search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Votes"

    • வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது.
    • பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர். குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு நல் லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது.

    இதே போல பொள்ளாச்சி வடக்கு வடக்கிப்பாளையம் ஊராட்சி 2 வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூர் பேரூர் செட்டிப்பாளையம் 1 -வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறி விக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்க னூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக் கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதனால் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம், வடக்கிப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக ளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் நெ.10 முத்தூர், குருநெல்லிப்பாளையம் பதிவான வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையத்தில் பதிவான வாக்குகள் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணுவதற்கு மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரிவார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு வர அனுமதி இல்லை. 

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    இதுதவிர ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 8040 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.



    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
    எகிப்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக நீட்டிப்பது, பாராளுமன்றத்தில் மேல்சபையை உருவாக்குவது தொடர்பாக மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு இன்று தொடங்கியது. #Egyptianpresident #Egyptreferendum #constitutionalamendments
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக அங்கீகரிக்க சமீபத்தில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட்டது.

    மேலும், பாராளுமன்றத்தில் புதிதாக மேல்சபையை உருவாக்குவது, துணை அதிபர் பதவியை ஏற்படுத்துவது உள்பட எகிப்து அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களும் செய்யப்பட்டது.

    இவற்றுக்கு மக்களின் ஒப்புதலை பெறுவதற்காக கருத்தறியும் பொது வாக்கெடுப்பு 20-4-2019 முதல் 22-4-2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அவ்வகையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 14 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

    2014-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட எகிப்து அரசியலமைப்பு சட்டத்தின்படி, அந்நாட்டின் அதிபரோ, பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருமடங்கு பெரும்பான்மை கொண்ட குழுவினரோ ஒரு அந்நாட்டின் அடிப்படை சட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு புதிய சட்டத்தை இயற்றலாம். பின்னர், இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு பெரும்பான்மை ஆதரவை பெற்றாக வேண்டும். 

    அதன்பிறகு, மக்களின் கருத்தையறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் மூன்றில் இருமடங்கு பேரின் தீர்ப்பின்படி, அந்த சட்டம் செல்லுபடியாகலாம் அல்லது கைவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #Egyptianpresident #Egyptreferendum #constitutionalamendments
    ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    2-வது கட்டமாக ஸ்ரீநகர், உத்தம்பூர் ஆகிய 2 தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காஷ்மீர் மக்கள் ஓட்டு போடுவதை விரும்பவில்லை. ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீதமே ஓட்டு பதிவாகி இருந்தது.

    95 தொகுதிகளுக்கு நேற்று 2-வது கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. தலைநகர் ஸ்ரீநகரில் இவ்வளவு மோசமாக ஓட்டுப்பதிவாகி இருந்தது.

    ஆனால் உத்தம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.

    காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 45.7 (இரண்டு தொகுதி யிலும் சேர்த்து) ஓட்டுப்பதி வானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    மேற்கு வங்காள மாநிலம் ஐல்பைகுரி தொகுதி யில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத ஓட்டுப்பதிவானது.  #LokSabhaElections2019
    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்றும், மற்ற தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

    தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன்  காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார்.




    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #TNElections2019

    இந்த தேர்தலில் நிச்சயம் 10 சதவீத வாக்குகள் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் கடினமாக இருந்ததா?

    பதில்:- கடினமாக இல்லை. சினிமாவில் பணிபுரிவது என்பது வேறு. வெயில், பயணம், கதாநாயகிகளுடன் நடனம், வில்லன்களுடன் சண்டை என்று இருக்கும். அரசியலில் அப்படி இல்லை. வில்லன்களுடன் அமைதியாக மோதவேண்டி இருக்கிறது. ஆனால் நடிகனாக எனக்கு மக்களிடம் கிடைத்த அன்பைவிட இப்போது அதிக அன்பு கிடைக்கிறது.

    கே:- இந்த தேர்தலை உங்களுக்கான ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாமா?

    ப:- இல்லை. எனக்கான ஆசிட் டெஸ்ட் என்பது நான் டுவிட்டரில் இருந்து நேரடி கள அரசியலுக்கு வந்தபோதே முடிந்துவிட்டது. நான் மனதளவில் ஏற்படுத்திக்கொண்ட ஆசிட் டெஸ்ட் அது.

    கே:- உங்கள் கணிப்புபடி உங்கள் கட்சியின் கள நிலவரம் என்ன?

    ப:- நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட சிறப்பாகவே இருக்கிறது. 5 சதவீதத்துக்கு மேல் நாங்கள் வாக்குகள் பெற்றாலே பெரிது என்றார்கள். ஆனால் நான் அப்படி திருப்திபட்டுக் கொள்ளவில்லை. பதிலாக எங்களை நாங்களே தீவிரப்படுத்திக் கொண்டோம். பணம் கொடுக்காமல் முழுக்க முழுக்க பிரசாரத்தை மட்டுமே நம்பினோம். நிச்சயம் 10 சதவீத வாக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    கே:- 10 சதவீதம் என்பது முழு வெற்றி ஆகாது. ஆனால் குறிப்பிடத்தக்க சதவீதம் தான். மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தயாராகிறதா?

