search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Candidate"

    • சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
    • எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.

    மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 21 பேர் கொண்ட பட்டியலில் 11 பேர் புதுமுகம்.
    • பொன்முடி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 21 பேரில் 11 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வடசென்னை- கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி, வேலூர் கதீர் ஆனந்த், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் போன்ற பிரபலங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, தருமபுரி தொகுதியில் செந்தில், தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் திமுக-வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுமுகம் தேவை என கட்சி விரும்பியதால் தற்போது பழனி மாணிக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட திமுகவினர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை விரும்பவில்லை. அவருக்கு எதிராக கட்சிக்காரர்களிடையே எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.

    தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், அமைப்பு ரீதியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முழுமையாக சட்டமன்ற இடங்களை இழந்த மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. இதனால் தருமபுரியில் கட்சியின் அமைப்புகளை வளர்க்க தவறியதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

    தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    மேலும் சேலம் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன், தென்காசி தொகுதியில் தனுஷ் எம்.குமார், பொள்ளா்சியில் சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், மக்கள்நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம், நாம் தமிழர் வினோதினி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணியளவில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வந்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 4 சுற்று முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம்:-

    பூண்டி கலைவாணன் (தி.மு.க.)-18,891

    ஆர்.ஜீவானந்தம் (அ.தி.மு.க.)-9,892

    எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.)-3166

    அருண் சிதம்பரம் (மக்கள் நீதி மய்யம்):-538

    வினோதினி (நாம் தமிழர்):-1249

    மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    திருவாரூர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
    பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேனி மாவட்டம கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லூரியில் இன்று நடைபெற்றது. பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மயில்வேல், தி.மு.க. சார்பில் சரவணக்குமார், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கதிர்காமு, மக்கள் நீதிமய்யம் சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் ஷோபனா உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவின்படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் உள்ளார்.
    கரூர் :

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன் ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.

    மொத்தமுள்ள 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81 ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் வாக்களித்தனர். இது 84.33 சதவீதம் ஆகும்.

    வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.



    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்று வாக்கு விபரம் வருமாறு:-

    செந்தில்பாலாஜி (தி.மு.க.)-5,102

    செந்தில்நாதன் (அ.தி.மு.க.)-3,911

    சாகுல் அமீது (அ.ம.மு.க.)-347

    செல்வம் (நாம் தமிழர்)-91

    மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)-57

    முதல் சுற்று முடிவின் படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிதாவது:-

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல புதிய தொழிற்சாலைகள் அமையவகை செய்வேன். இதனால் தொழில் வளம் பெருகி பல ஆயிரம் இளைஞர் வேலைவாய்பு கிடைக்கும்.

    தொகுதியில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கபடும். இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் செல்லலாம். மக்கள் நலனயே சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். உங்கள் வாக்குகளை உதயசூரியனுக்கு அளியுங்கள் என பேசினார்.

    அவருடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ரவி, ஊராட்சி கழக செயலாளர் ஜி.கே.விவேகாந்தன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்ட மா. பொ.சி நகர் பகுதியில் பிரசாரம் தொடங்கி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019


    தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்க நல்லூர் பகுதிக்கு உட்பட்ட மா. பொ.சி நகர் பகுதியில் பிரசாரம் தொடங்கி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:-

    “இந்த மண்ணின் மகள் நான், இதே பகுதியில் இருக்கும் நீலாங்கரையில் தான் என் வீடு உள்ளது. நீங்கள் எந்த பிரச்னைக்காகவும் என்னை அணுகலாம், உங்களுக்கு உழைப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், நம் பகுதி பிரச்னை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். குடிநீரும், போக்குவரத்து பிரச்சனை தான் இந்த பகுதியில் பிரதானப்பிரச்சனைகள்.

