search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக-வின் 47 தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எப்படி சாத்தியம்?
    X

    திமுக-வின் "47" தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எப்படி சாத்தியம்?

    • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் 'இந்தியா' கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

    1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

    3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

    5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.

    6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

    7. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    8. தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

    9. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

    10. குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    11. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.

    12. மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    13. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    14. மத்திய திட்டக் குழுவைப்போல, மத்திய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.

    15. வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

    16. கண்காணிப்பு அமைப்புகளின் நியமனங்கள் ஒரு நியமனக் குழுவால் நியமிக்கப்படுவர். இக்குழுவில் 50 சதவிகித உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    17. அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டு, தரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.

    18. அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களையெடுக்க நிதியுதவி செய்ய மத்திய அளவில் நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

    20. இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.

    21. இந்தியாவில் உள்ள முக்கிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் வர வசதியாக அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    22. இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

    23. மேல் வரியை (CESS) மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் பரிந்துரைக்கப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

    24. பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

    25. இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்.

    26. கச்சத்தீவு மீட்பு: கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

    27. இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். மேலும், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    28. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

    29. இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை நிலைநாட்டப்பட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும்.

    30. யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.

    31. இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

    32 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

    33. மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.

    34. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 முற்றிலும் அகற்றப்படும்.

    35. நிதிக்குழுவின் அமைப்பு, ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

    36. FRBM Act - நிதியியல் பொறுப்பு -வரவு செலவு மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய நிபந்தனைகளை நிராகரிக்க வழிவகை செய்யப்படும்.

    37. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

    38. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.

    39. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்/இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாடு, மொழி அறிவு, உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வழிகாட்டல் ஆகியவற்றை மத்திய அரசே அளிக்கும். நாடு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கடனுதவிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    40. MSME-க்கான வருமான வரிச் சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.

    41. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.

    42. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் பங்குகளை விலக்கிக் கொள்வது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    43. மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

    44. தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்.

    45. அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்.

    46. தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    47. பெட்ரோல் ரூபாய் 75 க்கும் - டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும்.

    Next Story
    ×