட்டுமின்றி கண்களையும் மோசமாக பாதிக்கும். இது கண் புரை, கண் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கக்கூடும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அதிலும் வெயிலில் செல்லும்போது 'சன் கிளாஸ்' அணிவது நல்லது.
கண்களைத் தேய்ப்பது :
நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும். இதனால் நம்மை அறியாமலேயே நாம் கண்களை அடிக்கடி தேய்க்க நேரும். இப்படிச் செய்வது கண்களை மேலும் பாதிக்கும். கண்களை அதிகமாக தேய்க்கும்போது, ரத்த நாளங்கள் சேதமடையும்.
இதனால் கருவளையங்கள் போன்றவை ஏற்படும். இவை தவிர, கண்களைத் தேய்க்கும் போது, கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் தொற்றுகள் கண்களைப் பாதிக்கும்.
தூக்கமின்மை:
சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மையானது, மங்கிய பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்து நீடித்தால், தீவிர கண் நோய்க்கும் வழிவகுக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
கண் பரிசோதனையைத் தவிர்ப்பது:
பெரும்பாலானோர், வழக்கமான கண் பரிசோதனை செய்வதை தவிர்த்துவிடுகின்றனர். பார்வை பாதிக்கப்பட்ட பிறகுதான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால், கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால், கண் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியலாம். உடனே உரிய சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளலாம்.
- பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
- எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
கண் பார்வை சிறிது சரியாக இல்லை என்றால் கூட பயம் வந்துவிடும் என்பது உண்மைதான். பார்வை பிரச்சனை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது நம்பிக்கை இழந்து நடக்கவே பயப்படுவதுண்டு. 50 வயதைத்தாண்டிய பலபேருக்கு இந்தப்பிரச்சனை இருக்கிறது. 40 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வரும் வெள்ளெழுத்து பிரச்சனை என்பது சரிசெய்யக்கூடியது. 50 வயதுக்கு மேல் வரும் பார்வைக் குறைபாடு பெரும்பாலும் கண்புரை நோய் (கேட்டராக்ட்) பிரச்சனையாக இருக்கக்கூடும்.
இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு முதலிய அனைத்துமே மனதைப் பாதித்து கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். சாதாரணமாக நாம் செய்யும் அன்றாடக் காரியங்களில் கூட தடுமாற்றம் காணப்படும். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயமும், வேறு ஏதாவது பொருட்கள் மீது மோதி விடுவோமோ என்ற பயமும் வந்துவிடும்.
இதனால் உங்கள் அன்றாட செயல்கள் குறைந்துவிடும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயக்கம் ஏற்படும். பயத்தினால் சரிவர நடக்காததினால் தினமும் நடக்க வேண்டிய நடை குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். பெண்களைப் பொறுத்தவரை அன்றாட வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் தடைபடும். இதனால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்ற அச்சமும் மற்றவர்களை நம்பித்தான் வாழவேண்டுமோ என்ற கவலையும் அதிகமாக வந்துவிடும்.
இதற்கு தீர்வு: எப்பொழுது உங்கள் கண் பார்வை மீது உங்களுக்கு நம்பிக்கை குறைகிறதோ உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் சொல்லும் பரிசோதனைகளை உடனே செய்ய வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்ளச் சொன்னால் உடனே செய்ய வேண்டும். கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கும் உடனடியாக தயாராக வேண்டும்.
கண் மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சையை உடனடியாக செய்தால் தான் மறுபடியும் பார்வை பழைய நிலைக்கு வரும். அப்பொழுதுதான் எந்த வேலையையும் மிகச் சாதாரணமாக செய்து முடிக்கலாம் என்ற துணிவு வரும். பார்வை குறைபாடு தானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்.
ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.
எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.
அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.
பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.
ஏமனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மத்திய ஏமனை சேர்ந்த இஸ்லாம் உசைன் என்ற 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட கன்னி வெடியில் சிக்கி, இரு கைகள் மற்றும் இரு கண் பார்வையை இழந்தார். மேலும், கால்களிலும் பலமாக அடிபட்டதால் நடப்பதும் சிரமாகியது.
இதனை அடுத்து, தனது மகனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என உறுதி கொண்ட உசைனின் பெற்றோர் முதலில் சிகிச்சைக்காக எகிப்து சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்த உசைன் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உசைனின் கால்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர்.
பின்னர், கேரளாவின் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை உசைனுக்கு சமீபத்தில் நடந்துள்ளது. எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், உசைனின் இடது கண்ணில் தற்போது மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.
“நான் முழுவதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், மருத்துவர்கள் என்னை உற்சாகமூட்டிக்கொண்டே இருந்தனர். சிகிச்சைக்கு பின்னர் எனது அம்மாவை பார்த்தேன். அது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தந்தது” என உசைன் கூறியுள்ளார்.