    இந்த பிரச்னைகளை நிரந்தரமாக தீர்பதற்கான திட்டங்கள் என்னிடம் உள்ளது. என்று பேசினார். நைனார் குப்பம் வந்தபோது உத்தண்டி 4-வது வார்டு முன்னாள் உறுப்பினர் குணசேகர் தலைமையில் வரவேற்றனர்.

    அதே பகுதியில் இதயதுல்லா, மவுலானா, மீரான் மொய்தீன், உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழச்சி தங்கபாண்டியனை வரவேற்று ஆதரவை தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பெருங்குடி ரவி அரவிந் ரமேஷ் எம்.எல்.ஏ, வட்டசெயலாளர் ராஜேந்திரன், பிரதீப், ம.தி.மு.க. கழக குமார் உள்ளிட்டவர்கள் வேட்பாளருடன் வாக்கு கேட்டு சென்றனர். #LokSabhaElections2019

    பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார்.

    45-வது வட்டத்தில் நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கலைஞர் விட்டு சென்ற பணிகளை கடமை தவறாமல் நிறைவேற்ற தயாராக இருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

    பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து அதனை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஆர்.டி.சேகர் உறுதியளித்தார்.

    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் சுதர்சனம், பொறுப்பாளர்கள் வைத்திய லிங்கம், பாலவாக்கம் சோமு, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், பகுதி செயலாளர் ஜெயராமன், வட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் நலனை மட்டுமே சிந்திக்கும் கட்சி திமுக தான். எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நிறை வேற்றி உள்ளோம். அம்பத் தூர் பகுதியில் புதிய ரெயில் முனையம் அமைக்கபடும். அதனால்தொழில் வளம் பெரு கும்.மத்தியில் நிலையான ஆரோக் கியமான ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங் கள் என பேசினார். வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறு வர்கள் கலைஞர், பெரியார் உள்ளிட்ட. தலைவர்கள் வேடம் அணிந்து வரவேற்ற னர். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு பகுதி செயலா ளர் ஜோசப் சாமு வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    மானாமதுரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இலக்கியதாசன் இதுவரை செல்போன் பயன்படுத்தியதில்லை. #DMK #IlakiyaDasan
    மானாமதுரை:

    பாராளுமன்ற தேர்தலுடன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இலக்கியதாசன் போட்டியிடுகிறார். எம்.ஏ., பி.எச்.டி. முடித்துள்ள இவர் இதுவரை செல்போன் பயன்படுத்தியதில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாகத்தான் அவரை தொடர்புகொள்ள முடியும். வெளியில் எங்காவது சென்றால் மனைவியிடம் கூறிவிட்டு செல்வார்.

    தேர்தலில் போட்டியிடுவதால் தற்போது செல்போன் வாங்கியுள்ளார். எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்க வழக்கம் கொண்ட இவர் தற்போது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். #DMK #IlakiyaDasan
    தென்சென்னை தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். #LSPolls #UdhayanidhiStalin #ThamizhachiThangapandian
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்தை, சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனும், எங்கள் குடும்பத்தினருடனும் 3 தலைமுறையாக கொண்டுள்ள நட்பு தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். தி.மு.க. மீது கொள்கை பிடிப்பு கொண்ட ஒரு அழகான வேட்பாளரை உங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தவறிவிடாதீர்கள். விரைவில் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பீர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்று, 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை தி.மு.க.வினருக்கு மட்டும் அல்ல பொதுமக்களிடமும் அந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தி.மு.க. வெற்றியின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கையும், தலைவர் மு.க.ஸ்டாலினும் இருப்பார்கள். வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தி.மு.க. வேட்பாளர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர்களின் கடின உழைப்பு, கட்சி போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை மனதில் கொண்டு தான் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்ற அடைமொழியை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதற்கு தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  #LSPolls #UdhayanidhiStalin #ThamizhachiThangapandian
    தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். #ThiruvarurByelection #MKStalin

    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் அத்தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதில் தி.மு.க. வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். #ThiruvarurByelection #MKStalin

    ×