search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சிரியாவில் தொடரும் அமெரிக்க ராணுவ தாக்குதல்கள்
    X

    சிரியாவில் தொடரும் அமெரிக்க ராணுவ தாக்குதல்கள்

    • ஏற்கெனவே 2 முறை அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தியது
    • பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடந்தது

    பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் மறைமுகமாக உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

    சில தினங்களுக்கு முன், சிரியாவிலும், அமெரிக்காவிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தொடர்புடைய குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக கடந்த அக்டோபர் 26 அன்றும் கடந்த புதன்கிழமையன்றும் என 2 தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

    இந்நிலையில், அமெரிக்கா நேற்று மீண்டும் 3-வது முறையாக தெற்கு சிரியாவில் ஈரானுக்கு தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் விதமாக அங்குள்ள பல நாடுகளுக்கு ஆயுத உதவியை ஈரான் மறைமுகமாக செய்து வருவதை தடுக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே அந்த குழுக்கள் சிரியா நாட்டில் செயல்படும் இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கியது.

    இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) தெரிவித்ததாவது:

    கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (Islamic Revolutionary Guard Corps) தளங்களின் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இது ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி. இத்தாக்குதல்களில் அல்பு கமால் மற்றும் மாயாதீன் ஆகிய இரு இடங்களில் உள்ள பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவை குறி வைக்கப்பட்டன.

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்தார்.

    Next Story
    ×