search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ward"

    • கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 6,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    கோவை மட்டுமின்றி கேரளா, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இங்கு தனியார் மருத்துவனைகளுக்கு இணையான அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகள் போல் நோயாளிகளிடம் கட்டணம் அடிப்படையில் சிகிச்சை அளிக்க "பே வார்டு" திட்டத்ைத ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்த திட்டம் ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து அங்கு 26 படுக்கை வசதியுடன் கூடிய கட்டண சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனையின் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் 15 படுக்கை வசதியுடனும், மகப்பேறு பிரிவில் 11 படுக்கை வசதியுடனும் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார்டில் உள்ள தனி அறையில் கழிப்பிட வசதி, இருக்கை வசதி, டி.வி. உள்ளிட்டவை தனியார் மருத்துவனைகளில் இருப்பது போன்றே இருக்கும். தவிர, இரண்டு பேர் தங்கும் வகையில் டுவின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டுவின் அறையில் கழிப்பிடம் மட்டும் ஒன்றுதான் இருக்கும்.

    ஆனால் உடை மாற்றும் வசதிகள் ஆகியவை தனித்தனியாக இருக்கும். இந்த பொது சிகிச்சை வார்டில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக கட்டண சிகிச்சை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டின் பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் விரைவில் கட்டண சிகிச்சை வார்டினை தொடங்கி வைக்க உள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

    • தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    :தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கி தியாக துருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வார்டு செயலாளர்களிடம் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இதில் நகர பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது.
    • கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார். அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, துணை செயலாளர்கவுரி அன்பழகன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலசந்தர், பார்த்திபன், மதி, ராஜா, பாலமுருகன்மற்றும் தி.மு.க. நகர மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட தி.மு.க. வினர் பலர்கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
    • கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    மதுரை

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடந்தது.

    நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களை எப்படி அணுக வேண்டும்? நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, சிகிச்சைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டது.

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முழுக்கவசம் ஆகியவற்றின் இருப்பு நிலவரம் குறித்து டீன் ரத்னவேல், மருத்துவக் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டீன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது ஜீரோ நிலையில் உள்ளது.

    கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.
    • 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று முதன் முறையாக நகரம், மாநகரம், பேரூராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது.

    இந்த நிலையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.

    பகுதி சபா கூட்டம் குறித்து மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகரங்களிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி குறுகிய காலத்தில் தஞ்சை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

    இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துரிதமாக பணி மேற்கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் அவசர கூட்டம் பழைய நகராட்சி அலுவலகம் படேல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட அரசிதழில் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 48 வார்டுகளில் உருவாக்க ப்பட்ட 192 வார்டு பகுதிகளுக்கு அரசாணையில் தெரிவித்துள்ளபடி வார்டு குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாரிக்க அனுமதிக்க ப்பட்டுள்ளது என்ற தீர்மானம் வாசிக்கப்ப ட்டது.

    அப்போது குறுக்கிட்ட 19 மற்றும் 33-வது வார்டு அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஆதிலட்சுமி, கவுசல்யா ஆகியோர் தங்களது வார்டில், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியல் வழங்கியுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

    ஆனால் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி மேயர், துணைமேயர் எழுந்து சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி, கவுசல்யா தங்களுக்கு உரிய விளக்கத்தை மாநகராட்சி மன்றம் தெரிவிக்காததாலும், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிடக்கோரியும் கூட்டம் நடைபெற்ற படேல் அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த 19,33-வது வார்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரிடம் வார்டு குழு பட்டியல் விவரத்தை கேட்டறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 48 வார்டுகளில் உள்ள 192 வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை நாளை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடு த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்தது.
    • 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் 24 வார்டுகளில் பகுதி சபா குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜ கணேஷ் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் ஒரு வார்டுக்கு அந்தப் பகுதியில் உள்ள கவுன்சிலர் தலைமையில் நகராட்சி அலுவலர் ஒருவர் வார்டு பகுதி சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கொண்ட குழு அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை அறிந்து நகர மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஜூன் முதல் கண்டறியப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 6 பேர் உள்பட 78 பேர் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரியபட்டினம் அருகே கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டவர்களை ஏற்றி வந்த 40 வயது ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று முதன் முதலாக மீண்டும் திறக்கப்பட்ட 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இங்கு 2 டாக்டர்கள், நர்சுகள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    இதனை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தொற்று அதிகரித்து விடும். இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    ×