    ப:- சூழ்நிலை வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி தருகிறேன். இவர்கள் இருவருடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்.

    கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தவறான கூட்டணியில் சேர்ந்து விடுகிறார்கள்.

    அவர்கள் என்னுடன் இருந்து இருக்க வேண்டும். அந்த கூட்டணியை மட்டும்தான் நான் எதிர்பார்த்தேன். தி.மு.க., அ.தி.மு.க, ஒன்றும் தீண்டத்தகாத கட்சிகள் இல்லை. ஆனால் அவை விமர்சனங்களுக்குட்பட்டவை. எனவே அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.



    கே:- அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்களும் முக.ஸ்டாலினும் நண்பர்களாக இருந்தீர்கள். இப்போது அந்த நட்பு எப்படி இருக்கிறது?

    ப:- நான் அவர் தந்தையுடன் நெருக்கமாக இருந்த அளவுக்கு அவருடன் இல்லை. எனவே அரசியலுக்குள் நுழைந்ததால் நண்பரை இழந்த உணர்வு இல்லை. அவர் தந்தையை சந்திக்கும்போது அவரையும் சந்தித்துள்ளேன். மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார். நானும் அப்படியே அவரிடம் இருப்பேன். இவ்வளவுதான் எங்கள் நட்பு.

    கே:- சக அரசியல் தலைவர்களின் பேச்சை கேட்டு டிவியை உடைக்கும் வீடியோவை வெளியிட்டீர்கள். அவர்கள் மீதான கசப்புணர்வுதான் காரணமா?

    ப:- நான் மீண்டும் கூட டிவியை உடைப்பேன். ஆனால் அது தனிப்பட்ட நபரை குறித்து அல்ல. நான் அரசியலுக்குள் நுழையும்போது அவர்கள் மீதும் அரசியல் மீதும் கசப்புணர்வு இருந்தது. ஆனால் இப்போது மக்களை களத்தில் சந்தித்த பின்னர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசியலை பொறுத்தவரை நான் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பேன். எனவே என்னிடம் தனி நபர் தாக்குதல் இருக்காது.

    கே:- ஆக்ரோ‌ஷம் என்பதுதான் உங்கள் அரசியல் பாணியா?

    ப:- நான் காந்தியை பின் தொடர்பவன். அவர் செய்த ஆக்ரோ‌ஷ அரசியல் தான் என்னுடையதும். ஆக்ரோ‌ஷம் என்பது என்னுடைய பேச்சில் தான் இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் ஆக்ரோ‌ஷம் இருக்கும். இந்த கோபம், ஆக்ரோ‌ஷம் என்பதை நம்முடைய செய்தியை வலுவாக கொண்டு சேர்க்க மட்டுமே பயன்படுத்துவேன்.

    கே:- கேரள முதல்வர் பினராயி விஜயனும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்களா?

    ப:- நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே பினராயி என்னை நீண்ட பயணத்துக்கு தயாராகுமாறு கூறினார். கெஜ்ரிவால் என்னிடம் ‘நாங்கள் செய்து காட்டி விட்டோம். உங்களாலும் முடியும்’ என்று ஊக்கப்படுத்தினார். என்னுடைய முதல் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் தான் எனக்காக வாக்கு கேட்டார். எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

    கே:- நீங்கள் எதிர்பார்த்த 10 சதவீதத்துக்கும் குறைவான அல்லது 5 சதவீத வாக்கு பெற்றால் என்ன செய்வீர்கள்?

    ப:- நான் நீண்ட பயணத்துக்கு தயாராகி தான் வந்துள்ளேன். என் எஞ்சிய முழு வாழ்க்கையையும் அரசியலுக்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை தளம் தான்.

    கே:- ஒரு அரசியல்வாதியாக உங்கள் பலம், பலவீனம் என்ன?

    ப:- என்னுடைய பலம் என்பது அரசியல்வாதிகளை மாற சொல்லாமல் மக்களிடத்தில் இருந்து மாற்றங்களை தொடங்குவது. நான் எப்போதுமே என் கட்சியின் தலைவராக நினைப்பது அல்ல. துணைத்தலைவர் தான். தலைவராக நினைப்பது மர்பியின் விதியைத் தான். அந்த விதியில் கூறப்பட்டு இருப்பது என்ன என்றால் தவறாக சென்றுவிடும் என்று நினைத்தால் அது தவறாகவே சென்று முடியும்.

    கே:- அரசியலுக்குள் வந்தபின்னரும் முக தோற்றங்களை மாற்றுகிறீர்களே?

    ப:- அது இந்தியன் 2 படத்துக்கான கெட்டப். அரசியலுக்காக நீண்ட மீசை வைத்தேன். மக்கள் இதுபோன்ற மாற்றங்களை ரசிக்கிறார்கள். எல்லா கெட்டப்புகளும் போரடித்து விட்டது. இப்போது முழு அரசியல்வாதியாக மீசையை வைத்துள்ளேன்.

