search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAF pilot"

    இந்திய விமானப்படையின் போர் விமான வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Abhinandan #IAFPilot
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் போர் விமானியான சென்னை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தனது விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதால் விமானத்தில் இருந்து வெளியேறி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் கடந்த 1-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.

    அவர் நாடு திரும்பியதும் டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவ சோதனைகள், ராணுவ விளக்க நடவடிக்கைகளுக்கு பின்னர் 12 நாட்களுக்கு முன்பு 4 வாரங்கள் விடுமுறையில் வீட்டுக்கு செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மருத்துவ குழு உடல் தகுதி பரிசோதனை நடத்தியது. பின்னர் தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Abhinandhan #Youtube
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதலின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்தது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் காயங்களிடன் தோற்றம் அளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இந்த வீடியோ உலகம் முழுவதிலும் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வைரலாக பரவியது.
     
    அபினந்தன் காயமடைந்த வீடியோ காட்சியை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், பாகிஸ்தான் கைது செய்துள்ள அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Abhinandhan #Youtube
    பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது. #Indiademands #immediateandsafereturn #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது. 

    மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை இன்று மாலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக் கூடாது. அவர் விரைவில் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. #Indiademands #immediateandsafereturn #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
    குஜராத் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் வெடித்து சிதறியதில் விமானி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jaguarcrash #Sanjaychauhan
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் ஜம்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி முகாம் உள்ளது. இந்நிலையில், இன்று காலை விமானப்படை வீரர் சஞ்சய் சவுகான் வழக்கமான பயிற்சி ஈடுபட்டிருந்தார். விமானம் பரிஜா கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த ஜாகுவார் போர் ஜெட் விமானம் சுமார் 10.30 மணியளவில் வெடித்து சிதறியது. விமானத்தின் பாகங்கள் கிராமத்தின் பல இடங்களில் சிதறி விழுந்தன.


    விபத்தில் படுகாயமடைந்த விமானி சஞ்சய் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார். விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.  #Jaguarcrash #Sanjaychauhan

    ×