search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur By election"

    திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் முறையான அனுமதி பெற்றதா? என்று மதுரை ஐகோர்ட் கிளை கேள்வியெழுப்பியுள்ளது. #MaduraiHCBench #ThiruvarurByElection
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலம், மதிப்பனூரைச் சேர்ந்த தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து கஜா புயல் நிவாரணப்பணிகள் முடியாத நிலையில் இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும்.

    மேலும் தமிழக தலைமை செயலாளர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்காக ரத்து செய்ய முடியாது. இது சட்ட விரோதமாகும்.


    எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். ரத்து செய்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் முறையான அனுமதி பெற்றதா? என்பதற்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHCBench #ThiruvarurByElection
    திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    ஜனவரி 28-ந்தேதி நடை பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த திருவாரூர் சட்ட மன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்குத் தேர்தல்ஆணையம் ஒன்பது காரணங்களை கூறியிருக்கிறது.

    இந்தக் காரணங்கள் அனைத்தும்நியாயமானவை. ஆனால் புதியவை அல்ல. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பும் இதே காரணங்கள் இருந்தன. அப்போது ஏன் இந்தக் காரணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வில்லை என்ற நியாயமான கேள்வி எழும்புகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்திய அறிவிப்பு வெளியிடும் வரையில் ஆளும் அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாகஉள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதன்மூலம் தேர்தல் செலவினங்களும் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புள்ளது அது மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது இல்லை எனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலை நடத்துவது தான் அறிவுடைமையாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ThiruvarurByElection

    தேர்தல் ஆணையம் கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதற்கு டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #ElectionCommission #TTVDinakaran
    சென்னை:

    அ.ம.மு.க. கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடை முறைகளை கேலிக்கூத் தாக்குவதாகும்.

    இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.



    திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றிபெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த வி‌ஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த 2 கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ElectionCommission #TTVDinakaran
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தானதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #Mutharasan #ADMK #BJP
    கும்பகோணம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

    5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது தமிழகத்தில் பருவமழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தமிழக அரசு நிறுத்தி விட்டது.

    திருவாரூர் மாவட்ட மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதேபோல் ஏராளமான பேர் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இல்லாமல் உள்ளனர். இதனால் திருவாரூர் தேர்தலை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜா எம்.பி. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் தேர்தல் கமி‌ஷன் உத்தரவுப்படி திருவாரூர் கலெக்டர் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி தேர்தல் நடைபெறுவது குறித்து கருத்துகள் கேட்டார்.


    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் சந்தித்து பேசினர். அதற்கு பிறகு தமிழிசை , திருவாரூர் தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம் என்று தெரிவித்தார். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பா.ஜனதாவின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு உள்ளது.

    திருவாரூர் தேர்தல் ஒருவேளை நடைபெற்று இருந்தால் தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கும். இதற்கு பயந்து தான் பா.ஜனதா துணையுடன் தேர்தலை நிறுத்தி விட்டனர். திருவாரூர் தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. வெற்றி பெற்றதே கிடையாது.

    கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதால் விரைவில் வழங்குவதாக கூறுகிறார்கள்.

    8,9-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் போராட்டம் நடத்தினால் அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு வராவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #Mutharasan #ADMK #BJP
    இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் இப்போதே அளிக்கப்படவுள்ள நிலையில் சிலரது மனநிலை மட்டும் வேறுவிதமாக உள்ளது. #Thiruvarurbyelection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழக அரசு அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு தேர்தலுக்குபின் அளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதனால் முன்னர் பொங்கல் பரிசு உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதே... என்று கவலைப்பட்ட திருவாரூர் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    ஆனால், ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கையை தவறாமல் கடைபிடிக்கும் ஒருசிலர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி-தோல்வியை பணம்தான் நிர்ணயித்து தந்தது என பரவலாக பேசப்பட்டது. இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியை தக்கவைத்து கொள்ள அக்கட்சியினரும், அந்த தொகுதியை தட்டிப்பறிக்க பிறகட்சிகளும் கடுமையான பலப்பரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆளும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் அமிலப்பரீட்சையாகவும், எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டது.

    கொள்கை, வேட்பாளர் என்ற எல்லைகளையும் கடந்து இங்கும் பணம்தான் கதாநாயகனாக விளையாடும் என பரவலான கருத்து நிலவியது. ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய்வரை கிடைக்கலாம் என்னும் ஆதங்கமும் தலைதூக்கியது.

    இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது சிலரின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

    குடும்ப அட்டைக்கு அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை இடைத்தேர்தல் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் வாங்கி கொள்ளலாம். ஆனால், ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ? என அவர்கள் தவிக்கின்றனர்.

    இதற்கேற்ப, ‘டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தெரிவித்துள்ள கருத்து எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்ததுபோல் அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    பத்து பேர் கொண்ட குடும்பமானாலும் அரசு அளிக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான். ஆனால், அந்த குடும்பத்தில் 4 வாக்காளர்கள் இருந்தால் போதும் தலைக்கு ஐயாயிரம் என்றால் சுளையாக இருபதாயிரம் ரூபாய் கிடைத்திருக்குமே! என சிலர் புலம்புகின்றனர். #Thiruvarurbyelection 
    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழலில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது எல்லோரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 பொதுத் தேர்தலின்போதும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    ஆனால் தேர்தல் ஆணையம் அதில் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை அளித்த தகவலும் கூட மாநில அரசால் உதாசீனப் படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும், அது போலவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

    5 மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடந்தபோதே இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவ நிலையைக் காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பதாகவும், எனவே தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழை பெய்யாத நேரத்தில் பருவநிலையைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம் தற்போது கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் வாக்காளர்கள் விடுபடாத நிலையில், அங்கு புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதற்குக் காரணம் என்ன? மற்ற 19 தொகுதிகளில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 'தேர்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்ற குற்றச்சாட்டு அதனால்தான் எழுந்தது.

    இந்தச் சூழலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் ஆணையமே முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பதை வர வேற்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களிடையே கேள்விக்குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இந்த இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThiruvarurByElection

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்க ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். வருகிற 8,9-ந்தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிக்காமல் வேலைக்கு வருவார்கள். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படும்.

    பொங்கல்பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட், தண்ணீர் வசதி, மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் இன்னும் 2, 3 நாட்களில் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.


    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தல் போன்று 20ரூபாய் நோட்டு இத்தேர்தலில் எடுபடாது. நாளை ரெட் பஸ் மற்றும் 550 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது கீதா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். #ThiruvarurByelection #MKStalin

    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் அத்தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதில் தி.மு.க. வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். #ThiruvarurByelection #MKStalin

    திருவாரூர் தொகுதி மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் கலைஞர் மீதான பாசத்தை வாங்க முடியாது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan
    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பின்னர் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கலைவாணன், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பூண்டி கலைவாணன் கூறியதாவது:-

    திருவாரூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அங்கு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கலைஞர். நாம் அனைவரும் விரும்பாத ஒரு சூழ்நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இடைத்தேர்தலில் நிற்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கியதற்கு தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞருக்குக் காணிக்கையாக மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பெற்று, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    “முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலோடு தேர்தலை எதிர்கொள்வோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருவாரூரில் கலைஞரின் மீது மக்கள் வைத்திருக்கும் பாசத்தை எவரும் விலை கொடுத்து வாங்க முடியாது.

    அ.தி.மு.க, அ.ம.மு.க. இரண்டையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. ஏனெனில் இரண்டு அணிகளும் ஒன்றாக இருக்கும்போது,  கலைஞர் 68,366 வாக்குகள் அதிகமாக வாங்கினார். தற்போது தலைவர் இல்லையே என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த சவாலும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி மூன்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.

    ஆளும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 52 அ.தி.மு.க. நிர் வாகிகள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 2016-ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார்.

    அதுபோல திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனும் மீண்டும் திருவாரூரில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளார். இவர் திருவாரூர் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 2 தடவை எம்.எல்.ஏ.ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர் மீண்டும் களம் இறங்க அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறார்.

    இதற்கிடையே குத்தாலம் தொகுதியில் இருந்து 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாப்பா சுப்பிரமணியனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜின் முக்கிய ஆதரவாளர் ஒருவரும் வேட்பாளராக மாற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டம் இன்று மதியம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. மற்றும் தினகரன் கட்சி வேட்பாளர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

    நாளை நடக்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படுகிறது.

