search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LS Poll"

    • மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது.
    • சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.

    காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.

    • கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை.
    • வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:-

    பிரதமர் மோடி வட இந்தியாவில் இருந்து கவனத்தை தென்இந்தியா மீது திருப்பியுள்ளார். தென் இந்தியாவில் தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏனென்றால் வடஇந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் இடங்களை இழக்கும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த தோல்விகளை சரிகட்ட, அவர்கள் தென்இந்தியாவில் பிரசாரம் செய்கிறார்கள்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.

    நாட்டில் மோடி அலை ஏதும் வீசவில்லை. பா.ஜனதா 200 இடங்ளுக்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும். காங்கிரஸ் இல்லாத இந்தியா என பா.ஜனதா சொல்கிறது. சமீபத்தில் இரட்டை என்ஜின் அரசான பா.ஜனதாவை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்த்தியது. தெலுங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜனதாவின் கனவை தகர்த்தது.

    பிரதமர் மோடி 10 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படும் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.
    • காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்ளை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன்மூலம் இன்றைய காங்கிரஸ் இன்றைய இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதேநிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் விசித்திரமானது. அனைத்து தொகுதிக்கான வேட்பாளர்களை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் துணிச்சலை அந்த கட்சி பெறவில்லை.

    ஸ்திரதன்மையற்ற அல்லது நிலையற்ற என்ற மற்றொரு பெயராகியுள்ளது இந்தியா கூட்டணி. இதனால்தான் அந்த கட்சி சொல்லும் ஒரு விசயத்தை கூட நாட்டு மக்கள் இன்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை இரண்டு சிறுவர்கள் (Two Boys- do ladke) என்ற படம் படுதோல்வி அடைந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது அந்த படம் இவர்களால் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை இரண்டு சிறுவர்கள் என மறைமுகமாக தாக்கினார்.)

    எத்தனை முறை இந்த இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மரப்பானையை தீ மீது வைப்பார்கள் எனத் தெரியவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நகினா (எஸ்சி), மொராபாபாத், ராம்பூர், பிலிபிட் ஆகிய 8 தொதிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.

    2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறையினர் 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
    • குல்பர்கா தொகுதியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறை அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கென சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் பணம், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்களை பறிமுதல் செய்தனர். இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வருமான வரித்துறையினர் மற்றும் எஸ்எஸ்டி 3.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறையினர் 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

    எஸ்எஸ்டி அதிகாரிகள் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள குல்பர்கா தொகுதியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். உடுப்பி-சிக்மங்களூரு தொகுதியில் 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    • கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார்.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க கோரிக்கை.

    கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 24 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளது. கோலார், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், பல்லாரி ஆகிய 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 4 தொகுதிகளிலும் டிக்கெட் பெற பலரும் முயற்சிப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

    குறிப்பாக கோலாரில் உணவுத்துறை மந்திரி கே.எச். முனியப்பா தனது மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு டிக்கெட் வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்டு வருகிறார். இன்னொரு புறம் அங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முன்னாள் எம்.பி. ஹனுமந்தய்யாவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறி வருகிறாா்கள். இதனால் முடிவு எடுக்க முடியாமல் கட்சி மேலிட தலைவர்கள் திணறி வருகிறார்கள்.

    இதற்கிடையே மந்திரி கே.எச். முனியப்பாவின் மருமகனுக்கு கோலார் தொகுதியில் டிக்கெட் வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர், நஞ்சேகவுடா, கொத்தனூர் மஞ்சுநாத், எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில்குமார் ஆகிய 5 பேரும் கடும் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.

    மேலும் பங்காருப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமியும் ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று காலை அறிவித்தனர்.

    மங்களூருவில் உள்ள சபாநாயகர் யு.டி.காதரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தொலைபேசியில் பேசி அனுமதி பெற்றனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து மங்களூரு செல்ல தனி விமானத்தையும் முன்பதிவு செய்தனர். இதனால் விழித்தெழுந்த கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ், அதிருப்தியாளர்களை அழைத்து தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து எம்.எல்.சி.க்கள் நசீர் அகமது, சுனில் குமார் ஆகிய 2 பேரும் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு (சட்டசபை) வந்து மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்தனர். அவர்கள் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை வழங்க முற்பட்டனர். அப்போது மந்திரி பைரதி சுரேஷ் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.

