search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் - காலையிலேயே வாக்களித்த தலைவர்கள்
    X

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் - காலையிலேயே வாக்களித்த தலைவர்கள்

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்றும், மற்ற தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

    தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன்  காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார்.




    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #TNElections2019

    Next Story
    ×