search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuwait flight"

    • பயணிகள் 172 பேரும் சென்னையில் விமான நிலையத்தில் சுமார் 5 மணிநேரம் தவித்தனர்.
    • 5 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.

    குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை,1.20 மணிக்கு வரும் விமானம் மீண்டும் அதிகாலை 2.05 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் குவைத் செல்ல 172 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    ஆனால் குவைத்தில் இருந்து வரவேண்டிய விமானம் எந்திர கோளாறு காரணமாக தாமதமாக வந்து குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் 172 பேரும் சென்னையில் விமான நிலையத்தில் சுமார் 5 மணிநேரம் தவித்தனர்.

    பின்னர் அந்த விமானம் காலை 6 மணிக்கு தாமதமாக சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து 5 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.

    • விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
    • பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்கிடையே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டு பிடித்தனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று விமான நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

    12 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை விமானநிலையத்தில் குவைத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக கோளாறு தெரியவந்ததால், 164 பயணிகள் உயிர்தப்பினர்.#ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு குவைத்திற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்கள். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல முயன்றபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

    இதனையடுத்து விமானம் ஓடுபாதைக்கு செல்லாமல் நடைமேடையில் நிறுத்தப்பட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. விமான நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் குழுவினர் வந்து எந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் உடனடியாக எந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்தபின்னர் விமானம் குவைத்திற்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனை வரும் உயிர்தப்பினர். #ChennaiAirport
    ×