என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்தில் ரூ.100 கோடி அமெரிக்க போதைப் பொருள் பறிமுதல்
    X

    ஐதராபாத்தில் ரூ.100 கோடி அமெரிக்க போதைப் பொருள் பறிமுதல்

    • போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா நகரங்களில் தயாரிக்கப்படும் ஓஜி குஷ் என்ற விலை உயர்ந்த போதை பொருட்களை கடத்தி வந்து ஐதராபாத்தில் விற்பனை செய்வதாக நம் பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தெலுங்கானாவின் சிறப்பு படை போலீசார் மற்றும் கலால் துறை போலீசார் நேற்று விமான நிலையம் அருகே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.

    காரில் கஞ்சா போதை மாத்திரைகள், வெளிநாட்டு போதைப் பொருட்கள், வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×