என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீநகரில் 14.1 சதவீதமே ஓட்டு பதிவானது
Byமாலை மலர்19 April 2019 10:07 AM GMT (Updated: 19 April 2019 11:26 AM GMT)
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
2-வது கட்டமாக ஸ்ரீநகர், உத்தம்பூர் ஆகிய 2 தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காஷ்மீர் மக்கள் ஓட்டு போடுவதை விரும்பவில்லை. ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீதமே ஓட்டு பதிவாகி இருந்தது.
95 தொகுதிகளுக்கு நேற்று 2-வது கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. தலைநகர் ஸ்ரீநகரில் இவ்வளவு மோசமாக ஓட்டுப்பதிவாகி இருந்தது.
ஆனால் உத்தம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.
காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 45.7 (இரண்டு தொகுதி யிலும் சேர்த்து) ஓட்டுப்பதி வானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநிலம் ஐல்பைகுரி தொகுதி யில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத ஓட்டுப்பதிவானது. #LokSabhaElections2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X