search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைப்பணிகள்  தாமதமின்றி நடக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - மேயர் தினேஷ்குமார் அறிவுரை
    X

    கோப்பு படம்.

    சாலைப்பணிகள் தாமதமின்றி நடக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - மேயர் தினேஷ்குமார் அறிவுரை

    • நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை ஆணையாளர்கள் செல்வநாயகம், கண்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குழாய் பதிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பிரதான சாலையில் நடைபெற வேண்டியுள்ளது. அதுபோல் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த சாலையை செப்பனிடும் பணி நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து செய்து காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்து முடிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பு, குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழிதோண்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    Next Story
    ×