search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China taiwan conflict"

    • தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை என சீனா திட்டவட்டமாக கூறி விட்டது
    • சீனாவில் இருந்து தினமும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடப்பதாக தைவான் கூறியது

    செமிகண்டக்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு, தைவான் (Taiwan).

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான், தன்னை சுயாட்சி பெற்ற தனி நாடாக அறிவித்து கொண்டாலும், அதை ஏற்க மறுக்கும் சீனா, அந்நாட்டை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து அதன் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஆனால், தைவானின் சுயாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

    சீனாவுடன் இது குறித்து அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என திட்டவட்டமாக சீனா தெரிவித்தது.

    இதையடுத்து எப்போது வேண்டுமானாலும், சீனா தைவானை ஆக்ரமிக்கலாம் எனும் அச்சம் தைவான் நாட்டில் தோன்றியுள்ளது.

    இதை தொடர்ந்து பல மக்கள் தங்கள் வெளியுலக தொடர்புகளை குறைத்து கொண்டுள்ளனர். அலுவலகம் செல்ல தயக்கம் காட்டி பலர், வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கி உள்ளனர். இணயவழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால், வங்கி சேவைகள் முடங்கி விட்டது.

    ராணுவ தாக்குதல் மட்டுமின்றி இணைய வழியாகவும் சீனாவால் தாக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாக தைவான் அஞ்சுகிறது. இதனால் தைவானின் ராணுவ கட்டமைப்புகளில் மென்பொருள் பாதுகாப்பை அந்நாடு வலுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

    தினந்தோறும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் சீனாவினால் தைவான் நாட்டின் தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் மீது நடத்தப்படுவதாக தைவான் அரசு தெரிவித்தது.

    சீனாவிற்கு வெளியிலிருந்து இயங்கும் சீன சைபர் தாக்குதல் குழுவான "ஃப்ளாக்ஸ் டைஃபூன்" (Flax Typhoon) தைவான் நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பை இணையவழியாக ஆக்ரமிக்க முயல்வதாக கடந்த வருடமே, மைக்ரோசாப்ட், எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தைவானின் சுயாட்சியை சீனா அங்கீகரிக்கவில்லை
    • தைவானுக்கு ஆதரவான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றது சீனா

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan).

    சுயாட்சி பெற்ற தனி நாடாக தைவான் தன்னை அறிவித்து கொண்டாலும், சீனா இதை ஏற்க மறுத்து, தைவானை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து உரிமை கொண்டாடி வருகிறது.

    இரு நாடுகளுக்குமிடையே இது பெரும் சச்சரவை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

    சமீப சில மாதங்களாக தைவானின் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில், சீனா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதால், சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை அந்நாடு எடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. பல கட்டங்களாக சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    ஆனால், 2022ல் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்கு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து சீனா அதன் பிறகு பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது.

    கடந்த வருடம், இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்க சம்மதித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடமான பென்டகனில் (Pentagon) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையே தைவான் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் புற்று நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ராணுவ துணை தலைமை அதிகாரி மைக்கேல் சேஸ் (Michael Chase) மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் சாங் யான்சாவ் (Major Gen. Song Yanchao) ஆகியோர் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    தைவான் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் சீனா தயார் இல்லை. தைவானுக்கு ராணுவ உதவி அளித்து வலுப்படுத்த முயலும் போக்கை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவத்தை நிலைநிறுத்துவதையோ, சச்சரவை தூண்டும்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அமெரிக்கா தொடர கூடாது.

    கடற்சார் பாதுகாப்பு விஷயங்களை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

    சர்வதேச அளவில் முக்கிய சிக்கல்களில் சீனாவின் அடிப்படை உரிமைகளுக்காக சீனா எடுக்கும் முயற்சிகளயும், சீனாவின் நிலைப்பாட்டையும் அமெரிக்கா புரிந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு சீனா கூறியுள்ளது.

    • தைவான் உடன் நட்பு பாராட்டி வருவதற்கு சீனா தொடர்ந்து கண்டனம்
    • கம்ப்யூட்டர் சாப்ட்வேர், உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தைவானுக்கு வழங்குகிறது

    சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது.

    இந்த நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பணமதிப்பில் 4127.07 கோடி ரூபாய்) ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    நவீன எஃப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவை அதில் அடங்கும். சீனா அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் முந்தையதை வட நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதாகும்.

    தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், அந்த நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த ஆயுதங்களை விற்பனை செய்கிறது. சீனாவிற்கு தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.

    சீனாவின் வான் தாக்குதல், பிராந்தியத்தை பாதுகாத்தல், எஃப்-16 புரோகிராம் தொடர்பாக அமெரிக்காவுடன் இயங்கும் தன்மை அதிகரித்தல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது.
    • தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.

    தைபேசிட்டி:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.

    அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அங்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு சென்றார். அவரது அமெரிக்க பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தைவானின் நீண்ட கால உயிர் வாழ்வை சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும். தைவானுக்கு சர்வாதி காரத்தின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாங்கள் முற்றிலும் அடிபணிய மாட்டோம். பயப்படமாட்டோம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவோம்" என்றார்.

    மேலும் தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தைவான் பாதுகாப்பாக இருக்கும் போது உலகம் பாதுகாப்பாக இருக்கும். தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.

    • பராகுவே நாட்டிற்கு செல்லும் வழியில் அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்
    • இறையாண்மையை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சீனா

    தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தைவான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

    இதுகுறித்து சீனா தரப்பில் கூறும்போது ''தைவான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி. அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    தைவான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது. ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி தைவான் ஒட்டிய கடற்பகுதியில் ராணுவ நடவடிக்கையை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

    இதையும் தாண்டி சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×