என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flights cancel"
- மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
துபாயில் கடந்த மாதம் உருவாகிய புயல் காரணமாக வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால், துபாய் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இடியுடன் கூடிய பெய்த பலத்த மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளது.
துபாயில் பெய்த மழையைவிட இது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேவை குறைக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் மோசமான வானிலை காரணமாக இன்று பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
"மே 2 ஆம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து வரும் அல்லது புறப்படும் வாடிக்கையாளர்கள் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம்" என அமீரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
- சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சிகாகோ:
அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று கடுமையான சூறாவளி புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது.
இதனால் கிரேட் லேண்ட் மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகிறார்கள்.
மேலும் பல நகரங்களில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய அந்தமான், திருச்சி, டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் அவர்கள் மாற்று விமானத்தில் தாமதமாக புறப்பட்டு சென்றனர். #ChennaiAirport
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்