    கே:- இந்த மீசை ஸ்டைல் குறிப்பது என்ன?

    பதில்: அது சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று சீன மற்றும் தெலுங்கு மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. #MamataBanerjee #LoksabhaElections2019

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் பெங்காலி, ஆங்கிலம், உருது மற்றும் இந்தி மொழிகளில் சுவர் பிரசார விளம்பரங்கள் இருந்து வந்தன. தற்போது தெலுங்கு, சந்தாலி (அல்சிசி) மற்றும் சீன மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.

    தங்காரா, ஜார்கிராம் மற்றும் கராக்பூர் தொகுதிகளில் இத்தகைய பிரசாரம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தங்காராவில் சீனா டவுன் என்றழைக்கப்படும் ஹூயு கிங் தைம் பகுதியில் 2300-க்கும் மேற்பட்ட சீனர்களின் ஓட்டு உள்ளது.

     


    தங்காராவில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக மலாராய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இங்கு சீன மொழியில் பிரசாரம் செய்யப்படுகிறது.

    அதே போன்று பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மேற்கு மிட்னாபூர் தொகுதியில் துரு, ஹேம் பிரம், ஹன்ஸ்டா, மண்டி, குஸ்கு, சோரன், முர்மு, பாஸ்கே பகுதிகளில் 52 சதவீதம் சந்தாலி மொழி பேசும் அல்சிசி இனத்த வர் உள்ளனர். இங்கு பிர்கா சோரனுக்கு வாக்களிக்கும்படி சந்தாலி மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    கராக்பூர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களை கவரும் விதத்தில் அங்குள்ள ரெயில்வே டவுன்ஷிப் பகுதிகளில் தெலுங்கு மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  #MamataBanerjee #LoksabhaElections2019

    மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கிங் சென்றபடி வாக்கு சேகரித்தார். #MKStalin #DMK

    மதுரை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வண்டியூர், திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது மோடி, எடப்பாடி அரசை கடுமையாக சாடினார். பிரசாரத்துக்கு பின்னர் மதுரையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.

    இன்று காலை மு.க.ஸ்டாலின் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நடந்து சென்றபடியே வியாபாரிகள், பொதுமக்களிடம் மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.



    மு.க.ஸ்டாலினுடன் சென்ற வேட்பாளரை அறிமுகம் செய்து இவரை வெற்றி பெறச் செய்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 14 வயதில் அரசியலுக்கு வந்த நான் எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன்.

    எம்.எல்.ஏ. மேயர், தி.மு.க. தலைவர் என எப்போதும் மக்களோடு இருந்து வருகிறேன். தேர்தலின் போது மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களுக்கு சேவை செய்வோம் என்றார். #MKStalin #DMK

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்க ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். வருகிற 8,9-ந்தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிக்காமல் வேலைக்கு வருவார்கள். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படும்.

    பொங்கல்பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட், தண்ணீர் வசதி, மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் இன்னும் 2, 3 நாட்களில் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.


    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தல் போன்று 20ரூபாய் நோட்டு இத்தேர்தலில் எடுபடாது. நாளை ரெட் பஸ் மற்றும் 550 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது கீதா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    ஐ.நா. சபை கொண்டுவந்த மரண தண்டனை வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்தது ஏன் என்பது குறித்து இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பலோமி திரிபாதி விளக்கம் அளித்தார். #UN #India #DeathPenalty
    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச் சபையின் 3-வது குழு சார்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது.

    அதில், இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மரண தண்டனை வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன.

    மேலும் இந்த வாக்கெடுப்பில் 36 நாடுகள் கலந்து கொள்ளவில்லை.



    மரண தண்டனை வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஏன் என்பது குறித்து ஐ.நா. சபையின் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பலோமி திரிபாதி பேசினார்.

    அப்போது இந்த தீர்மானம் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்திலும், தற்காலிகமாக ஒத்திவைக்கும் நிலையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இது இந்திய சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த தீர்மானத்துக்கு எனது முழு எதிர்ப்பை தெரிவிக்கிறேன் என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் மிகவும் அரிதாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இங்கு குற்றங்கள் மிகவும் வெறுப்பாக பார்க்கப்படுகிறது. அவற்றை சமூகத்தினர் தங்கள் மனசாட்சிக்கு எதிராக கருதுகின்றனர்.

    குற்றவாளிகள் மீதான வழக்குகள் சுதந்திரமாக செயல்படும் கோர்ட்டுகள் மூலம் விசாரிக்கப்படுகின்றன. தண்டனையை பரிசீலனை செய்ய மேல்முறையீட்டுக்கு உரிமை வழங்கப்படுகிறது’’ என்றார். #UN #India #DeathPenalty
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி பதவிகளுக்கு 4 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிப்படுகின்றன. #kashmirMunicipalelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப்பதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்தார். இதனால், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இந்த நகராட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

    மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக  மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நாளை வெளியாகும் முடிவுகள் சுமார் 3 ஆயிரம் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கவுள்ள நிலையில்  அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #kashmirMunicipalelection
    ×