search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Candidate"

    • அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் சிம்லா முத்துச்சோழன்.

    மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தனது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில், நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், நெல்ல தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு அதிமுக அறிவித்துள்ளது.

    அதன்படி, சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளரான ஜான்சிராணி வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

    ஜான்சிராணி தற்போது திசையான்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.

    திமுக வில் இருந்து அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் வேட்பாளராக சிம்லா அறிவிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டவர்.

    ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட சிம்லா முத்துசோழன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
    • வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. முதல் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

    இதில் 16 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சிய 16 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சிம்லா முத்துசோழன் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் 32 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற பெயரை சிம்லா முத்துசோழன் பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். வக்கீலான சிம்லா முத்துசோழன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார். சற்குண பாண்டியன் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    சிம்லா முத்துசோழன் 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வேட்பாளர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதாடினார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, அவரது கல்வி நிறுவனம் மற்றும் திமுக பிரமுகர் சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காண்பிக்கப்பட்டதாக கூறியுள்ள கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைப்பதற்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக குற்றம்சாட்டினார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.



    இந்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்படுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடினார். ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    ஆர்.எஸ்.ராஜேசை ஆதரித்து என்.எம்.பாஸ்கரன் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    பெரம்பூர்:

    பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து 36-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில் 36-வது வட்ட கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    36-வது கிழக்கு வட்ட பொறுப்பாளர் என்.எம்.பாஸ்கரன் தலைமையில், பொறுப்பாளர்கள் அசாம்பாக்கியம், செந்தாமரைக் கண்ணன், தேவி, ஆனந்தன், ஜோசப், பிரகாஷ், மூர்த்தி,மேரி ராஜகுமாரி, செல்வராஜ், குண சேகர், மீனா, ரவிசங்கரன், பிச்சா பதி, செல்வராஜ், பாலமுருகன், நெல்சன், அன்னக்கிளி, உதயராஜ், பாபுராவ், ராமய்யா, மங்களம், ஜான்பாஸ்கோ, சேட்டு,சுரேஷ், ஸ்ரீநாத்ராஜ், விஜயன், நாகராஜ், வசந்தி, சந்தோஷ்பாபு, தாமோதரன், செல்வி, முத்துசிவா, கார்மேகம், ரோசி, ஜெயக்குமார், தாமோதரன், ராஜி, பால்ச்சாமி, இருதயராஜ், சண்முகம், ஆறுமுகம், முனிரத்தினம், மோகன், கனகசபை, கோட்டீஸ்வரன், மனோகரன், கஜேந்திரன், பிரேம் குமார், மணிவண்ணன், சுரேஷ், திருநாவுக்கரசு மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது அவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன். மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்க பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மேற்குமாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ம.க. தே.மு.தி.க., பா.ஜ.க, த.மா.கா. புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர்.  #LokSabhaElections2019

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முட்டுக்காடு, தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து மேள தாளத்துடன் ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

    வேட்பாளர்கள் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களித்து நாங்கள் வெற்றிபெற்றால் இப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களையும் சென்றடைய பாடுபடுவோம் மேலும் தங்கள் பகுதி குறைகளை நேரிடையாக சந்தித்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    தையூரில் ஜேபி எந்திரம் மூலம் மலர்தூவி வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம், பா.ம.க. ஏகாம்பரம், வாசு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், மாவட்ட துணைசெயலாளர் எஷ்வந்த்ராவ், மாவட்ட அம்மாபேரவை ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வர்த்தக பிரிவு ராகவன், திருப்போரூர் ஒன்றியசெயலாளர் தையூர் குமரவேல், நாவலூர் ரகு, முட்டுக்காடு பாஸ்கரன், கேளம்பாக்கம் வினோத்கண்ணன், தையூர் ராஜா, த.மா.கா கோவிந்தராஜ், பிஜேபி கோதண்டன், புரட்சி பாரதம் சிவலிங்கம்;, தே.மு.தி.க. ஒன்றியசெயலாளர் கோபிநாத், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று இப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து, டி.டி.மோகன், பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK

    பூந்தமல்லி ஓன்றியம் காட்டுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ஓன்றியம் காட்டுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் க.வைதியநாதன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அவருடன் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சி.ஒய்.ஜாவித் அகமத், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன், வயலை நடராஜன் ஊராட்சி கழக செயலாளர் கே.ஜி.டி.கெளதமன், மணவாளன், கோவிந்தராஜ் , சிகாமணி, சுதாகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    டாக்டர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக அமைச்சர் பா.பென்ஜமின் வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

    மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அவர் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.

    படித்தவரை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் தான் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய மக்களின் மனநிலையை அறியக் கூடிய மருத்துவராக வைத்திலிங்கம் இருப்பதால் அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஆதரவு திரட்டினார்.

    அமைச்சர் பா.பென்ஜமினுடன் திருவள்ளூர் மாவட்ட அவை தலைவர் கா.சு. ஜனார்த்தனம், வட்ட செயலாளர் கந்தன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கே.என். சேகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் அ.தி.முக.. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019

    காஞ்சி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019

    சென்னை:

    மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் காஞ்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

    அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சத்தில் குடிநீர் வசதி, மழைநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படும்.

    ஒரே கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ. இருந்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்ற வசதியாக இருக்கும். எனவே உதய சூரியன் சின்னத்தை மறவாதீர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கூடு வாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பஜாரில் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார்.

    பிரசாரத்தின் போது எம்.கே.தண்டபாணி, கே.பி.ராஜன், ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
    #LokSabhaElections2019

    மதுராந்தகம், அச்சரபாக்கத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரித்தார்.

    திருப்போரூர்:

    காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மற்றும் கருங்குழி பேரூராட்சி, அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்களின் முக்கிய அடிப்படைத்தேவைகளை மீண்டும் வெற்றிபெற்றால் செய்து தருவதாக உறுதியளித்து வாக்குகள் சேகரித்தார்.

    மதுராந்தகம் பகுதியில் எம்.ஜி.ஆர் வேடமணிந்த தொண்டருடன் வேட்பாளர் மரகதம்குமரவேல் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஒன்றிய செயலாளர் அப்பா துரை, நகரசெயலாளர் ரவி, கருங்குழி பழனி, மஞ்சுளா புருஷோத்தமன், அச்சரபாக்கம் மெய்யப்பன், சுப்பிரமணி, முருகதாஸ், பா.ம.க மாநில துணைசெயலாளர் பொன். கங்காதரன், மாவட்ட செயலாளர் கோபால கண்ணன், தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ.க நிர்வாகிகள் செந்தமிழரசு, தயாளன், ருத்திரகோட்டி, பாலாஜி, த.மா.கா. ஆதிகேசவலு, பழனி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணியினர் சென்று ஆதரவு திரட்டினர்.

    ×