search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவேன் - திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உறுதி
    X

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவேன் - திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உறுதி

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிதாவது:-

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல புதிய தொழிற்சாலைகள் அமையவகை செய்வேன். இதனால் தொழில் வளம் பெருகி பல ஆயிரம் இளைஞர் வேலைவாய்பு கிடைக்கும்.

    தொகுதியில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கபடும். இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் செல்லலாம். மக்கள் நலனயே சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். உங்கள் வாக்குகளை உதயசூரியனுக்கு அளியுங்கள் என பேசினார்.

    அவருடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ரவி, ஊராட்சி கழக செயலாளர் ஜி.கே.விவேகாந்தன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர்.

    Next Story
    ×