என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US military"

    • பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
    • பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.

    அமெரிக்க நேரப்படி, இன்று காலை சுமார் 6:30 மணியளவில், கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானி பாராசூட்டின் உதவியுடன் வெளியே குதித்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

    சம்பவத்தில் காயமடைந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்பவ இடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

    • 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று இந்த தாக்குதல் அழைக்கப்பட்டது.
    • அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.

    ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.

    ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.

    'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது.

    இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலும் பங்கேற்றதாக செய்திகள் வந்தன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி,"தொடர்ச்சியான தாக்குதல்களால் எங்கள் அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது" என்று கூறினார். இருப்பினும், சேதத்தின் முழு விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

    ஈரானிய அணுசக்தி அமைப்பு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தற்போது நிலைமை மற்றும் சேதத்தை மதிப்பிடுவதாக அவர் விளக்கினார்.

    மறுபுறம், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஈராபி அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களைக் கையாண்ட விதம் குறித்து ஈரான் ஆழ்ந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    அதன் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.

    ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்க IAEA மறுத்ததை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் விமர்சித்தார்.

    • அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில் என்று தெரிவித்தது.
    • ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    கத்தார் தனது வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடிய சில நிமிடங்களில், தோஹா மற்றும் லுசைல் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

    ஈரானின் அரசு தொலைக்காட்சி, இத்தாக்குதலை "அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில்" என்று தெரிவித்தது.

    ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் இலக்கு வைக்கட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் தாக்குதலை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பதாக உறுதியளித்ததுடன், பதற்றத்தைக் குறைக்க பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியது.

    • ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    திங்களன்று மாஸ்கோவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு புதினின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

    "எந்த தூண்டுதலும் அடிப்படையும் இல்லாமல் ஈரான் மீதான தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் புதின் கூறினார். மேலும் ஈரானுடனான மோதலில் மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள சக்திகளின் ஈடுபாடு உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது" புதின் எச்சரித்தார்.

    மேலும், "ஈரானிய மக்களுக்கு உதவ ரஷ்யாவின் முயற்சிகள் தொடரும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவும், பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று புதின் தெரிவித்தார்.

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வதேச நெறிமுறைகளை மீறி, ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது. 

    • நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தை குறிவைத்து 6 குண்டுகள் வீசப்பட்டன.
    • இதில் 5,300 பவுண்டுகள் எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும்.

    ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா வின் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் நேற்று மாலையே ஈரானுக்கு புறப்பட்டு சென்றன.

    நிலத்தடியில் உள்ள இலக்குகளை அழிக்கும் 15 டன் எடை கொண்ட குண்டு களை சுமந்து சென்றன. இந்த விமானங்கள் ஈரானுக்குள் அதிரடியாக புகுந்து அங்குள்ள அணு நிலையங்கள் மீது குண்டுகளை வீசியது. போர்டேர் பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தை குறிவைத்து 6 குண்டுகள் வீசப்பட்டன.

    மற்ற 2 அணுசக்தி தளங்கள் மீது 30 டோமா ஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த போர் விமானங்களை பயன்படுத்தி பங்கர் பஸ்டர் எனப்படும் ஜி.பி.யு-57 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் பட்டது.

    அதிக எடை கொண்ட இந்த வகை குண்டுகளை சுமந்து செல்ல பாமர் வகை விமானங்கள் தேவைப்படும். இதையடுத்து அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் இருந்து பி-2 ஸ்பிரிட்ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நேற்று மாலை குவாம் பகுதியில் உள்ள விமானப் படை தளத்துக்கு புறப்பட்டு சென்றது.

    இங்கிருந்து 8-க்கும் மேற்பட்ட குண்டுகள் கொண்ட ஸ்டெல்த் விமானங்கள் புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியானது. அதிக எடை கொண்ட குண்டுகளை ஏற்றி சென்றதால், இந்த விமானங்கள் குறைந்த எரி பொருளுடன் புறப்பட்டது.

    இதனால் நடுவழியில் தான் கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போதே ஈரான் மீது தாக்குதல் நடத்த போவது உறுதியானது. தாக்குதலுக்கு பயன்படுத் தப்பட்ட பங்கர் பஸ்டர் குண்டுகள் சுரங்கத்தில் உள்ள இலக்குகளை அழிக்கக் கூடியது.

    சுமார் 50 ஆயிரம்அடி உயரத்தில் இருந்து அதிகமான குண்டு வீசப்படுவதால் கடுமையான சேதங்கள் இருக்கும். அதிக உயரம் காரணமாக இந்த குண்டுகள் அதிக இயக்க ஆற்றலைப் பெற்று ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது. இதன் மூலம் 200 முதல் 300 அடிக்கு கீழ் உள்ள இலக்குகளை கூட தாக்க முடியும். இதில் 5,300 பவுண்டுகள் எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும்.

    இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ஆழத்தில் இருக்கும் அணு உலை அமைப்புகளை, இலக்கு களை தாக்க முடியும். அதன்படி ஈரானின் போர்டோவில் நிலத்தடியில் உள்ள அணு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துல்லிய தாக்குதல் பாணியில் ஈரானுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட தளங்களை மட்டும் தாக்கிவிட்டு அமெரிக்க போர் விமானங்கள் வெற்றிகரமாக வெளியேறின.

