என் மலர்
நீங்கள் தேடியது "air bases"
- அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்தது.
- 2022ல் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியது.
மத்திய ஆசியாவின் மூலோபாய மூக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்த நிலையில், 2022ல் ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக இந்தியா உடனான இருதரப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தஜிகிஸ்தானின் இந்த முடிவு புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- பக்ராம் விமான தளத்தில் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்
- சீனாவின் அணு ஆயுத தயாரிப்பு மையத்திற்கு அருகே பக்ராம் தளம் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும். அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்றார்.
- நாடு இராணுவ ரீதியாக தயாராக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை என்று கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தாரின் தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு இராணுவ தளங்களில் அல் உதெய்த் விமானத் தளமும் ஒன்றாகும், இது அபு நக்லா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது கத்தார் அமீரக விமானப்படை, அமெரிக்க விமானப்படை, ராயல் விமானப்படை மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளைக் கொண்டுள்ளது. இந்த தளத்தை குறிவைத்து நேற்று இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கத்தார் நேரப்படி திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது.
கத்தாரின் அல் உதெய்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக கத்தார் ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி எக்ஸ் பதிவில், "இது கத்தார் அரசின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அப்பட்டமான மீறல்" என்று கூறினார்.
"இந்த வெட்கக்கேடான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு சமமான முறையில் நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கத்தார் வான் பாதுகாப்பு வெற்றிகரமாக தாக்குதலை முறியடித்தது மற்றும் ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்தது, காயங்கள் அல்லது மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அல் அன்சாரி பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
- அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில் என்று தெரிவித்தது.
- ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கத்தார் தனது வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடிய சில நிமிடங்களில், தோஹா மற்றும் லுசைல் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் அரசு தொலைக்காட்சி, இத்தாக்குதலை "அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில்" என்று தெரிவித்தது.
ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் இலக்கு வைக்கட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் தாக்குதலை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பதாக உறுதியளித்ததுடன், பதற்றத்தைக் குறைக்க பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியது.
சமீபத்தில் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதி திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