    அவர்களிடம் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தொலைபேசியில் பேசி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து அவர்கள் தங்களின் முடிவை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சபாநாயகர் யு.டி.காதர், தானே பெங்களூருவுக்கு வருவதாகவும், நீங்கள் மங்களூரு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் முன்பதிவு செய்த தனி விமானத்தை ரத்து செய்துவிட்டனர். இதுபற்றி கொத்தனூர் மஞ்சுநாத் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    'கோலார் தொகுதியில் தலித் சமூகத்தில் வலது சாரி பிரிவுக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்று நாங்கள் கூறி வருகிறோம். எக்காரணம் கொண்டும் மந்திரி கே.எச். முனியப்பாவின் குடும்பத்திற்கு வாய்ப்பு அளிக்கவே கூடாது என்று ஏற்கனவே கூறினோம்.

    ஆனால் அதையும் மீறி கட்சி அவரது குடும்பத்திற்கு டிக்கெட் வழங்க முடிவு எடுத்துள்ளதாக அறிந்தோம். வாய்மொழியாக சொன்னால் சரிப்பட்டு வராது. அதனால் நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம். இன்று (நேற்று) பகலில் பெங்களூரு செல்கிறோம். சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்குவோம்'

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், தற்போதைய உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் ஆகியோர், கே.எச்.முனியப்பாவின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கு டிக்கெட் கொடுத்தாலும் அவரை வெற்றியுடன் அழைத்து வருகிறோம் என்று கட்சி மேலிடத்திடம் கூறியுள்ளனர்.

    ஒருவேளை தனது மருமகனுக்கு டிக்கெட் வழங்காவிட்டால், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் சார்ந்துள்ள இடதுசாரி பிரிவு சமூக மக்களிடம் மாநிலம் முழுவதும் பயணம் செய்து நீதி கேட்பேன் என்று கே.எச். முனியப்பாவும் காங்கிரஸ் மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த கோஷ்டி பிரச்சினையால் கோலார் தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் திணறி வருகிறார்கள். கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கும் கோலார் மாவட்ட காங்கிரசாரை முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கோலார் தொகுதிக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஆனால் கோலார் தொகுதியில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோலார் மாவட்ட காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராணீ நரா மூன்று முறை லகிம்புர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஒருமுறை மாநிலங்களவை எம்.பி.யாகவும், மத்திய இணை மந்தியாகவும் இருந்துள்ளார்.

    அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பரத் சந்த்ரா நரா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நயோபொய்சா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த சட்டமன்ற தொகுதி லகிம்புர் மாவட்டத்தில் உள்ளது.

    லகிம்புர் மக்களவை தொகுதியாகவும் உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட அவரது மனைவி ராணீ நராவிற்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என பரத் சந்த்ரா நரா எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் உதய் ஷங்கர் ஹஜாரிகாவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதனால் விரக்தியடைந்த பரத் நரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பரத் சந்த்ரா நராவின் மனைவி ராணீ நரா மத்திய இணை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் ஐந்து முறை தகுவாகானா தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ளார். கடந்த 2021-ல் 6-வது முறையாக நயோபொய்சா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன் ஆசாம் கன பரிசத் கட்யில் இருந்தார்.

    இவருடைய மனைவி ராணீ நரா மூன்று முறை லகிம்புர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலங்களை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

    • ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.
    • இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாநில தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெள்ள பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் கலந்துரையாட உள்ளோம். இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய தேர்தல் குழு தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு இன்று இரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.

    இதேபோல, பிரதமர் மோடி கலந்துகொண்ட மாநாட்டில் ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு பா.ஜனதா தலைவர்கள் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். எனவே, திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் உறுதுணையாக இருக்கிறார்களா? என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    இதேபோல, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாசை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்கிறார்கள். இதற்கு அவர்களும் பதில் சொல்ல வேண்டும்.

    ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்வார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். 400 இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார். ஒருவேளை தமிழகத்தில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் 'இந்தியா' கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

    1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

    3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

    5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.

    6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

    7. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    8. தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

    9. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

    10. குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    11. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.

    12. மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    13. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    14. மத்திய திட்டக் குழுவைப்போல, மத்திய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.

    15. வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

    16. கண்காணிப்பு அமைப்புகளின் நியமனங்கள் ஒரு நியமனக் குழுவால் நியமிக்கப்படுவர். இக்குழுவில் 50 சதவிகித உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    17. அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டு, தரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.

    18. அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களையெடுக்க நிதியுதவி செய்ய மத்திய அளவில் நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

    20. இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.

