என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாண்டஸ் புயலால் சென்னைக்கு வந்த 19 விமானங்கள் ரத்து
- பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
- மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.
அதன்படி பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.
அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த விமானங்கள் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றன. சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் என மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.
நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை பெங்களூரு மற்றும் ஐதராபாத் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து, ஒன்றின்பின் ஒன்றாக சென்னை வர தொடங்கி உள்ளன. மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்