    திருவாரூரில் களம் இறங்க அ.தி.மு.க.வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் 2016-ல் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது நாளை மாலை அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளரை அறிவித்த தும் பிரசார பணிகளைத் தொடங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற் காக அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளை ஒருங் கிணைக்க தனியாக ஒரு குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களையும் பிரசார பணி களில் ஈடுபடுத்த திட்ட மிட்டுள்ளனர். இது பற்றிய முழு விபரமும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். #ThiruvarurByElection #ADMK
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ThiruvarurByElection #TTVDhinakaran #Kamaraj
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



    இக்கூட்டத்தில் பங்கேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.காமராஜ் அ.ம.மு.க.வின்  திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

    காமராஜ் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டவர்.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஜன.8-ம் தேதி காமராஜ் வேட்புமனு தாக்கல் செய்கிறார். #ThiruvarurByElection #TTVDhinakaran #Kamaraj
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல் இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK #AMMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி மூன்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் தொகுதியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்தனர்.

    ஆளும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 52 அ.தி.மு.க. நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 2016-ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார்.

    அதுபோல திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனும் மீண்டும் திருவாரூரில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளார். இவர் திருவாரூர் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 2 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர் மீண்டும் களம் இறங்க அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறார்.

    இதற்கிடையே குத்தாலம் தொகுதியில் இருந்து 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாப்பா சுப்பிரமணியனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜின் முக்கிய ஆதரவாளர் ஒருவரும் வேட்பாளராக மாற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போகிறது.

    திருவாரூரில் களம் இறங்க அ.தி.மு.க.வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் 2016-ல் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

    வேட்பாளரை அறிவித்ததும் பிரசார பணிகளைத் தொடங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தனியாக ஒரு குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் பிரசார பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இது பற்றிய முழு விபரமும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

    தி.மு.க.வும் திருவாரூர் இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதோடு, இந்த தொகுதியில் இருந்து அவர் 2 தடவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க. சார்பில் களம் இறங்க 36 பேர் மனு கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பன்னீர் செல்வம்    பூண்டி கலைவாணன்  காமராஜ்
    அதிமுக                    திமுக                               அமமுக

    நேற்று மட்டும் 28 பேர் விருப்ப மனு கொடுத்தனர். நிறைய பேர் மு.க.ஸ்டாலின் போட்டியிட கூறி மனு கொடுத்தனர். திருவாரூரைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் உதயநிதியை வேட்பாளராக நிறுத்த கோரி மனு அளித்தனர். இதனால் தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவரது பெயரிலும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இருவரும் திருவாரூரில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மூத்த தலைவர்களும் நேர்காணல் நடத்த உள்ளனர்.

    நேர்காணல் முடிந்ததும் தி.மு.க. வேட்பாளரை உடனடியாக அறிவிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர். பூண்டி கலைவாணனும் இதனை சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், “கலைஞர் ஜெயித்த திருவாரூரில் தளபதி (மு.க.ஸ்டாலின்) போட்டியிட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்பினார்கள். திருவாரூர் தொகுதி மக்களின் விருப்பமும் அதுதான். ஆனால் திருவாரூரில் போட்டியிட விரும்பவில்லை என்று தளபதி தெளிவாக கூறிவிட்டார். அவரது உத்தரவின் பேரில்தான் நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன்” என்றார்.

    பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த 15 தி.மு.க. நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் களம் இறங்கியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது போல திருவாரூர் தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று தினகரன் கட்சியினர் சவால் விடுத்துள்ளனர்.

    தினகரன் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் பெயரை டி.டி.வி.தினகரன் இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மூன்று கட்சிகளும் இன்றே வேட்பாளர்களை அறிவிப்பதால் திருவாரூரில் நாளை முதல் பிரசாரம் தொடங்க உள்ளது. 14-ந் தேதிக்கு பிறகு பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க.வை ஆதரிக்கும் கட்சிகள் குறித்து இன்னமும் தெளிவான தகவல் இல்லை.

    பா.ஜ.க. 6-ந்தேதி தனது முடிவை தெரிவிக்க உள்ளது. பா.ம.க.வும் இன்னமும் முடிவு செய்யவில்லை.

    நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்துப் போட்டியிடுகிறது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் தனித்துப் போட்டியிட ஆலோசித்து வருகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK #AMMK
    ×