    21. இந்தியாவில் உள்ள முக்கிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் வர வசதியாக அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    22. இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

    23. மேல் வரியை (CESS) மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் பரிந்துரைக்கப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

    24. பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

    25. இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்.

    26. கச்சத்தீவு மீட்பு: கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

    27. இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். மேலும், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    28. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

    29. இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை நிலைநாட்டப்பட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும்.

    30. யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.

    31. இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

    32 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

    33. மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.

    34. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 முற்றிலும் அகற்றப்படும்.

    35. நிதிக்குழுவின் அமைப்பு, ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

    36. FRBM Act - நிதியியல் பொறுப்பு -வரவு செலவு மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய நிபந்தனைகளை நிராகரிக்க வழிவகை செய்யப்படும்.

    37. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

    38. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.

    39. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்/இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாடு, மொழி அறிவு, உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வழிகாட்டல் ஆகியவற்றை மத்திய அரசே அளிக்கும். நாடு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கடனுதவிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    40. MSME-க்கான வருமான வரிச் சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.

    41. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.

    42. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் பங்குகளை விலக்கிக் கொள்வது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    43. மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

    44. தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்.

    45. அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்.

    46. தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    47. பெட்ரோல் ரூபாய் 75 க்கும் - டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும்.

    • 21 பேர் கொண்ட பட்டியலில் 11 பேர் புதுமுகம்.
    • பொன்முடி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 21 பேரில் 11 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வடசென்னை- கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி, வேலூர் கதீர் ஆனந்த், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் போன்ற பிரபலங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, தருமபுரி தொகுதியில் செந்தில், தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் திமுக-வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுமுகம் தேவை என கட்சி விரும்பியதால் தற்போது பழனி மாணிக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட திமுகவினர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை விரும்பவில்லை. அவருக்கு எதிராக கட்சிக்காரர்களிடையே எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.

    தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், அமைப்பு ரீதியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முழுமையாக சட்டமன்ற இடங்களை இழந்த மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. இதனால் தருமபுரியில் கட்சியின் அமைப்புகளை வளர்க்க தவறியதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

    தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    மேலும் சேலம் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன், தென்காசி தொகுதியில் தனுஷ் எம்.குமார், பொள்ளா்சியில் சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MaduraiConstituency #LSPoll #CEO
    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று கூறி, தேர்தலை ஒத்திவைக்கும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.



    மதுரையில் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #MaduraiConstituency #LSPoll #CEO
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

    இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையடுத்து, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாமக கொடுத்துள்ளது. #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது 7 மக்களவைத்  எம்.பி. தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தையும் அதிமுக ஒதுக்கி கொடுத்துள்ளது.

    முன்னதாக பா.ம.க. கேட்ட சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இதையடுத்து பா.ம.க. தலைவர்களில் சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். ஆனால், தொகுதிகள் விஷயத்திலும், திமுக விதித்த நிபந்தனைகளாலும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் பாமக தயக்கம் காட்டிவந்தது.

    இதை அறிந்த அ.தி.மு.க-பா.ஜனதா தலைவர்கள் உடனே பா.ம.க.வை கூட்டணிக்குள் இழுக்கும் பணிகளை தொடங்கினர்.

    “நீங்கள் கேட்கும் தொகுதிகளை தருகிறோம். செலவையும் பார்த்துக் கொள்கிறோம்” என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இன்று பா.ம.க. ஐக்கியமாகி உள்ளது.



    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை எம்.பி. இடம் மற்றும் 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலையும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. தலைவர்கள் கொடுத்தனர். அதில் பா.ம.க. மொத்தம் 8 தொகுதிகளை குறிப்பிட்டுள்ளது. அந்த 8 தொகுதிகள் விவரம் வருமாறு:-

    1. ஸ்ரீபெரும்புதூர்

    2. மத்திய சென்னை

    3. கடலூர்

    4. அரக்கோணம்

    5. கள்ளக்குறிச்சி

    6. விழுப்புரம்

    7. திருவள்ளூர்

    8. காஞ்சீபுரம்

    இந்த 8 தொகுதிகளில் இருந்து 7 தொகுதிகளை ஒதுக்கி தர பா.ம.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள அ.தி.மு.க. அந்த 7 தொகுதிகளில் ஒரு தனி தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதை பா.ம.க. ஏற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இன்னும் ஓரிரு தினங்களில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது தெரிந்து விடும். #LSPolls #ADMK #PMKConstituencies
    ×