    நேற்று டிரம்ப் கூறும் போது, ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா உதவியின்றி இஸ்ரேலால் தனியாக தாக்க முடியாது என்று கூறி இருந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை ஈரான் அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அறிவித்திருந்தார்.
    • மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

    அமெரிக்க இராணுவம் ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இத்தாக்குதல் இன்று அதிகாலையில் நடந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் சேதத்தின் அளவு குறித்து ஈரான் தெளிவுபடுத்தவில்லை.

    இந்நிலையில் ஈரானிய அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிரிகளின் தீய சதிகளுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான புரட்சிகர விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் முயற்சிகளுடன், அணுசக்தி தியாகிகளின் இரத்தத்தின் விளைவாக கிடைத்த இந்த தேசியத் தொழிலின் (அணுசக்தி) வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்காது என்று மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.

    மேலும் "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் NPT ஆகியவற்றை கடுமையாக மீறியுள்ளது" என்று கூறிய அவர் ஐநா சாசனத்தின் படி தன்னை தர்க்கத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து, கதிர் வீச்சுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியதாக ஈரானிய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஈரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப அதிகபட்சம் இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ளதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் பல உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும் சில ஈரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

    • அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

    ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டன.

    ஈரானை தாக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஒரு குழுவாக செயல்பாட்டோம். ஈரானின் அணு சக்தி செறிவூட்டல் திறனை நிறுத்தவும், அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்தவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    ஈரான் இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ஈரானுக்கு அமைதி அல்லது சோகம் ஆகிய வற்றில் ஒன்றில் ஒரு தேர்வு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு பகுதியை கொடுமைப்படுத்தும் நபராக ஈரான் உள்ளது. அந்த நாடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்.

    கடந்த 8 நாட்களில் நாம் கண்டதை விட மிகப்பெரிய அமைதி ஏற்படும் அல்லது ஈரானுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படும். இன்னும் பல இலக்குகள் குறி வைக்கப்பட்டு உள்ளன. அமைதி விரைவாக வரவில்லை என்றால் மற்ற இலக்குகளை துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் நாங்கள் தாக்குவோம்" என்று கூறினார்.

    • ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்
    • ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்கா ஈரானில் உள்ள பல அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசியுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றைய சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

    அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

    ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

    "ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்" என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் குண்டுகள் வீசப்பட்டன.

    அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.
    • ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.

    இதில் ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியாவில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார் என்று அமெரிக்க மத்திய படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளை ஐஎஸ் அமைப்பினர் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐஎஸ் தலைவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • ஏற்கெனவே 2 முறை அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தியது
    • பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடந்தது

    பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் மறைமுகமாக உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

    சில தினங்களுக்கு முன், சிரியாவிலும், அமெரிக்காவிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தொடர்புடைய குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக கடந்த அக்டோபர் 26 அன்றும் கடந்த புதன்கிழமையன்றும் என 2 தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

    இந்நிலையில், அமெரிக்கா நேற்று மீண்டும் 3-வது முறையாக தெற்கு சிரியாவில் ஈரானுக்கு தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் விதமாக அங்குள்ள பல நாடுகளுக்கு ஆயுத உதவியை ஈரான் மறைமுகமாக செய்து வருவதை தடுக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே அந்த குழுக்கள் சிரியா நாட்டில் செயல்படும் இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கியது.

    இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) தெரிவித்ததாவது:

    கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (Islamic Revolutionary Guard Corps) தளங்களின் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இது ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி. இத்தாக்குதல்களில் அல்பு கமால் மற்றும் மாயாதீன் ஆகிய இரு இடங்களில் உள்ள பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவை குறி வைக்கப்பட்டன.

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்தார்.

    • அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
    • ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.

    எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.

    அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.

    தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..

    ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • தைவானின் சுயாட்சியை சீனா அங்கீகரிக்கவில்லை
    • தைவானுக்கு ஆதரவான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றது சீனா

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan).

    சுயாட்சி பெற்ற தனி நாடாக தைவான் தன்னை அறிவித்து கொண்டாலும், சீனா இதை ஏற்க மறுத்து, தைவானை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து உரிமை கொண்டாடி வருகிறது.

    இரு நாடுகளுக்குமிடையே இது பெரும் சச்சரவை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

    சமீப சில மாதங்களாக தைவானின் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில், சீனா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதால், சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை அந்நாடு எடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. பல கட்டங்களாக சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    ஆனால், 2022ல் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்கு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து சீனா அதன் பிறகு பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது.

    கடந்த வருடம், இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்க சம்மதித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடமான பென்டகனில் (Pentagon) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையே தைவான் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் புற்று நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ராணுவ துணை தலைமை அதிகாரி மைக்கேல் சேஸ் (Michael Chase) மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் சாங் யான்சாவ் (Major Gen. Song Yanchao) ஆகியோர் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    தைவான் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் சீனா தயார் இல்லை. தைவானுக்கு ராணுவ உதவி அளித்து வலுப்படுத்த முயலும் போக்கை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவத்தை நிலைநிறுத்துவதையோ, சச்சரவை தூண்டும்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அமெரிக்கா தொடர கூடாது.

    கடற்சார் பாதுகாப்பு விஷயங்களை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

    சர்வதேச அளவில் முக்கிய சிக்கல்களில் சீனாவின் அடிப்படை உரிமைகளுக்காக சீனா எடுக்கும் முயற்சிகளயும், சீனாவின் நிலைப்பாட்டையும் அமெரிக்கா புரிந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு சீனா கூறியுள்ளது.

    ×