search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union ministry"

    • ஆம்ஆத்மி மந்திரிகளான கோபால் ராய், கைலாஷ் கெலாட், உள்ளிட்டோருக்கு இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • துணை நிலை கவர்னர் அழைத்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    திகார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இதுவரை அவர் பதவி விலகவில்லை.

    இதற்கிடையே டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா நீர், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனம் போன்ற துறைகளின் கூட்டத்தை கூட்டினார்.

    ஆம் ஆத்மி மந்திரிகளான கோபால் ராய், கைலாஷ் கெலாட், அதிஷி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் துணை நிலை கவர்னர் அழைத்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    • பத்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் டீசலால் இயங்கும் மாநகர பேருந்துகளை குறைக்கவும் பரிந்துரைத்து உள்ளனர்.
    • அதிகரித்து வரும் எத்தனால் கலந்த எரிபொருளுக்கான கொள்கைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுடெல்லி:

    காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய எண்ணெய் அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக அளித்துள்ளது.

    அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை இந்தியா 2027-ம் ஆண்டிற்குள் தடை செய்ய வேண்டும். மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2035-ம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் 3 சக்கர வண்டிகளை படிப்படியாக நிறுத்தவும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பத்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் டீசலால் இயங்கும் மாநகர பேருந்துகளை குறைக்கவும் பரிந்துரைத்து உள்ளனர்.

    அதேபோல் 2035-ம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரத்துடன் கூடிய 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை படிப்படியாக வெளியேற்றுவதற்கு உகந்த தீர்வாக, இடைப்பட்ட காலத்தில், அதிகரித்து வரும் எத்தனால் கலந்த எரிபொருளுக்கான கொள்கைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    பயணிகள் கார்கள் மற்றும் டாக்சிகள் உட்பட 4 சக்கர வாகனங்கள், ஒவ்வொரு வகையிலும் கிட்டத்தட்ட 50 சதவீத பங்கைக் கொண்ட பகுதியளவு மின்சாரத்திற்கும், பகுதி எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் மாற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பெட்ரோலால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை படிப்படியாக நிறுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை மார்ச் 31-ந்தேதிக்கு அப்பால் அரசாங்கம் "இலக்கு நீட்டிப்பு" செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    2024-க்குள் சரக்குகளை கையாள்வதற்கு ரெயில்வே மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் டிரக்குகளை அதிக அளவில் பயன்படுத்தவும் பரிந்துரை செய் துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. ஆனால் அதை நோக்கிய பயணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து மே 23ல் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கிறார். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    கருத்து கணிப்பை கருத்து திணிப்பு என கூறுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் மனநிலையை பொருத்தது என தெரிவித்தார்.



    மேலும், தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓபிஎஸ் கூறினார். 
    ×